வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, April 3, 2009

ஜோ(கே)டி பொருத்தம்

இன்று எல்லா தொலைக்காட்சியிலும் பொதுவான நிகழ்ச்சிகள் தான் ஒளிப்பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமான நிகழ்ச்சி 'ஜோடி பொருத்தம்'. 'நீ பாதி நான் பாதி', 'அன்பே அருயிரே' என்று பல தலைப்புகள் வைத்தாலும் நிகழ்ச்சி ஒன்று தான். இதோ என் கற்பனையில் ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி.....

தொகுப்பாளர் : ஜோடி பொருத்தம் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதற்கு மகிழ்ச்சி. உங்க பேரு ஸார் ???
ஆண் : சம்பத்

தொகுப்பாளர் : நீங்க என்னவா இருக்கீங்க...
சம்பத் : சாப்ட்வேர் இன்ஜினியரா இருக்கேன்....

தொகுப்பாளர் : ஓ... நல்ல சம்பளம் உள்ள வேலனு சொல்லுங்க....
சம்பத் : ( வயத்தெறிச்சல கொட்டிக்காத... வேலைய விட்டு தூக்கி வீட்டுல தாண்டா இருக்கேன்...) அவ்வளவு அதிகமான சம்பளம் கிடையாது. ஏதோ குடும்ப நடத்துற அளவுக்கு...

தொகுப்பாளர் : சரி.... உங்க பெரு மேடம்...?
பெண் : ராணி...

தொகுப்பாளர் : எந்த ஊருக்கு ராணி...??
ராணி : ( இந்த மொக்கை ஜோக்க சின்ன வயசுல இருந்து கேட்டுயிருக்கேன். இதுக்கு பக்கத்துல இருக்குற என் புருஷன் வேற சிரிக்கிறான் பாரு...) ஈஈஈ.... என் வீட்டுக்கு நா தான் ராணி...

தொகுப்பாளர் : சரி... போட்டிக்கு நாம போவோம்..
சம்பத் : ( அப்பாடா... பேசி முடிச்சிட்டான்...)

தொகுப்பாளர் : போட்டிக்கு போறத்துக்கு முன்னாடி உங்க கிட்ட ஒரு சின்ன கேள்வி...?
சம்பத் : ( மறுபடியும் ஆரம்பிச்சிட்டானே...) கேளுங்க...!

தொகுப்பாளர் : இந்த போட்டியில நீங்க ஜெய்ச்சு ஒரு லட்ச ரூபா வந்தா என்ன பண்ணுவீங்க...
சம்பத் : ( ஒரு டீ கட போட வேண்டியது தான். ஒரு ஆபிஸ்ல வேலை செய்யுறத விட முதலாளியா இருக்கலாம் ) என் பொண்ணாட்டிக்கிட்ட கொடுத்திடுவேன்.

தொகுப்பாளர் : அவ்வளவு பணத்தையுமா....
சம்பத் : ( ஆமான்டா...என்ன பார்த்தா ஏமாந்தவன் மாதிரி தெரியுதா.... ஒரு பொய் சொன்னவுடனே என் பொண்ணாட்டி எப்படி சிரிக்குறா பாரு ) ஆமாங்க...

தொகுப்பாளர் : மேடம் நீங்க அந்த பணத்துல என்ன பண்ணுவீங்க....
ராணி : ( நான் ஒரு பட்டு புடவை, நெகலஸ் வாங்குவேன்...) அவருக்கிட்ட கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டேன்...

தொகுப்பாளர் : (What a ideal couple !) சரி போட்டிக்கு போவம்... ஜோடி பொருத்தம்......

பின்னனி இசை ஒலிக்கிறது.

முதல் சுற்று

தொகுப்பாளர் : இந்த சுற்றுல... மனைவிமார்கள் கேசரி சமைப்பாங்க... கணவன்மார்கள் சாப்பிட்டு அவங்க மனைவி சமைச்சத கண்டு பிடிக்கனும்..சமைக்கிறதுக்கு பத்து நிமிஷம் தான் டைம்... ஸ்டார்ட்...

பத்து நிமிடத்திற்கு பிறகு...

இப்போ ஒவ்வொருத்தாரா வந்து கேசரி சுவைத்து பார்த்தனர். இப்போது சம்பத் முறை...

சம்பத் : இது தான் என் மனைவி சமைச்சது...

தொகுப்பாளர் : கிரேட்.... எப்படி சாப்பிடாம... பார்த்துமே கண்டு பிடிச்சிட்டீங்க...

சம்பத் : அவ சமையலுக்கு தனி ஸ்டைல் இருக்கு..அது எந்த பெண்ணுக்கும் வராது.. (நம்ப எத சமைக்க சொன்னோமோ.. அத சமைக்க மாட்டா... ரவா கேசரி பதிலா... ரவா உப்புமா செஞ்சிருக்கா... இத சாப்பிட்டு வேற சொல்லனுமா...)

தொகுப்பாளர் : அடுத்த சுற்று... கேள்வி - பதில் சுற்று. கணவன் - மனைவி இரண்டு பேர் கிட்டையும் தனி தனியா கேள்வி கேட்க போறேன்.

தொகுப்பாளர் : மிஸ்டர் சம்பத்… உங்க மனைவி கிட்ட தனியா சில கேள்விகள் கேட்கனும். நீங்க அந்த ரூமுக்கு போங்க...

கணவன் : ( அடி செருப்பால.. என் மனைவிகிட்ட தனியா உனக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு) சரி ஸார்....

----

தொகுப்பாளர் : உங்க கணவன் கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன...?

ராணி: ரொம்ப நேர்மையான மனிஷன். நாலு பேர் கிட்ட கையேந்தி நிக்க மாட்டாரு ... ( அப்படி வாங்கியிருந்தா... பீரோ முழுக்க நகை வாங்கி போட்டிருபேனே... என் தலை எழுத்து, பொழைக்க தெரியாத ஆள் கிட்ட வாக்க பட்டுடேன்.)

தொகுப்பாளர் : உங்க கணவன் எப்போ எல்லாம் கோப படுவாரு..?

ராணி : அவருக்கு என் மேல் கோபமே வராது. ( வெட்க கெட்ட மனுஷன். எவ்வளவு திட்டினாலும் சொரனையில்லாம அப்படி நிக்கும்)

--

தொகுப்பாளர் : உங்க மனைவிக்கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன....?

சம்பத் : அவங்களோட சமையல் தான். சாதரனமா செய்யுற டிபன் கூட ரொம்ப வித்தியாசமா செய்வா...( சப்பாத்திய பூரி மாதிரி... இட்லி சைஸ்ல தோசனு ரொம்ப வித்தியாசமா பண்ணுவா..!)

தொகுப்பாளர் : உங்க மனைவி கோபப்படும் போது என்ன பண்ணுவாங்க...

சம்பத் : எதுவும் பேச மாட்டா... (நேரா கரண்டியால அடிக்க வருவா..)
தொகுப்பாளர் : இப்போ அடுத்த சுற்று... ஒவ்வொரு தம்பதியர்களுக்கும் இரண்டு நிமிஷம் தருவோம். இதுல கணவன் - மனைவி இரண்டு பேரும் சண்டை போட்டுட்டு, சேர்ந்திடனும். நாங்க ஏத்துக்குற மாதிரி காரணத்த வச்சி சண்ட போட்டு சேர்ந்த உங்களுக்கு 29'' டி.வி. பம்பர் பரிசும் உண்டு....

சம்பத், ராணி இருவரும் மெதுவாக பேசிக் கொள்கிறார்கள்.

ராணி : டி.வி ஷோவுல உங்கள திட்ட விரும்பல... முதல் ஒரு நிமிஷத்துக்கு என்ன திட்டுங்க... அடுத்த இரண்டாவது நிமிஷத்துல உங்கள சமாதானப்படுத்துற மாதிரி பேசுறேன். சைலண்ட் ஆயிடனும்... புரிஞ்சதா...

சம்பத் : சரிம்மா....

ராணி : எப்படியாவது 29'' டி.வி நாம தான் ஜெய்க்கனும்.

சம்பத் : ….. (முதல் தடவையா உன்ன திட்ட வாய்ப்பு கிடைச்சிருக்கு... விடுவேனா...)

தொகுப்பாளர் : முதல்ல.... சம்பத் - ராணி தம்பதியர்கள் சண்ட போட போறாங்க...

சம்பத் : ஏய்... ராணி ! காபி எங்க... ஆபிஸ்ல இருந்து வந்தவுடனே காபி கொடுக்க தெரியாதா...

ராணி : சாரிங்க.. உள்ள கொஞ்சம் வேலையா இருந்தேன்.

சம்பத் : ஏன்டி பொய் சொல்லுற... முண்டம்...

ராணி ; ... (எவ்வளவு தைரியம் இருந்தா... என்ன 'டி' போட்டு கூப்பிடுவ... டி.விக்காக சும்மா இருக்கேன்.)

சம்பத் : என்னடி சும்மா முறைக்குற.... போய் காபி கொண்டுவாடி... நாயே...

ராணி : ஏங்க என்ன இப்படி திட்டுறீங்க... இரண்டு நிமிஷத்துல காபி கொண்டு வந்திடுறேன்.

சம்பத் : ( இப்பே முப்பது ஸகேண்ட் ஆயிடுச்சு....) என்னால வெயிட் பண்ண முடியாது... எல்லாம் உங்க அப்பன சொல்லனும்..

ராணி : எதுக்கு எங்க அப்பாவ இழுக்குறீங்க...???

சம்பத் : உங்க அப்பாவ என்ன... அம்மாவை சேர்த்து இழுப்பேன்... பொண்ண பெத்து வைக்க சொன்னா.... பஜாரிய பெத்து வெச்சிருக்காங்க...

ஒரு நிமிடம் கடந்து விட்டது.

ராணி : எங்க அப்பா, அம்மா பத்தி பேசாதிங்க... எனக்கு கடவுள் மாதிரி...

சம்பத் : எல்லாரும் செத்த அப்புறம் கடவுள்... உங்க அப்பா, அம்மா தான் உயிரோட இருக்காங்களே....

இன்னும் குறைவான நேரம் தான் இருக்கிறது...

ராணி : நம்ப சண்டைய அப்புறம் வச்சிக்கலாம். இந்தாங்க காபி குடிச்சிட்டு சமாதானம் ஆகுங்க....

சம்பத் : என்னடி சமாதானம்... மன்னாங்கட்டி... பேயே...பிஸாசு...

ராணி : என்ன அப்புறம் வேணும்னாலும் திட்டலாம்.. இப்ப சமாதானம் ஆகுங்க...

சம்பத் : ( இப்ப விட்டா நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதே...) என்ன அப்புறம் கிப்புறம்னு சொல்லிட்டு... என்னால சமாதானம் ஆக முடியாது...

“டங்...டங்...” சப்தம் ஒலித்தது.

தொகுப்பாளர் : நேரம் ஆயிடுச்சு... உங்களால குறிப்பிட்ட நேரத்துக்குள்ள சண்டைய முடிக்கல்ல.... 29" கலர் டி.வி. தவர விட்டீங்க... பரவாயில்ல... அடுத்த சுற்றுக்கு... போவோம்..

ராணி : நிறுத்தியா... இந்த ஆளால கலர் டி.வி போச்சு... நீ பாட்டுக்கு பேசிட்டே போற...

தொகுப்பாளர் : மேடம்... சைலண்டா இருங்க... நீங்க பேசுறது எல்லாம் ரெகார்ட் ஆகுது...

ராணி : போய்யா... விளங்காதவனே... எங்க என் புருஷன்..

சம்பத் பயந்தப்படி தொகுப்பாளர் பின் ஒலிந்துக் கொண்டு இருந்தான். அதை கவனித்த ராணி சம்பத் சட்டையை பிடித்து இழுத்து வருகிறாள்.

ராணி : யோவ்... உன்னால எனக்கு கலர் டி.வி. போச்சு. அது கூட பராவாயில்ல... இத்தன பேரு முன்னாடி நாயே, பேயே,பிஸாசு, முண்டம் திட்டுற... உன்ன என்ன பண்ணுறேன் பாரு...

சம்பத் : அடிக்காதம்மா....வலிக்குது... எல்லாரும் பாக்குறாங்க...

ராணி : எல்லாரும் பாக்கட்டும்... எனக்கு கவலையில்ல...

கேடி பொருத்தம் நிகழ்ச்சி.... ச்சே... ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.

2 comments:

Unknown said...

I have not watched even single TV program of this kind.

But your Script is really good.

Keep it up

குகன் said...

Thanks Prem :)

LinkWithin

Related Posts with Thumbnails