வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, July 22, 2009

என்னை எனக்கே காட்டிய 'நாடோடிகள்' படம் !



பலர் இந்த படத்தை எனக்கு வேலை வைக்காமல் அதிகமானவே விமர்சித்துவிட்டார்கள். இந்த படத்தை பற்றி என் கருத்தை மட்டும் பதிவு செய்கிறேன்.

பள்ளியில் படிக்கும் போது பெரும்பாலானவர்கள் வீட்டில் போன் இருப்பதே பெரிய விஷயம்.நண்பன் தன் காதலியிடம் பேச என் வீட்டு போன்னை பயன்படுத்திக் கொள்வான். நானும் காதலுக்கு உதவுகிறோம் என்று பெருமையாக நினைத்துக் கொண்டேன். ஆனால், +2 முடியும் போது இருவரும் சண்டை போட்டு பிரிந்து விட்டார்கள். நான் என் நண்பனுக்கு அறிவுரை கூறியும் அவன் ஈகோ அந்த பெண்ணிடம் பேசவிடமால் செய்தது. கடைசியில், என் வீட்டு டெலிபோன் பில் அதிகமானது தான் மிச்சம்.

'இந்தியா - சுதந்திரம் 50' என்ற தலைப்பில் நண்பனின் காதலி பள்ளியில் கட்டுரை போட்டி வைத்தார்கள். என் இன்னொரு நண்பன் அவளுக்காக கட்டுரை எழுதி தர சொன்னான். அப்போது அவன் அந்த பெண்ணிடம் தன் காதலை சொல்லவில்லை. நான் என் நண்பனுக்காக கட்டுரை எழுதி கொடுத்தேன். அவனும் தான் எழுதியதாக சொல்லி அந்த பெண்ணிடம் கட்டுரையை கொடுத்தான். கட்டுரை போட்டியில் அந்த பெண் மூன்றாவது பரிசு வென்றாள். அதன் பிறகு அவன் தன் காதலை சொல்லின்னான். அந்த பெண்ணும் ஏற்றுக் கிடைத்தது. ஒரு நல்ல காதலுக்கு என் கட்டுரை உதவியதை பெருமையாக நினைத்துக் கொண்டேன். மூன்று வருடம் கலித்து அவனை ஒரு கடையில் வேறு ஒரு பெண்ணோடு பார்த்தேன்.

பள்ளி, கல்லூரி படிக்கும் காலத்தில் காதலுக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் நண்பர்களை 'மாமா'வாக்கிய நண்பனின் கதை தான் நாடோடிகள். இந்த பலர் பல விதமாதமான விமர்சணத்தை முன் வைத்திருக்கிறார்கள். நண்பன் சென்டிமென்ட், அப்பா சென்டிமென்ட், தங்கையை நண்பன் காதலிப்பதை ஏற்றுக் கொள்ளும் அண்ணன், அப்பாவுக்காக காதலை விட்டுக் கொடுக்கும் மகன் என்று இரண்டாவது பாதியில் பாசப்போராட்டதை காட்டியிருக்கிறார்கள். உதவி செய்த நண்பன் பேசாமல் உதாசிணம் செய்யும் போது ஏற்படும் வலியை அழகாக செதுக்கியிருக்கிறார்கள்.

நண்பர்களை பைத்தியக்காரர்களாக நினைக்கும் காதலர்களை மிரட்டியாவது ஒன்றாக சேர்த்து வாழ வைக்க வேண்டும் என்பதை இந்த படம் காட்டுகிறது. 'வழி தவறாக இருந்தாலும், போற இடம் கோயில் என்பதால்' தவறாக தெரியவில்லை.

பல நண்பர்கள் மனதில் ஒளிந்து இருக்கும் கோபத்தை சசிகுமார், சமுத்திரகனி வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.....!!

அப்பா, அம்மாவுக்காக இல்லாவிட்டாலும் சேர்த்து வைத்த நண்பர்களுக்காவது காதலர்கள் சேர்ந்து வாழ நினைத்தால் அதுவே இந்த படத்தின் உண்மையான வெற்றி !

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails