வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, July 1, 2009

வெட்டப்படாத 'நிர்வாணம்'

தொப்புல் தெரிவது போல் சேலைக்கட்டி என் முன் கண்மணி நின்றாள். மெல்லிய இடை, அளவான மார்பு, சுண்டி இழுக்கும் கண்கள், முதுகுவரை கூந்தல் என்று தமிழ் சினிமாவுக்கு பொருத்தமான கதாநாயகியாக இருந்தாள். அவளின் போறாத நேரம் ஒருவனால் ஏமாற்றப்பட்டு விலை மாதுவாக தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறாள். வயதானவராக இருந்தாலும், இளைஞனாக இருந்தாலும் அவர்களை திருப்த்தி செய்து அனுப்பி வைப்பவள். இந்த தொழிலில் கண்மணியின் 'கஸ்டம்மர் சர்விஸில்' அடிச்சிக்க ஆளேயில்லை என்று என் நண்பன் சேகர் மூலம் கேள்வி பட்டுயிருக்கிறேன்.

சேகரிடம் கண்மணியையுடன் இரவு கழிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். அவன் என் வீட்டு விலாசத்தை அவளிடம் கொடுத்து என்னை பார்க்க அவளை அனுப்பினான்.

"நீங்க தானே ரவி !"

" நா கண்மணி. சேகர் அனுப்ச்சாரு..."

" உள்ள வாங்க....." என்றேன்.

இது போன்ற விஷயங்களில் எனக்கு முன் அனுபவம் இருந்தாலும் திருமணத்துக்கு பிறகு இது தான் முதல் முறை. வீட்டில் யாருமில்லை. என் மனைவி திருத்தனியில் இருக்கும் அவள் அம்மா வீட்டுக்கு சென்றது எனக்கு வசதியாக இருந்தது.



கண்மணியை என் படுக்கை அறைக்கு அழைத்து சென்றேன். அவள் என் அறையை ஒரு நோட்டம் விட்டு என்னை பார்த்து சிரித்தாள். நான் அவள் அங்கங்களை ஒவ்வொன்றாக உற்றுபார்த்தேன். குறிப்பாக அவளுடைய இடை.

" உங்களுக்கு புடவ ஒ.கேவா. வேற ட்ரெஸ் போட்டு வரவா..." என்றாள்.

"எதுக்கு ட்ரெஸ்...?" என்றேன்.

என் அறையில் பட்டாசு கொளுத்தி போட்டது போல் "ஆஹா....!!" என்று சிரித்தாள். அப்போது தான் அவள் கை பையில் மாற்று துணியுடன் வந்திருப்பதை கவனித்தேன். இருந்தும், என் கண்கள் அவள் இடையில் இருந்து எடுக்க முடியவில்லை.

" இந்த மாதிரி விஷயத்துக்கு ட்ரெஸ் தேவையில்ல தான். ஒவ்வொரு ஆம்பளைங்க ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க. அதுக்கு தான்"

" புரியல...."

" சில ஆம்பலங்களுக்கு புடவ கட்டி வந்தா மூடு வரும். அத ரசிச்சு கலட்டுறதுல அவங்களுக்கு இன்னும் மூடு வரும். அந்த மாதிரி சுடிதார், மிடி, ப்ராக், ஆப் ஸாரினு... ஒவ்வொரு ஆம்பளைங்களுக்கு ஒரு டேஸ்ட்...." என்றாள்.

அவள் பேச்சை கேட்டவுடன் இடையில் இருந்து அவள் முகத்தை உற்று பார்த்தேன். அவள் சொன்னதுக்கு என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.

" ஆசைய தீத்துக்கனும்னு வராங்க. அவங்க ஆச படுற மாதிரி ட்ரெஸ் பண்ணி கழட்டுறதுல அவங்களுக்கு கிக் இருக்கு. உங்களுக்கு எப்படி ?" என்றாள்.

'கஸ்டம்மர் சர்வீஸ்' மட்டுமல்ல் 'கஸ்டம்மர் சாட்டிஸ்பேக்ஷனில்' கூட இவளை அடிச்சிக்க முடியாது என்று நினைத்தேன். அவள் புடவையில் அழகாகத் தான் இருந்தாள். ஆனால், நான் அவளை வரச்சொன்னது புடவை கட்டிய அழகை ரசிக்க அல்ல... அவளுடைய நிர்வாணத்தை. விலைமாதுவிடம் ரசிக்கப்பட வேண்டிய முதல் விஷ்யமும் அது தான். கடைசி விஷயமும் அது தான்.

" கொஞ்ச இருங்க... " என்று சொல்லி என் அறையில் இருக்கும் பீரோவை திறந்தேன். அதில் இருந்து என் மனைவியுடைய நகையை எடுத்தேன். ஒவ்வொரு நகையும் என் மனைவிக்காக பார்த்து பார்த்து நான் எடுத்தது. என் மனைவிக்கு அவள் அம்மா வீட்டு சீர்வரிசை நகையே அதிகமாக இருந்ததால் இந்த நகையை அவ்வளவாக போடுவதில்லை. அதிக நகை போடும் சந்தர்ப்பமும் என் மனைவிக்கு அமையவில்லை. அவளுக்காக நான் எடுத்த நகையை கண்மணியிடம் கொடுத்தேன்.

"எதுக்கு இவ்வளவு நக..." என்று வியப்பாக கேட்டாள்.

" ட்ரெஸ் இல்லாம... இந்த நகைய மட்டும் போட்டுட்டு வாங்க...." என்றேன்.

அதிர்ச்சி கலந்து வியப்புடன் என்னை பார்த்தாள். தன் ஆடைகளை கலைத்து நிர்வாணத்தை ரசித்த ஆண்களை பார்த்திருக்கிறாள். நிர்வாணமாக வர சொல்லி அனுபவித்த ஆண்களிடம் படுத்திருக்கிறாள். ஒன்றாய் குளித்தவன், குடி போதையில் வந்தவன், பிறந்த மேனியோடு பேசியவன் என்று பல வித ஆண்களை கடந்து வந்திருக்கிறாள். இன்று தான் முதன் முறையாக தன் நிர்வாணத்திற்கு ஒருவன் தங்கம் பூச நினைத்திருக்கிறான்.

கஸ்டம்மர் எது சொன்னாலும் மறு பேச்சு பேசாமல் செய்பவள் ஒரு கனம் யோசித்து என்னையே பார்த்தாள். தன் ஆடைகளை எல்லாம் கலைத்து விட்டு நகையை அணிந்து கண்ணாடியை பார்த்தாள். ஒரு நிமிடத்தில் அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

அவள் மார்ப்பு நான் கொடுத்த தங்க சங்கிலி மறைத்திருந்தது. இடுப்பில் கட்டிய தங்க ஒட்டியானத்தில் மணி அவளுடைய பெண் உருப்பை மறைந்திருந்தது. என் மனைவிக்காகவே ஒட்டியானத்தில் தங்க மணிகள் தொங்குவது போல் செய்திருந்தேன். இப்போது கண்மணி அணிந்து கொண்டு தங்க மாளிகை போல் என் முன் வந்து நினறாள்.

நகைகளை அணிந்த படி என் படுகையில் உட்கார சொன்னேன். அவளும் உட்கார்ந்தாள். நான் என் கையில் ஒரு பென்ஸிலை எடுத்து சீவினேன். தங்கம் பதிந்த கண்மணியின் மேனியை வரைந்தேன். அவள் இடுப்பு, மார்ப்பு, கண்,கை, உதடு என்று அங்கம் அங்கமாக ரசித்து அப்படியே வரைந்தேன். கண்மணியும் பொறுமையாக இரண்டு மணி நேரம் அசையாமல் நான் வரைவதற்காக அப்படியே உட்கார்ந்து இருந்தாள்.

" கொஞ்ச இருங்க... பத்து நிமிஷத்துல முடிஞ்சிடும் " என்றேன்.

அவள் கண்களை மெதுவாக வரைந்து ஒவியத்தை முடிதேன்.

" இப்போ ஒ.கே. ரிலாக்ஸ் அயிட்டு உங்க ட்ரெஸ போட்டுக்கோங்க...." என்றேன்.

அவள் ஒன்று புரியாமல் என்னை பார்த்தாள். எதுவும் செய்யாமல் அவளை அடையை போட சொன்னது அவளுக்கு வியப்பாக இருக்கலாம். இது என்னுடைய பொழுது போக்கு, கலை ஆர்வம் என்று அவளுக்கு தெரியாது. இது அவளுக்கு தெரிந்திருக்க நியாயமுமில்லை.

" அவ்வளவு தானா... என்ன வரையுறதுகா கூப்டிங்க...." என்று சொல்லி கொண்டு நான் வரைந்த ஓவியத்தை பார்த்தாள். அவளுடைய பிரம்மிப்பை கண்களில் பார்த்தேன். தன்னை இவ்வளவு தத்துருபமாக ஆபாசம் இல்லாமல் நிர்வானமாக நான் வரைந்த ஓவியம் அவளுக்கு வியப்பாக இருந்திருக்கும். தங்க நகை அணிந்து அவள் தேகத்தை இயற்கை போல் வரைந்து காலகள் பிலாஸ்டிக்கால் அழிந்துக் கொண்டு வருவது போல் வரைந்திருந்தேன்.

என் கல்லூரி நாட்களில் இது போல் எத்தனையோ விலைமகளை நிர்வணமாக வரைந்து மரம், கடல், மலை என்று சேர்த்திருக்கிறேன். அதில் அவர்களுடைய நிர்வாணம் தெரியவதில்லை. என்னுடைய கலை தான் தெரியும். எத்தனையோ என் ஓவியத்திற்காக பரிசுகள் வாங்கியிருக்கிறேன். அப்பா சம்பாதித்த சொத்துக்கள் இருந்தாலும் இது போல ஓவியம் வரைவதில் தான் எனக்கு சந்தோஷம்.

" உங்க பெய்ட்டிங். ரொம்ப அழகா இருக்கு. இதுல என்ன சொல்லுறீங்க....?"

“ இயற்கை நிர்வாணமா இருந்தா தான் அழகு... பிலாஸ்டிக் ஆடை கொடுத்தா அழிஞ்சு போய்ட்டும்”,என்றப்படி புன்னகையுடன் மூவாயிரத்தை நீட்டினேன். என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.

" ஒண்ணும் நடக்கல்ல.. எதுக்கு பணம்" என்றாள்.

" இந்த பணம் என் பெய்டிங்க்கு மாடலிங் பண்ணதுக்கு...." என்று சொல்லி கொடுத்தேன். ஆனால், அவள் வாங்க மறுத்தாள்.

" இந்த உடம்ப நிர்வாணமா நிறைய பேர் பார்த்திருக்காங்க... முதல் தடவையா இயற்கையோட பார்க்க போறாங்க... அதுக்கு பணம் வாங்கி உங்க கலைய அசிங்க படுத்த விரும்பல...." என்றாள்.

தன் உடலில் இருந்து நகைகளை கலட்டி நான் கொடுத்த தங்க பேட்டியில் வைத்தாள். அவள் அணிந்து வந்த புடவையை மீண்டும் அணிந்து கொண்டாள். நடு இரவானதால் இரவு தங்கி காலை போக சொன்னேன்.

"குடும்ப பொண்ணுங்க தான் இராத்திரி போக பயப்படனும். என் வேலைய இராத்திரியில தானே..." என்று சொல்லி நகர்ந்தாள்.

திடீர் என்று என்ன நினைத்தாளோ தெரியவில்லை. என்னை திரும்பி பார்த்தாள்.

" உங்க கிட்ட ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே...."

" சொல்லுங்க...." என்றேன்.

" நீங்க சுகத்துக்காக வர சொன்னீங்கனு நினைச்சேன். வரையுறதுக்கு உங்க மனைவிய இதே மாதிரி நிக்க சொல்லி வரஞ்சிருக்கலாமே. யாருக்கு தெரிஞ்சிருக்க போது..."

" என் மனைவியோட நிர்வாணத்த நா காமத்தோடு பார்க்குறேன். உங்க மாதிரி பொண்ணுங்களோட நிர்வாணத்த கலை கண்ணோட்டமா பார்க்குறேன்" என்றேன்.

கலை இருக்கும் இடத்தில் காமம் வரதாது. காமம் இருக்கும் நேரத்தில் கலை வராது. என்றைக்கும் கலையையும், காமத்தையும் நான் சேர்த்து வைத்து பார்ப்பதில்லை. கண்மணி கதவு திறந்து வெளியே செல்லும் நேரத்தில்.... வெளியே இருந்து "டீரிங்... டிரிங்..." காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

ஊருக்கு சென்ற மனைவி வந்து விட்டாளோ என்ற பயம் என்னை ஆட்கொண்டது. அவளுக்கு இது போன்ற விஷயத்தை புரிந்துக் கொள்ளும் அறிவில்லை. அப்படியே புரிந்துக் கொண்டாலும் தன் கணவன் இன்னொரு பெண்ணின் நிர்வாணத்தை பார்ப்பதை யார் தான் பொருத்துக் கொள்வார். கண்மணிக்கு உள்ளூர பயன் இருந்தது. தன்னால் என் குடும்ப வாழ்க்கை கெட்டு விடுமோ என்று பதறினாள். நான் கண்மணியை எங்கள் வீட்டு பூஜை அறைக்கு சென்று மறைந்திக்க சொன்னேன்.

பதினெட்டு டிகிரி எ.சி இருந்தும் எனக்கு வேர்த்தது. பயந்தப்படி கதவை திறந்தேன். என் நண்பன் சேகர் நின்றுக் கொண்டு இருந்தான்.

"டேய் எதுகுடா இந்த நேரத்துக்கு வந்த..." என்று பயம் கலந்து கோபத்தில் கத்தினேன்.

" டென்ஷன் ஆகாத மச்சி...! ஒரு பொண்ணு அனுப்பி வெச்சோமே. எப்படி இருந்துச்சுனு கேட்கலாம் வந்தேன்." என்றான்.

" அது நாளைக்கு கேக்குறது. ஒரு நிமிஷத்துல பயந்திட்டேன்."

" என்ன பொண்ணாட்டி ஞாபகமா...." என்று கேனத்தனமாக சிரித்தப்படி என் அறையை தேடி பார்த்தான்.

" எங்கடா கண்மணி. போய்ட்டாலா...." என்றான். அவன் கண்களில் ஏமாற்றம் தெரிந்தது. இந்த நேரத்தில் அவன் அதுக்கு கண்மணியை தேடுகிறான் என்று புரிந்தது. இதற்கு மேல் அவனிடம் பேசவும் எனக்கு கூச்சமாக இருந்தது. பூஜை அறையில் ஒழிந்து இருக்கும் கண்மணியை வெளியே வர சொன்னேன். என்ன நடந்தது என்று தெளிவாக சேகரிடம் விளக்கினேன்.

" நீ வேஸ்ட் மச்சி ! காலேஜ் படிக்கும் போது இப்படி தான் இருந்த. இப்போவுமா... " என்று சொல்லி கண்மணியை ஒரு மாதிரியாக பார்த்தார். " மச்சி ! இவ்வளவு தூரம் இவ வந்துட்டா... சும்மா அனுப்ப முடியுமா... இன்னைக்கு ஒரு நாள் உன் ரூம நாங்க யூஸ் பண்ணிக்கிறோமே..." என்றான்.

செய்த உபகாரத்திற்கு பதில் உதவி கேட்கிறான். பாவம் என்னால் இன்று இரவு கண்மணிக்கு வருமானம் இல்லாமல் போய்விட்டது. வேறு வழியில்லாமல் 'சரி' என்றேன். அவர்கள் இருவரும் அறைக்கு சென்று தாளிட்டுக் கொண்டார்கள்.

நான் ஹாலில் படுத்துக் கொண்டேன். என் மனைவிக்காக செய்த நகையை ஒரு விலை மாதுவுக்கு போட்டது நினைத்து என்னை நானே நொந்துக் கொண்டேன். " என் கலைக்கு மனைவிக்காக ஆசையாக செய்த நகையின் மதிப்பை குறைத்து விட்டேனே " என்று அழுதப்படி படுத்தேன். குற்றவுணர்ச்சியில் எனக்கு தூக்கம் வரவில்லை.

அந்த ஓவியத்தை ஓவிய கண்காட்சியில் வைத்தேன்.

" ச்சே... அந்த இடத்த போய் மறைச்சு வரைஞ்சிருக்கான் பாரு. கொஞ்சம் காட்டுற மாதிரி வரைய கூடாது" என்று ஒருவன் தன் அருகில் இருந்த நண்பனிடம் கூறினான்.

----

தூறல்கவிதை ச.முத்துவேல்யின் எழுதிய கவிதையை கருவாக வைத்து "உயிரோடை" நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான ஆக்கம் !

பின்குறிப்பு :- ஒன்று முதல் மூன்று பக்கங்கள் என்று அறிவித்திருந்த "உயிரோடை" சிறுகதை போட்டி, 1500 வார்த்தைகள் வரை இருக்கலாம் என்று அறிவித்திருப்பதால்... நானே சென்சார் செய்த 'நிர்வாணம்' கதை எந்த வித சென்சார் இல்லாமல் மீண்டும் (6 பக்கங்கள்) பதிவெற்றியிருக்கிறேன்.

9 comments:

Joe said...

நல்ல கதை, எளிமையான நடை.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Unknown said...

Super... Excellent Drawing and Story, Cngratulation .

butterfly Surya said...

சேகர் பாத்திரம் அவசியமா..??

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

குகன் said...

//
Joe said...
நல்ல கதை, எளிமையான நடை.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.
//

நன்றி Joe :)

குகன் said...

// shyam said...
Super... Excellent Drawing and Story, Cngratulation .
//

Thank you shyam :)

குகன் said...

//

வண்ணத்துபூச்சியார் said...
சேகர் பாத்திரம் அவசியமா..??

//
தூறல்கவிதை ச.முத்துவேல்யின் எழுதிய கவிதையில்...

"ஏற்பாடு செய்யும் நண்பருக்கே
விருந்தாவாள்
விலை மகள்"
- என்று குறிப்பிட்டு இருந்தார்.

கவிதைக்கான கதை என்பதால் 'சேகர்' பாத்திரத்தை சேர்க்க வேண்டியதாக இருந்தது.

சி.பி.செந்தில்குமார் said...

கதை ஓகே.ஆனால் போட்டிகளில் கலந்து வெற்றி பெறும் அளவுக்கு சரக்கு இருக்குனு சொல்லமுடியாது,னெகடிவ் விமரசனத்துக்கு சாரி

Gobs said...

Guhan,
Story looks ok and narration is excellent - as the story itself is about nudity but you haven't crossed the limit.
Nice.

Gobinath

Parvathi said...

வித்தியாசமான கதை. கதைக்கேற்ற ஓவியம். பணம் வாங்காததால் அவள் உயர்ந்துவிட்டாள். :)

LinkWithin

Related Posts with Thumbnails