வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, September 7, 2009

கற்பனை கதையல்ல...!

உடம்பில் ஒடுவது சிவப்பு இரத்தம் என்பதை காட்டுவதற்காகவே அடித்தது போல் இருந்தது. அவன் இரத்ததை மண்ணில் சில துளிகளை பார்த்தான். எத்தனை அடி, அத்தனை பூட்ஸ் மீதி.... அனைத்தையும் வாங்கிக் கொண்டு, மெதுவாக 'குடிக்க தண்ணீர்' கேட்டான் அந்த இளைஞன். போலீஸ் கொடுத்தனர். அடிவாங்கிய இளைஞனை போலீஸ் சிறை கம்பிகளில் நடுவே தள்ளி அவள் சகாக்களோடு சாத்தி தள்ளினர்.

அறையில் அந்த இளைஞனை தவிர மற்ற எழு பேர் இருந்தனர். ஜெயில் ஆபிசர்கள் படுக்கை எதுவும் கொடுக்கவில்லை. ஏழு பேருக்கு மேல் படுக்க முடியாத அறை மிகவும் சிரமப்பட்டு துக்கத்தை வரவழைத்தான் அந்த இளைஞன்.

அடுத்த நாள், காலை ஏழு மணிக்கு கதவு திறந்தது. 10 நிமிடங்களுக்குள் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு திரும்ப வேண்டும் என்று வார்டர் கூறினார்.

அங்கு இருந்தது மூன்று கழிவறைகள். அந்த இளைஞனோடு கைதானவர்கள் 50 பேர் இருந்தனர். ஒரு சிலர் காலைக் கடன் கழிக்காமல் திரும்பினர். அந்த இளைஞனும் காலைக்கடனை கழிக்கவில்லை.

பல் விளக்க பற்பொடி கேட்டான். சிறை அதிகாரி செங்கல் பொடி, மண் எடுத்து பல் விளக்க சொன்னார். வெறும் தண்ணீரில் வாய்யை கழுவிக் கொண்டு சிறை அறைக்குள் சென்றான்.

சாப்பாடு நேரம். கதவை திறந்து வெளியே வர சொல்லி அந்த இளைஞனை கியூவில் நிற்க சொல்லி களியும், சாம்பார் மாதிரி கிரையும் கொடுத்தனர்.சாப்பிடுவதற்கு தட்டு இல்லை. வேர் கைதியிடம் இருந்து தட்டு வாங்கி தந்தனர். நெளிந்தும் வளைந்தும் மண் படிந்த தட்டில் சாப்பாடு வாங்கி சாப்பிட்டான் அந்த இளைஞன்.

சாப்பிட்ட பிறகு அந்த இளைஞனை ஏழாவது அறையில் இருந்து மூன்றாவது அறைக்கு மாற்றினர். அங்கு பாபு, வீரசாமி, கோவிந்தராசன், நீல நாராயணன் என்று நான்கு பேர் கைதிகளாக இருந்தனர்.

மாலை சாப்பிட சாப்பாத்தி கொடுத்தனர். அதை கடிக்கக் கூட முடியவில்லை. பொழுது மெதுவாக செல்வது போல் இருந்தது.

இரவு 8.30. மணி இருக்கும். பூட்ஸ் சத்தம் கேட்டது. பத்து கன்விக்ட் வார்டர்களும், ஒரு அஸிஸ்டண்ட் ஜெயிலரும், தலைமை வார்டரும் நுழைவுவாயில் வழியாக பிளாக்குள் நுழைந்தனர். வராண்டா வழியாக கடைசி அறைக்குள் சென்றார்கள்.

"சர்ச்" என்ற சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. வெளியே இழுத்து அடிக்கும் சத்தம் கேட்டது. "அய்யோ, அம்மா " என்ற சத்தமும் கேட்டது.

அந்த இளைஞனின் தொண்டை குழியில் எதோ செய்வது போல் இருந்தது. சோதனையின் பொது வைத்திருக்க கூடாத சாமான்களை எதையாவது வைத்திருப்பானோ என்று எண்ணி தன்னை தானே தேற்றிக் கொண்டான்.

வரிசையாக ஒவ்வொரு அறை திறக்கப்படும் சத்தமும், அடி விழும் சத்தமும், 'அய்யோ, அம்மா' சத்தமும் கேட்டுக் கொண்டு இருந்தது.

"எல்லா அறையில் இருப்பவர்களை அடிப்பது போல் தெரியுதே !" என்றான் அந்த இளைஞன்.

"பயப்படாதே !" என்று பாபு அந்த இளைஞனை ஆறுதல் கூறினான்.

தங்கள் அறைக்குள் வருவதை உணர்ந்த பாபு, " சட்டையை கழற்றாதே அடி பலமாக விழும்" என்றான்.

காவலர்கள் மூன்றாவது அறைக்குள் நுழைந்தனர். அந்த அறையில் இருக்கும் கைதிகளை வர சொன்னார்கள்.

ஒரு வார்டர் துணை ஜெய்லரிடம் காதில் எதோ சொல்ல, " ஓ.... அவனா இவ..." என்று அந்த இளைஞன் பார்த்து சற்று எதிர்பார்க்காத சமயத்தில் அந்த இளைஞனின் கன்னத்தில் அடித்தார். பூட்ஸ் காலால் மிதித்தனர்.

அந்த இளைஞனுடன் இருந்த பாபுவை சுவரில் சாத்தி அடிப்பதை பார்த்தான். அவன் இடது பக்கத்தில் வீராசாமி அடிப்பதை பார்த்தான். பாதி நினைவிழந்தான். பீதியில் ஒன்றுமே புரியவில்லை.

மறுபடியும் அந்த இளைஞனை அடிக்க வரும் போது பாபு ஒடிவந்து அந்த இளைஞனை கட்டிபிடித்துக் கொண்டான். அந்த இளைஞன்னுக்கு விழ வேண்டிய அடியை தான் வாங்கிக் கொண்டான். வார்டரும், கன்விக்ட் வார்டரும் பாபு மீது ஏறி ஏறி பூட்ஸ் காலால் உதைத்தனர். அந்த இளைஞன் பாபு அடிவாங்குவதை பார்த்தான்.

அந்த இளைஞனின் கையில் தடியால் அடித்தார்கள். கை முட்டியில் பலமாக அடிப்பட்டது. வெறி அடங்கிய காவலர்கள், அனைவரையும் உள்ளே பிடித்து தள்ளினர்.

வலி தாங்க முடியாமல் 'அய்யோ அம்மா ' என்று அந்த இளைஞன் முணகிக் கொண்டு இருந்தான். பாபுவையும் தள்ளினர். அந்த இளைஞன் பாபுவை கட்டி பிடித்து உயிர் இருக்கிறதா பார்த்தான். பாபு அந்த இளைஞனின் உடல் காயங்களை தடவி பார்க்கிறான்.

பத்து நிமிடத்தில் மீண்டும் அறையை மாற்றினர். அந்த இளைஞன் பாபுவை விட்டு பிரிய வேண்டிய நிலை. மனமில்லாமல் அந்த இளைஞன் பாபுவை விட்டு பிரிந்து வேறு அறைக்கு சென்றான்.

அடுத்த நாள் பாபு இறந்ததை அந்த இளைஞனுக்கு தெரிகிறது. தன் உயிரை காப்பாற்றிய சிட்டிபாபுக்காக இளைஞரான ஸ்டாலின் கண்ணில் இருந்து வந்த நீர் மண்ணை ஈரமாக்கியது.

1 comment:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

LinkWithin

Related Posts with Thumbnails