வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, September 4, 2009

ஒரு நாள் அரசு விடுமுறை !

முதலில், ஆந்திர முதல்வர் மரணத்துக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்பெல்லாம் தலைவர்கள் இறந்துவிட்டால், டி.டி தொலைக்காட்சியிலும், வானொலியிலும் சோக இசையும், இறந்தவர் பற்றிய செய்திகளும் போடுவார்கள்.

ஆனால், இப்போது பல சேனல் வந்த பிறகு இறந்த தலைவர்களுக்கு ஒரு நாள் அரசு விடுமுறை மட்டுமே மிஞ்சுகிறது. 'அரசு விடுமுறை' என்றதும் சும்மா இருப்பாருக்குமா தனியார் தொலைக்காட்சி....! புது படம் போட்டு தங்கள் டி.ஆர்.பி ரேடிங்கையை உயர்த்திக் கொள்வார்கள். கடைசியில் , உண்மையாக துக்கம் அனுசரிக்க வேண்டிய நோக்கம் நிரைவேறாமல் போய்விடுகிறது.

வெள்ளிக்கிழமை கிடைக்கும் ஒரு நாள் அரசு விடுமுறையை 'Long Weekend' என்று பலர் கொண்டாட தான் நினைப்பார்கள்.

அரசு அலுவலகத்தில் பல வேலைகள் தேங்கி இருக்க... துக்கம் அனுசரிக்க கொடுக்கும் ஒரு நாள் விடுமுறை தொலைக்காட்சியும், கொண்டாட்டமும் என்று இருக்கும் போது விடுமுறைக்கான நோக்கம் தெரிய போவதில்லை.

அப்படி இருக்கும் போது இந்த ஒரு நாள் அரசு விடுமுறை தேவை தானா ???

ஒரு நாள் விடுமுறை என்று அரசு அறிவித்ததும், என் நண்பர் ஒருவர் " நம்ப லீவ் விட்டதால,நாளைக்கு நம்ப ஆளுங்களுக்கு யாருக்காவது இப்படி நடந்தா இதே மாதிரி லீவ்விட தான் இப்படி பண்ணுறாங்களோ ! " என்று கேட்டார்.

அவர் பேச்சில் எந்த உள்குத்தும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பின்குறிப்பு :அரசு விடுமுறை அறிவித்ததால், சனி கிழமை அலுவலகம் வைத்த ஆதங்கத்தில் இந்த பதிவை இடுகிறேன்.

2 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

karthik said...

This posting is almost coincides with my Post "Unarvugalin velippadu vidumuraiya?"

Pl Visit www.anabayan.blogspot.com

And also visit my post "Sivakumar ennum unnadha manithar"

Regards,
Karthik.S

LinkWithin

Related Posts with Thumbnails