வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Sunday, January 31, 2010

ராஜிவ் காந்தி கொலை வழக்கு : டி.ஆர். கார்த்திகேயன் vs கே.ரகோத்தமன்



சென்னை புத்தக மிகவும் எதிர்பார்த்து வாங்கிய புத்தகம். இந்த அளவுக்கு என்னை எந்த புத்தகமும் ஏமாற்றியது இல்லை என்று சொல்லலாம்.ஒரே மூச்சில், படித்து முடித்தேன். படிக்க படிக்க கோபம் தான் வந்தது.

பின்னட்டையில்....
'இதை விட முழுமையான ஆதார பூர்வமான ஒரு கொலை வழக்கு விசாரணை நூல் இதல் முன் தமிழில் வெளிவந்ததில்லை'.

டி.ஆர். கார்த்திகேயன் எழுதிய 'வாய்மையின் வெற்றி' புத்தகத்தை இதற்கு முன் தமிழில் வந்திருப்பதை சொல்லிக் கொள்கிறேன். இது நேரடி தமிழ் நூல் இல்லை. (‘Triumph of Truth – The Rajiv Gandhi Assassination’ புத்தகத்தின் தமிழாக்கம்). ஆங்கில படத்தை பார்த்து படம் எடுத்து விட்டு, தமிழில் இது வரை யாரும் எடுத்ததில்லை என்று சொல்லும் இயக்குனருக்கும், பின்னட்டை விளம்பரத்திற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

கே.ரகோத்தமனின் தனிப்பட்ட எண்ணங்கள் இந்த புத்தகத்தில் இருப்பதை பல இடங்களில் தெரிந்துக் கொள்ள முடிகிறது. பல இடங்களில் விசாரணை கமிஷன் தலைவர் டி.ஆர். கார்த்திகேயனை தாக்கியிருப்பது தெரிகிறது. கொஞ்சம் புலம்பலும் இருக்கிறது. ஓய்வு பெற்ற பிறகு தனது மேலாளரை துணிச்சலாக போட்டுக் கொடுத்திருக்கிறார்.

இந்த புத்தகம் பல கேள்விகளை தான் எழுப்ப வைக்கிறதே தவிர, எதற்கும் விடை சொல்லுவது போல் இல்லை.

1.

இவர் தனது புத்தகத்தில், 'சில சயனைட் மரணங்களைத் தடுத்திருக்கலாம். அதிகாரிகளின் மெத்தனத்தாலும் தயக்கத்தினாலும் அது மட்டும் முடியாமல் போனது'.

சி.பி.ஐ பாதுகாப்பில் இருந்த சண்முகம் தப்பித்து தற்கொலை செய்துக் கொண்டதை என்ன சொல்லுவது ? சி.பி.ஐ அஜாக்கிரதை காரணமாக இருந்தாலும், யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கார்த்திகேயன் புத்தகத்தில் தெரிகிறது.

ஆனால், ரகோத்தமன் எழுத்துகளை படிக்கும் போது ஒரு பத்திரிகையாளர் போல் சொல்கிறார்.( இவர் தான் இந்த புத்தகம் எழுதினாரா ? இவர் சொல்ல இன்னொருத்தர் எழுதினாரா?) அதிகாரிகளின் மெத்தனம் என்பதை சாத குடிமக்கள் கூறலாம். ஓய்வு பெற்றுவிட்டோம் என்பதால் உங்களையும் சேர்த்து உங்களுடன் பணியாற்றிய அதிகாரிகளை குறை கூறுவது நியாயமில்லை.



2.

ஜெயின் கமிஷன் விசாரணையின் போது, நீதிபதி ஜெயினே தனது விசாரணைக்கு சிறப்புப் புலனாய்வு குழுவினரிடம், " கார்த்திகேயன் ! நீங்கள் இந்த விசாரணை மிகச் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறீர்கள். குறுகிய காலத்தில் எந்த ஆதரத்தையும் விட்டு விடாமல் ஒழுங்காகச் சேகரித்துக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கிறீர்கள். ஆனால், வழக்கு விவரங்களை மட்டும் எனக்குத் தராமல் மறைத்து வீட்டீர்கள். விசாரணையின் போது பத்திரிக்கைகளுக்கு கசிந்த அளவு செய்திகள் கூட ஜெயின் கமிஷனுக்குக் கிடைத்து விடாதபடி நீங்கள் கவனமாகப் பார்த்துக் கொண்டதை அறிந்த பிறகு தான் நானே சுயமாக மீண்டும் அனைத்துத் தரப்பையும் விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்" என்று சொன்னார்.

என்னைப் போன்ற விசாரணை அதிகாரிகளுக்கு, மாதக்கணக்கில் இந்த வழக்குக்காக நாயாகா உழைத்தவர்களுக்கு இந்த விமரிசம் எத்தனை மன வேதனை அளித்திருக்கும் !


ஜெயினே கூறியது கார்த்திகேயனை. ஆனால் மன வேதனை இவருக்கா ?? அல்லது கார்த்திகேயனை அவர் விமர்சனம் செய்தது உங்கள் தாங்கிக் கொள்ள முடியவில்லையா ?? என்று புரியவில்லை. தன் மேலாளரை குறை சொல்லும் போது நம்மையும் சேர்த்து தான் குறை சொல்கிறார்கள் என்று நீங்கள் எடுத்துக் கொண்டு இருக்கலாம். தன் மேலாளரிடம் உங்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததாக இந்த புத்தகத்தில் தெரியவில்லை.

ராஜிவ் காந்தி வழக்கில் ரகோத்தமன் விசாரிக்க விரும்பிய வைகோ மற்றும் மரகதம் சந்திரசேகர் ( ஸ்ரீ பெரும்புதூர் வெட்பாளர்).

3.

'அத்தனை அரசியல்வாதிகளிடமும் நிகழ்த்தப்பட்ட 'மேலதிகாரிகளின் விசாரணை' மிகவும் மேம்போக்காக அமைந்து விட்டதில் தனிபட்ட முறையில் எனக்கு வருத்தம் உண்டு'. (பல இடங்களில் இவரின் தன்னிலை பார்வை தெரிகிறது.)

எங்களுக்கு மேல் விசாரணைக்கு அனுமதியளிக்க வேண்டிய கார்த்திகேயன், அதைக் கண்டுகொள்ளாமல் விட்டது ஏன் என்பது புரியாத புதிர்.


இந்த வரிகள் புத்தகத்திற்கு sensationக்காக பயன் படுத்தியது போல் தான் உள்ளது.

நாம் இந்தியாவில் இருக்கிறோம் என்பதை அவர் நினைவில் வைத்துக் கொள்ளவும். குற்றம் செய்த அரசியல்வாதியே மேம்போக்காக விசாரணை தான் நடத்தப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் மற்றவர்கள் அடித்து விசாரணை செய்ய வேண்டும் எதிர்பார்த்தாரா ? கலைஞரை போல் ஜெயலலிதாவும் தான் அன்றைய நிகழ்ச்சிக்கு போகவில்லை. அதை பற்றி ஏன் குறிப்பிடவில்லை ?

கார்த்திகேயன் புத்தகத்தில் இல்லாத தகவல், இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது.
1. விடுதலை புலிகளின் ஒரு சில கடிதங்கள் ( அவ்வளவு முக்கியத்துவமான கடிதங்கள் இல்லை)
2. சுப்பிரமணியம் சுவாமி கிட்டுவை ராவின் உளவாளி என்று சொல்லுவது.
3. சில அரசியல் தலைவர்கள் மீது சந்தேகம் இருந்தும் விசாரிக்காமல் இருப்பது.
மற்றும்
4. கே.ரகோத்தமனின் தனிப்பட்ட மன குமுறல்கள்.

நான் கார்த்திகேயனுக்காக வக்காளத்து வாங்கவில்லை. கே.ரகோத்தமன் குற்றவாளி குண்டில் இருந்து கொண்டு அடுத்த வரை குறை சொல்ல கூடாது என்பதை தான் சொல்லகிறேன்.

கென்னடி மரணம் போல் ராஜீவ் மரணத்தில் இருக்கும் பல மர்மங்கள் வெளிவர போவதில்லை. சுத்தி சுத்தி விடுதலை புலிகள் மீது தான் குற்றம் சொல்ல போகிறார்கள்.

ராஜீவ் படுகொலைக்கு பிறகு விடுதலை புலிகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கு நிதி வழங்கியவர் யார் ? பாக், சீனாவின் மறைமுக தொடர்பு உண்டா ? இப்படி பல தகவல்கள் இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தேன்.

ராஜிவ் காந்தி கொலையை பற்றி நீங்கள் வாசிக்கும் முதல் புத்தகமாக இருந்த, கண்டிப்பாக இது நல்ல அறிமுக புத்தகம் தான். முன்பே கீழ் காணும் புத்தகங்களை வாசித்திருந்தால் இந்த புத்தகத்தால் பெரிய தகவல் ஒன்றுமில்லை.

Triumph of Truth – The Rajiv Gandhi Assassination – The Investigation, by D.R.Kaarthikeyan and Radhavinod Raju, ('தமிழில் : ‘வாய்மையின் வெற்றி' ராஜிவ் கொலை வழக்கு புலனாய்வு’)
Beyond the Tigers – Tracking Rajiv Gandhi Assassination - Rajeev Sharma.
Assassination of Rajiv Gandhi – Unanswered Questions and Unasked Queries - Subramanian Swamy (தமிழில் அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது என்று நினைக்கிறேன். பெயர் தெரியவில்லை.)

ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் விலகும் நேரம் - எந்த மர்மமும் இந்த புத்தகத்தில் விலகியதாக தெரியவில்லை.

டிஸ்கி : ஒரு நண்பரிடம் இந்த புத்தகத்தை பற்றி பேசும் போது, அவர் " இது சினிமாவுக்கான நல்ல திரைக்கதை புத்தகம்" என்றார்.

2 comments:

Cable சங்கர் said...

ஓகே ரைட்டு..

வெள்ளிநிலா said...

ரகோத்தமன் புக்கை வாசித்தேன் , ரொம்ப வேகமான நடையில் இருந்தது, அல்லது அந்த விசயத்தில் நமக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது

LinkWithin

Related Posts with Thumbnails