வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, July 6, 2009

தேவதை தோழி

நான் கல்லூக்கு வருவதே உனக்காகத் தான் என்று யாருக்கும் தெரியாது. நான் உன்னை மற்ற பெண்களை போல் நினைத்ததில்லை. நம் வகுப்பில் இருக்கும் மற்ற பெண்களும் நீயும் ஒன்று என்று யாரும் சொல்லமுடியாது. நான் நம் வகுப்பில் இருக்கும் எல்லா பெண்களிடம் பேசியிருக்கிறேன்.... உன்னிடம் தவிர. காரணம், என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை. உன்னை பார்த்தா பிறகு உனக்காகவே வகுப்புக்கு வருகிறேன். உன்னிடம் பேச தொடங்கினால்...... என் வார்த்தைகள் உனக்காக மட்டும் தான் உயிர் வாழும்.

உனக்கு சொந்தமான வார்த்தைகளை எப்படி நான் எப்படி மற்றவர்களிடம் பேச முடியும். அப்படி பேச தொடங்கிவிட்டால் என் வார்த்தைகள் என்னோடு சண்டை போடாதா... தேவதை உனக்காக வாழ்ந்த வார்த்தைகள் மற்றவருக்கு பயன்பட்டால் யாருக்கு தான் கோபம் வராது.



நான் என் மீது நம்பிக்கை இல்லாததால் தான் உன்னிடம் பேசவில்லை. ஆனால், நீ என்னை சோதிப்பதற்காகவே என்னிடம் வந்து பேசுகிறாய். ஒவ்வொருவரும் உன்னிடம் பேச ஆசைப்படும் போது, நீயே என்னிடம் வந்து பேசினாய். என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் எல்லாம் தடுமாறி போய்விட்டது. விலகிச் செல்லத்தான் நினைக்கிறேன். உன் வலையில் விழுந்து விட வேண்டும் என்றே என்னிடம் பேச சூல்லுரைத்தாய்.

நீ என்னிடம் பேசுவதால் எத்தனை ஆண்களுக்ளின் பொறாமை சம்பாதித்தேன் தெரியுமா ? உன்னிடம் என்ன பேசினேன் என்று எத்தனை ஆண்கள் உன் தோழிகளிடம் விசாரித்தார்கள் தெரியுமா ? நாம் காதலர்களா என்று ஒரு தனிப்படை குழு நம் விசாரித்துக் கொண்டு இருப்பது நமக்கே தெரியாமல் போனது.

என் நண்பர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் உன்னை பற்றி கேட்கும் போது.... நீ என் தோழி மட்டுமே தான் என்று என் வாய் சொன்னது.... மனமோ போய் ஏன் சொல்கிறாய் ? என்று கேட்டது....

என் காதலை முதலில் உன்னிடம் தானே சொல்ல வேண்டும்.... மற்றவர்களிடம் சொன்னால் என்ன பயன் ? மூன்று ஆண்டுகள் காதலை சொல்லாமல் கழித்துவிட்டேன். நாட்கள் செல்ல செல்ல உன்னிடம் உள்ள காதல் வளர்ந்துக் கொண்டே இருந்தது. ஆனால், தைரியம் குறைந்துக் கொண்டே வந்தது.

ஒருவன் என்னிடம் வந்து உன்னை காதலிப்பதாக சொல்லி , அதற்கு தூதாக என்னை செல்ல சொல்கிறான். அவனை அடிக்க துடித்தது கைகள், ஆனால் ‘நட்பு’ என்று சொல்லிய வார்த்தை ‘காதல்’ என்று மாற்றிவிடும் கூட்டங்கள் என்னை சூழ்ந்து இருந்தது. அவனுக்கு உதவி செய்ய மறுத்த வந்துவிட்டேன். அவனோ தன் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்துக் கொண்டே இருந்தான்.

ஒரு முறை என் காதலை சொல்ல வந்த நேரத்தில் , அவனும் உன்னிடம் காதலை சொன்னான். எவ்வளவு நாள் தான் நான் சொல்வேன் என்று நீ எனக்காக காத்துக் கொண்டு இருப்பாய். நீ அவன் காதலை ஏற்கும் காட்சியை கண்டேன். என் மௌனத்திற்கு தண்டனை உன் காதலை இழந்ததை என் கண்ணில் கண்டேன். தோல்வி ஒன்றும் எனக்கு புதிதல்ல..... இது தண்டனை, என் மௌனத்திற்கு கிடைத்த தண்டனை. நட்பை கலங்க படுத்த கூடாது என்று நினைத்தற்கு தண்டனையாக உன் காதலை இழந்தேன். அது தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எண்ணிடம் பேச்சை குறைத்துக் கொண்டாய்.... அவனிடம் அதிகம் பேச தொடங்கிவிட்டாய்.... நானும் அதிகமாக பேசிக் கொண்டு இருக்கிறேன். உனக்காக நான் எழுதிய கவிதைகளுடன்.

4 comments:

Vidhoosh said...

ச்சோ...
இப்ப நீங்க அவரைப் பாத்து பொறாமையா>

ஹ்ம்ம்.

இதை ஒரு கவிதையாகவே புனைந்திருக்கலாம்.

சிறிது செதுக்கிப் பாருங்களேன்..

Anonymous said...

எழுத்துப் பிழைகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இடுகையை வெளியிடும் முன்பு ஒரு முறை வாசித்து விட்டு வெளியிடுங்கள்.இது எழுத்து பிழையை தவிர்க்க உதவும். மற்ற படி இந்த தருணங்கள் பெரும்பாலும் காதலை சொல்லாமலே விட்ட நிறைய ஆண்களுக்கு நடந்திருக்கு. அதில் நானும் ஒருவன். அருமை.

குகன் said...

// Vidhoosh said...
ச்சோ...
இப்ப நீங்க அவரைப் பாத்து பொறாமையா>

ஹ்ம்ம்.

இதை ஒரு கவிதையாகவே புனைந்திருக்கலாம்.

சிறிது செதுக்கிப் பாருங்களேன்..
//

கவிதை எழுத முயற்சித்து கதையாக மாற்றிவிட்டேன். உங்களுக்காக இன்னொரு முறை முயற்சி செய்கிறேன்.

குகன் said...

// இங்கிலீஷ்காரன் said...

எழுத்துப் பிழைகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இடுகையை வெளியிடும் முன்பு ஒரு முறை வாசித்து விட்டு வெளியிடுங்கள்.இது எழுத்து பிழையை தவிர்க்க உதவும். //

முயற்சிக்கிறேன்.

// மற்ற படி இந்த தருணங்கள் பெரும்பாலும் காதலை சொல்லாமலே விட்ட நிறைய ஆண்களுக்கு நடந்திருக்கு. அதில் நானும் ஒருவன். அருமை.
//

விடுங்க பாஸ்... One-side லவ்னாலே அப்படி தான்.

LinkWithin

Related Posts with Thumbnails