வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, April 7, 2010

சமூக கவிதைகள்

பதிநான்கு

உழவர் எல்லாம் புன்னகை சிந்தும்
- ஜனவரி பதிநான்கு
தமிழர்கள் எல்லாம் பெருமைக் கொள்ளும்
- ஏப்ரல் பதிநான்கு
குழந்தைகள் உதட்டில் இனிப்பு மிதக்கும்
- நவம்பர் பதிநான்கு
காதலர்கள் எல்லாம் பூக்கள் ஏந்தும்
- பிப்ரவரி பதிநான்கு

மகிழ்ச்சியான உள்ளங்களை
அஞ்சி நடுங்க வைக்கும்
- டிசம்பர் ஆறு....... !!

***

அன்றும் இன்றும்

1940

தேவை - புரட்சி செய்ய விருப்பமுள்ள இளைஞர்கள்
ஊதியம் - மரணம்
பரிசு - வீரத்தியாகி என்ற பட்டம்
பேன்ஷன் - இந்திய விடுதலை
பணியாற்றும் இடம் - இந்தியா

2010

தேவை - கணிப்பொறி கற்ற இளைஞர்கள்
ஊதியம் - மாதம் ஒரு லட்சம்
பரிசு - வெளிநாட்டு கிரீன் கார்ட்
பேன்ஷன் - சுக போக வாழ்க்கை
பணியாற்றும் இடம் - அமெரிக்கா

1940 ல்
நாட்டுக்காக வாழ்க்கையை இழந்தோம் |
2010 ல்
சுகபோக வாழ்க்கைகாக நாட்டை இழந்தோம் |

***



லஞ்சம்

கையேந்தி
யாசகம் கேட்டான்
பிச்சைக்காரன்
ஒன்றும் கிடைக்கவில்லை...


அதிகாரத்துடன்
அதட்டிக் கேட்டான்
அரசாங்க அதிகாரி
கிடைத்தது
ஒரு லட்சம் !

2 comments:

க.பாலாசி said...

கடைசிக்கவிதை தற்போதைய நடைமுறையின் பிரதிபலிப்பு... நல்ல கவிதைகள்...

Sakthi said...

attagasam, amarkkalam...

LinkWithin

Related Posts with Thumbnails