
பெரும் கூட்டத்துடன் '27C' திருவேற்காடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. கோயம்பேடு தாண்டியவுடன் பலரால் சரியாக மூச்சு கூட விட முடியவில்லை. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொள்வதும், மற்றவரின் வேர்வை நாற்றத்தை சுவாசிப்பதுமாக பெரூந்தில் பயணம் செய்தனர். சென்னையில் காலை பத்து மணி பேரூந்து பயணம் என்றால் ‘நரகம்’ என்று எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. அந்த கூட்ட நெரிசலிலும் சந்தோஷமாக பத்து கல்லூரி மாணவர்கள் வந்தனர்.
புட் போர்ட்டில் பஸ்யை தட்டி கொண்டு, ‘வந்தனம் வந்தனம்... அள்ளி புசு சந்தனம்’ என்று 'கானா' பாடலை பாடி நரக பேரூந்தில் உல்லாசமாக பயணம் செய்தனர்.
*
“எவ்வளவு நேரம் தான் பஸ்ஸீக்காக காத்திருக்கிறது” - தன் பக்கத்தில் இருந்தவரிடம் ஒரு முதியவன் புலம்பினார்.
அவரைப் போல் பலர் பெரூந்துநிலையத்தில் காத்திருந்தனர்.
அதில் பயணம் செய்த நடுத்தர வயதினர் ஒருவர் " படிக்கிற பசங்களா இது...! எங்க இதுங்க உருப்பட போகுது...." என்று கடிந்துக் கொண்டார். அவர் சொல்வதை கேட்டு பக்கத்தில் இருந்த இன்னொரு நடுத்தர வயதவரும் அந்த மாணவர்களை பார்த்து தலையில் அடித்துக் கொண்டார்.
கண்டேக்டர் அந்த மாணவர்களிடம் பேரூந்து அடிப்பதை நிருத்த சொல்லியும் அவர்கள் நிருத்தவில்லை. அதில் வந்த நடத்தர வயதினர்களும் அவர்களை திட்டுவதை நிருத்தவில்லை. பேரூந்து ஒவ்வொரு இடத்தில் நிற்க்கும் போதும் பேரூந்துக்குள் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அந்த கல்லூரி மாணவர்களுக்கும் வரவில்லை. இப்படி பல 'இல்லை' நகர பேரூந்துக்களுக்கு பொருந்தும்.
*
பெரும் பாலானவர்கள் தி.நகர் செல்பவர்களாக இருந்ததால் அந்த பேரூந்தில் கூட்டம் சிறிது கூட குறையாமல் இருந்தது. எந்த வசை சொற்களுக்கும் கவலைப்படாமல் அந்த மாணவர்கள் ஸ்ருதி குறையாமல் பாடி கொண்டு இருந்தனர். ஒரு வழியாக அந்த பேரூந்து மாலிங்கபுரத்தில் வந்துதது. புதிதாய் கட்டிய மேம்பாலத்தின் மெதுவாக ஏற தொடங்கியது. அந்த மேம்பாலத்தில் பாதி இடத்தை தாண்டிய நிலையில், வெட்கப்படும் கன்னிப்பெண் போல் பேரூந்து திடீர் என்று நின்றது.
'27C' பின் தொடர்ந்த எல்லா வண்டிகளும் நின்றன. பொறுமை இழந்த சில வண்டிகள் எதிரில் வரும் வண்டியை பற்றி கவலைபடாமல் '27C' முந்திக் கொண்டு சென்றனர். அப்படி ஒரு கார் முந்த முயற்சிக்க எதிரில் வந்த ஆட்டோ செல்லும் வழியை மறைத்தது. ஆட்டோக்காரன் சரியான வழியில் வந்ததால் காருக்கு வழி கொடுக்காமல் இருந்தான். காரும் பின்னாடி எடுக்க முடியாமல் மற்ற வண்டிகள் நின்றுக் கொண்டு இருந்தன. பத்து நிமிடத்திற்கு மேல் அந்த மேம்பாலம் முழுக்க வண்டிகளால் நிரம்பி வழிந்தது. எல்லோருக்கும் வழி வேண்டும் என்றால் '27C' அந்த மேம்பாலத்தில் இருந்து செல்ல வேண்டும். அப்போது தான் மற்ற வண்டிகளுக்கும் செல்ல வழி கிடைக்கும்.
கண்டக்டர் தன் கையில் இருந்த விசிலை ஊதி பயணம் செய்த அனைவரையும் பேரூந்தை தள்ள அழைத்தார். அது வரை பேரூந்தில் பாடி கலாட்டா செய்த மாணவர்கள் இறங்கி தள்ள வந்தனர். பேரூந்தில் நின்று பயணம் செய்த சில பேர் தங்கள் அலுவலகம் அருகில் இருப்பதால் இறங்கி நடந்தே சென்றனர். அமர்ந்திருந்த சிலர் இறங்கி தள்ள முன் வந்தது இறங்க, நின்று வந்தவர்கள் அந்த இடத்தில் அமர்ந்தனர். மேம்பாலத்தின் இன்னும் எந்த வண்டியும் முன்னே செல்லவில்லை.
போக்குவரத்து காவல் அதிகாரி வந்து கத்த, ஒரு சிலர் மனமுவந்து இறங்கி வந்து தள்ளினார்கள். பின்னாடி நின்ற வண்டிகள் ஹாரன் அடித்துக் கொண்டு இருந்தனர். அது வரை கல்லூரி மாணவர்களை திட்டிய நடுத்தர வயதினர்கள் ஹாரன் அடிக்கும் வண்டிகளை திட்ட தொடங்கினர். ஒரு சிலர் மனது மாறி பேரூந்தை தள்ள இறங்கியதால் மெல்ல மெல்ல முன்னே சென்றது. பாட்டு பாடிய கல்லூரி மாணவர்கள் பேரூந்தை தள்ள, அந்த நடுத்தர் வயதினர்கள் இளைஞர்கள் முதுகில் சவாரி செய்யும் அரசியல்வாதி போல் அமர்ந்துக் கொண்டு வந்தனர்.
1 comment:
awsome
Post a Comment