வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Sunday, September 6, 2009

யுவன் சந்திரசேகர் : கானல் நதி

வாழ்க்கையில் நடக்கும் ஒரு சில நிகழ்வுகள் ரனங்களாக தங்கிவிடுவதால், அது என்று ஆராத வடு மாறிவிடுகிறது. அந்த வடுவில் வாழ தெரிந்தவன் தான் வாழ தகுதியாவனாக தெரிகிறான். வடுவை தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தால், இந்த உலகத்தில் இருப்பவர்களால் நிராகரிக்கப்பட்டு தனிமையில் தள்ளப்படுக்கிறான். அப்படிப்பட்ட மனிதனின் வாழ்க்கையை தான் 'கானல் நதி' கதை.

'மோகன முள்' பிறகு முழு முழுக்க ஒரு இசை கலைஞனை மையமாக வைத்து வந்த நாவல் இது தான் என்று நினைக்கிறேன்.



தனஞ்செயன் முகர்ஜி என்ற ஹிந்தூஸ்தானி பாடகனின் சுற்றி நடப்பது கதை.

இந்திய இசைகளில் மிக பழமையான இசை ஹிந்தூஸ்தானி. த்ருபட், கயல், டப்பா, தரனா, தும்ரி, கஜல் என்று பல வகையில் ஹிந்தூஸ்தானி இசை வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான், பாங்ளாதேஷ், நேபால், ஆப்கான் என்று பல நாடுகளிலும் ஹிந்தூஸ்தானி இசை பரவியிருக்கிறது. இப்படி பழமை வாய்ந்த இசையை கற்ற தனஞ்செயன் ஒரு காதலால் எப்படி மனம் பித்து பிடித்து, குடித்து, குரல் சீரழிந்து போவதை யுவன் சந்திரசேகர் கண் முன்னே காட்சியாக கொண்டு வந்திருக்கிறார்.

வாழ்க்கையில் நடக்கும் எதிர் பாராத நிகழ்வுகளை ஏற்றுக் கொள்ள முடியாமல், தன்னை தானே நோகும் படி செய்து, மேலும் பல காயங்கள் தேடிக் கொண்டு.... இறுதியில் பரதேசி போல் அலைந்து வாழ்க்கை என்றால் என்னவென்று உணர்கிறான் தனஞ்செயன் முகர்ஜி.

தனஞ்சனின் முதல் கச்சேரி, ஸரயுவுடன் காதல், காதல் கை கூடாததால் மது, நண்பன் குருதாஸ்வுடன் சண்டை... இறுதியில் காதலித்த ஸரயு தாசியாக பார்த்து மனம் வேதனை படுவது, பரதேசியாக திரிந்த போது ஒரு முறையாவது ஸரயுவை அனுபவிக்க ஆசைப்பட்டு வேறு ஒரு பெண் தொடுவது, திருடி அடிவாங்குவது என்று பல பரிமாங்களில் வரும் கதாநாயகன் படிப்பவர்கள் நெஞ்சில் நீங்காத காயத்தை ஏற்படுத்துகிறான்.

உண்மையான இசை கலைஞனின் வாழ்க்கை எடுத்து அவரை பற்றி ஒரு வருடம் மேல் பல தகவல்கள் சேகரித்து நாவல் வடிவில் கொடுத்திருந்திருக்கும் யுவன் அவர்கள் கடின உழைப்பு அவர் எழுத்துகளில் பிரதிப்பலிக்கிறது.

இந்த புத்தகத்தை பற்றி நான் சொன்னது கொஞ்சம் தான். சொல்லாததை படித்து அனுபவியுங்கள்.

செப்.13 அன்று நல்ல குரு (யுவன் சந்திரசேகர்) சிறுகதை பயிற்சி பெற போகிறோம் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.


பக்கங்கள் : 316,
விலை :200
உயிர்மை பதிப்பகம்

1 comment:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

LinkWithin

Related Posts with Thumbnails