வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, July 27, 2009

மதி வரைந்த 'அடடே - 2'


"இல்லாததை ஈடுசெய்ய மனிதனுக்குக் கிடைத்துள்ளது கற்பனை வளம்; இருப்பதை சகித்துக் கொள்ள கிடைத்துள்ளதுய் நகைச்சுவை"

-ஆஸ்கார் வைல்ட்


பொதுவாக சித்திர புத்தங்கள் என்றால் குழந்தைகளை மனதில் வைத்து தான் வரைவார்கள். அவர்களை கவர்வதை தான் புத்தக வடிவமும் இருக்கும். வயது ஆக ஆக சித்திரம் வரைவது பலருக்கு தூரமான விஷயமாக மாறிவிடுகிறது. Botany, Zoology படிப்பவர்கள் மதிபெண்களுக்காவது வரை வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். மற்றப்படி வளர்ந்த பிறகு சித்திரத்தை ரசிக்கும் மனம் வருவதில்லை.

எத்தனை வயதானாலும் நாளிதழில் கேலிகை சித்திரத்தை ( அதாங்க...Cartoon) பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அரசியல், விளையாட்டு, சட்டம் எதுவாக இருந்தாலும் பார்ப்பவனுக்கு குறுநகை வர வைப்பது போல் சித்திரம் இருக்கும். இப்படி கேலி சித்திரத்தில் தமிழில் நமக்கு மிகவும் பிரபலமானவர் ஒருவர் 'மதன்' அவர்கள். இப்போது அவர் எழுத்தாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். மற்றவர் 'மதி' அவர்கள்.

மதி 'தினமணி'யில் வரைந்த முதல் பக்க பாக்கெட் கார்ட்டூன்களை ஆறு நூல்களாக தொகுத்துள்ளார். இதில் இரண்டாவது தொகுப்பு நூல் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மனுஷன் ஒவ்வொரு சமூக நிகழ்வுகளை நையாண்டி செய்திருக்கிறார். யாரை நையாண்டி செய்திருக்கிறாரோ அவர்களே சிரிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சில சாம்பிள்.

தி.மு.க ஆட்சி விலகல் பற்றி...

" இப்படி அநியாயமா அமைச்சர் பதவியும் போச்சே ! கட்சி மட்டும் கூட்டனிலேருந்து விலகினா போதாதா, எதுக்கு அமைச்சர்களும் விலகணும் ?"


" பார்த்தீங்களா டாக்டர், இதுக்காகதான் வரச் சொன்னேன் ! இன்னும் பிர்சார ஞாபகத்துலேயே இருக்கார் !"


டாக்டர் காலில் விழும் தன் அரசியர்வாதி கணவனை கவலைப்படும் மனைவி புலம்பல்.

என்னங்க, மோசம் போய்ட்டோம் ! செய்கூலி இல்லை... சேதாரம்ம் இல்லை... கற்களுக்கு விலை இல்லைன்னு நாம் வாங்கின நகை தங்கமே இல்லையாம் !"

குறிப்பாக காங்கிரஸ்யை அணியாயத்துக்கு கலாய்த்திருக்கிறார்.

" ஏதோ வெகுகாலத்திற்குப் பிறகு தனித்துப் போட்டியிடுகிறோம் ! மீண்டும் அடுத்த தேர்தலில் 'அ.தி.மு.க' அல்லது 'தி.மு.க' கூட்டணிக்கே செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலையை எங்களுக்கு எற்படுத்திவிடாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம் !"

தேர்தல் சமயத்தில் கை ரேகை யோசிக்காரனை ப்ளாட்பாரத்தில் இருந்து போலீஸ் விரட்டுவது போல் சித்திரம் என்று பல சித்திரங்களை இதில் குறிப்பிடலாம். நல்ல புத்தகங்களே விற்பனையாகமல் இருக்கும் போது இதுபோல் சித்திர புத்தகங்களை நூலாக வெளியிட்டுயிருக்கும் கிழக்கு பதிப்பகத்தின் சோதனை முயற்சியை பாராட்ட வேண்டும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails