வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, September 8, 2009

கற்பனை கதையல்ல...! - 2

இருள் சூழ்ந்த அறையில் எதோ ஒரு சிறு வெளிச்சம் இருப்பது உள்ளூணர்வு சொல்கிறது. இல்லை... எல்லாம் முடிந்துவிட்டது. இனி எதுவும் செய்ய முடியாது. பேசாமல் குடும்ப தொழில் பார்க்க வேண்டியது தான் என்று யோசித்தேன்.

"உன்னால் முடியும் . நீ சாதிக்க பிறந்தவன். நாளை சினிமா உலகம் உன்னை பற்றி பேசும்."
என்று தனக்கு தானே ஆறுதல் கூறிக் கொண்டான். அறுதல் கூட யாரும் இல்லாமல் இருப்பது போல் இருந்தது.

எதுக்காக கலைப்படத்தை எடுத்தேன். வியாபார ரிதியான படத்தை எடுத்திருக்கலாம். போட்ட பணத்தையாவது பார்த்திருக்கலாம். கலைப்படம் எடுக்கிறோம் என்ற பெயரில் தியேட்டர் பக்கம் கூட்டமே இல்லாமல் இருக்கிறது. நாளை 'ஜிந்தகி' என்று புது படம் வெளிவர போகிறது.

தமிழில் வெற்றி பெற்ற படமாம். இந்தியில் எடுத்திருக்கிறார்கள். இங்கும் வெற்றி பெறும் என்று சொல்கிறார்கள். என் படத்தை தியேட்டரில் இருந்து எடுக்க போவது சந்தேகமில்லை.

உலகத்தில் பணம் கொடுத்து எது வேண்டுமானாலும் செய்யலாம். காசு கொடுத்து ரசிகர்களையும், வாசகர்களையும் உருவாக்க முடியாது. அவர்களாக விரும்பி வர வேண்டும். அப்படி என் படத்திற்கு ரசிகர்கள் தேடி வரமாட்டார்களா ? என்று எங்கிக் கொண்டு இருந்தேன்.

யாரோ கதவு தட்டும் சத்தம். படம் பெட்டி வீட்டுக்கு கொண்டு வந்து தருகிறார்களோ என்று சந்தேகத்துடன் கதவை திறந்தேன்.

"என் பெயர் வாசன். சென்னையிலிருந்து வருகிறேன்."

'வாழ்க்கை படகு' இந்தியில் 'ஜிந்தகி' என்ற பெயரில் உருவாக்கிய தயாரிப்பாளர் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன். அதன் வெளியீட்டு விழாவுக்காக வந்த போது கல்கத்தா வந்த தியேட்டர் மேனேஜர் அவர்கள், " புதிய இளைஞன் ஒருவர் உருவாக்கிய ஆர்ட் பிலிம் நம் தியேட்டரில் ஒடுகிறது. கூட்டமே இல்லை. நாளை ' ஜிந்தகி' வெளியிடலாம்" என்றார்.

படத்தை பார்த்து விட்டு விலாசத்தை வாங்கி வந்த விஷயத்தை சொன்னார்.

"உங்கள் படத்தை பார்த்தேன். Simply Superb. இந்த படத்தை கடைசி ஒரு ரசிகன் வரும் வரை, தன் படத்தை இந்தத் தியேட்டரில் வெளியிட மாட்டேன். இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் பெரிய கலைஞனாக புகழ் பெறுவீர்கள்" என மானதார வாழ்த்திவிட்டு வந்தார்.

தன் படம் ஒரு தயாரிப்பாளர் மனதை மாற்றுமா...? அப்படி என்றால் என் படம் இந்தியாவை மாற்றும்... !! இந்திய திரைப்பட உலகில் என் பெயர் நீங்காமல் இருக்கும் என்று இளைஞன்
சத்யஜித்ரே தனக்கு தானே புகழ் மாலை சுடிக்கொண்டான்.

அந்த படம் 'பதேர் பாஞ்சாலி' ! சத்யஜித்ரே ஆஸ்கர் விருது பெற காரணமாக இருந்த படம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails