வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, April 10, 2009

சிற்றிதழ் விமர்சனங்கள்

‘எனது கீதை’ நூலை பற்றி சிற்றிதழ் விமர்சனங்கள்

வாழ்க்கையின் யதார்த்த உண்மைகளை எடுத்துச் சொல்கிறார் குகன். 'நான் என்ன கலியுக கண்ணனா உபதேசம் செய்ய ?' என அவரது உரையில் கூறிவிட்டு 25 தலைப்புகளில் உபதேசக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

கவியரசரி கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்' நூலின் தாக்கம் சற்று அதிகமுள்ள இவரது நூல் பல நல்ல தத்துவங்களையும், தன்னம்பிக்கையையும் தருகிறது. சிறிய வயதில் பெரிய விஷயங்களைத் தொட்டிருக்கும் இவரது வரிகள் சிந்திக்க தூண்டுபவை.

- ‘இலக்கியப்பீடம்' மாத இதழ் , ஆகஸ்ட்,2007


'தன்னை மறந்த இறைவன் மனிதன்' என்பார் ஒரு அறிஞர். தன்னுள்ளே எல்லாவற்றையும் வைத்துக் கொண்டுருக்கிற மனிதன் தன்னைத் தொலைத்து விட்டுத் தேடிக் கொண்டுருக்கிறான். எல்லா வாழ்வியல் நூல்களும் தன்னையறிதனாலேயே தலையாய நோக்காக, பொருளாக எடுத்துக் கொள்ளும். இதே வழியிலும், மரபிலும் நண்பர் குகனும் இந்நூலில் வாழ்வியல் தொடர்பாகப் பல கருத்துகளைத் தொகுத்துத் திரட்டித் தந்துள்ளார். எளிமை, இனிய உவமை சுமந்து வருகிற சம்பவங்கள் என்று நூல் சுவையாக சிறப்பாக அமைந்துள்ளது. மனித நேயம், நட்பு, காதல், குடும்பம், ஆன்மிகம் என்று மனிதம் தொடர்பான செய்திகள் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன. படித்தும், பரிசளித்தும் இன்புறலாம். நூலின் நிறைவுப் பகுதியில் "உலகம் எனக்கு எதைக் கற்று தந்திருக்கிறதோ அதை நூலாக எழுதியிருக்கிறேன்" என அடக்கமாக குகன் தெரிவித்திருந்தாலும் கற்றதைவிடக் கற்க தருகிற திறனுக்காக அவரைப் பாராட்டி மகிழலாம்.

-‘கவிதை உறவு’ மாத இதழ், ஆகஸ்ட், 2006

என் புத்தகத்தையும் மதித்து விமர்சனம் எழுதியிருக்கிறார்கள். இப்போது தான் இதை பதிவில் ஏற்ற தோன்றியது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails