வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, January 27, 2010

திருநங்கையை பற்றிய 'கோத்தி' குறும்படம்

கோத்தி

உள்ளத்தால் பெண்ணாக, உருவத்தால் ஆண்ணாக வாழும் திருநங்கையை பற்றிய குறும்படம்.

அன்பு ஆண்ணாக பிறந்து பெண்ணாக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறான். தன் மகனை பற்றி தெரிந்த தந்தை மகள் வாழ்க்கையை நினைத்து அவனை வீட்டை விட்டு விரட்டியடிக்கிறார். இரு பாலிலும் தன்னை காட்டிக் கொள்ள முடியாத அன்பு வளர்மதியாக மாறி இந்த சமூதாயத்தில் எப்படி வாழ்கிறான் என்பது தான் மீதி கதை.

பெண்ணாக மாற துடிக்கும் போதும், தெருவில் பிச்சை எடுத்து அடிவாங்கும் போதும் வெண்ணிலாவின் நடிப்பு பிரமாதம்.கதைக்கு பொருத்தமான தேர்வு என்று சொல்லலாம்.பல திருநங்கயர்களில் கேள்விகளை வளர்மதி அவர்களின் பிரதிநிதியாக கேட்கும் காட்சி அருமை.

இந்த குறும்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சி.ஜே.முத்துகுமார். ஒரு திரைப்படத்தில் சொல்ல வேண்டிய கதை குறும்படத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார். அடுத்த காட்சிக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் எடுத்திருப்பதால், பார்வையாளருக்கு உண்டாக்க வேண்டிய பாதிப்பு மனதில் உருவாக்கவில்லை.

படத்தை பார்க்க....

Part - 1


Part - 2



Part - 3



எரிபொருள்

சொல்ல வந்த தகவலுக்கும், கதை களத்திற்கும் சம்மந்தமில்லையோ என்று தோன்றுகிறது.

எரிபொருள் விலை உயர்வால் சாதான நடுத்தர குடும்பத்தினர் எவ்வளவு அவதை படுகிறார்கள் என்பதை தான் சொல்ல நினைத்திருக்கிறார். ஆனால், இதில் வெளிநாட்டில் இருக்கும் மகன் வெள்ளைக்காரியுடன் நீச்சல் அடிக்கும் காட்சி, பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யார் என்று தெரியாமல் நகர வாழ்க்கை, மனைவியின் மரணத்திற்கு அழக்கூடாது என்று சொல்லும் அரசியல்வாதி போன்ற காட்சிகள் தேவை தானா என்று தோன்றுகிறது.

காய்கறி வாங்கும் காட்சியும், மருந்து வாங்கும் காடியும் தவிர மற்ற காட்சிகள் 'எரிபொருள்' தலைப்புக்கு பொருத்தமாக இருக்கிறது. 'எரிபொருள்' தலைப்பு வைக்காவிட்டால் பார்வையாளருக்கு சொல்ல வந்ததை புரியாமல் போக வாய்ப்பு இருக்கிறது.

வசனங்களால் புரிய வைக்க வேண்டிய விஷயத்தை காட்சிகளால் புரிய வைத்தால் இயக்குநர் சி.ஜே.முத்துகுமாருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

படம் இணையதளத்தில் கிடைக்கவில்லை.

1 comment:

Rajeswari said...

கோத்தி- நல்ல கரு.

நன்றாக உள்ளது.

LinkWithin

Related Posts with Thumbnails