வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, March 17, 2010

மொழியற்றவள்

விடுயற்காலை 5.45 மணி. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் எட்டி பார்க்கும் வேளை. இயற்கை அழகை ரசிக்க நேரமில்லாமல் ஆட்டோவில் இருந்து அவசரமாக தியாகு இறங்கினான்.



"பயணிகள் கனிவான கவனத்திற்கு... பெங்களூர் வரை செல்லும் சகாப்தி எக்ஸ்பர்ஸ் இன்னும் பத்து நிமிடத்தில் இரண்டாவது ப்ளாட்பாரத்தில் இருந்து புரப்படும்" என்று சென்ட்ரல் ரயில் அறிவிப்பை கேட்டது விரைந்தான்.

தன் பெட்டியை தூக்கிக் கொண்டு அவர அவசரமாக ஒடினான். பல பேரை இடித்து, அவர்களிடம் மின்னிப்பு கேட்க கூட அவனுக்கு நேரமில்லை. இடிப்பட்டவர்கள் திட்டியதை காதில் கேட்காதவாரு விரைந்தான்.

வேகமாக வந்ததில் இரண்டு நிமிடம் முன்னதாகே வந்தான். தன் இறுக்கை பார்த்து அமர்வதற்கும், ட்ரெயின் எடுப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். தன் டிக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு ரயில் பெட்டி 'C4' வை தேடினான்.

'C1...C2...C3........C4'

"அப்பாடா வந்தாச்சு" என்று உள்ளூர நினைத்துக் கொண்டு பெட்டிக்குள் எறினான்.

ரயில் பெட்டி முழுக்க ஏ.சி. இடது பக்கம் மூன்று பேரும், வலது பக்கம் இரண்டு பேரும் அமர சீடு வரிசையாக இருந்தது. வலது பக்கம் இருந்த தனது சீட் எண்.19 நெருங்கும் போது பக்கத்து சீட்டில் ஒரு பெண் ஆறு மாத குழுந்தையோடு இருப்பதை பார்த்தான். அவள் பார்க்க வட இந்திய பெண் போல் தெரிந்தாள். கை குழந்தை சிவப்பாக அம்மாவின் நிறத்தில் இருந்தது.

தன் பெட்டியை மேலே வைத்து விட்டு, பக்கத்தில் இருந்த பெண்ணை பார்த்தும் பார்க்காதது போல் ஒரு புத்தகத்தை எடுத்து படித்தான்.

தன் முன் இறுக்கையில் இருந்து ஒரு பாட்டியிடம் இந்தியில் எதோ பேசினாள். தியாகுவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இந்தியில் இரண்டு, மூன்று வார்த்தை மட்டும் தெரியும். அந்த வார்த்தைகள் அவள் பாட்டியிடம் பேசியதில் இல்லை.

கொஞ்ச நேரத்தில் அந்த வட இந்திய பெண் எழுந்தாள். தியாகு எழுந்து அவளுக்கு வழி விட்டான். அந்த பெண் முன் இறுக்கையில் பாட்டி பக்கத்தில் அமர்ந்தாள். கை குழந்தையோடு ஒரு ஆடவர் பக்கத்தில் அமர அவளுக்கு பல சங்கடங்கள் இருப்பதை தியாகுவால் உணர முடிந்தது. அந்த பெண் செல்ல, பாட்டி பக்கத்தில் அமர்ந்து இருந்த பதினாறு வயது தக்க ஒரு யூவதி எழுந்து தியாகு பக்கத்தில் அமர்ந்தாள். அவள் சற்று நடுங்கிய படி தான் தியாகு சீட்டுக்கு வந்தாள். அவளுக்கு அதில் விருப்பமில்லை என்பது அவள் கண்கள் காட்டிக்கொடுத்தது.

கல்லூரி படித்த காலத்தில் இது போல நடந்திருந்தால் தியாகு அந்த யூவதியை பேசிய அருத்திருப்பான். அவன் ஜோல் மழையால் ரயில் பெட்டியே நனைந்திருக்கும். இப்போது, திருமணம், குழந்தை என்று வந்த பிறகு வேலை, பணம் போன்ற விஷயத்தில் தியாகு கவனம் இருந்தது. நேரம் கிடைக்கும் கடைத்த புத்தகத்தை படிப்பான். அந்த யூவதியை கண்டுக் கொள்ளாமல் இருந்தால் தான் அவள் நடுக்கம் குறையும் என்று அவளை கவனிக்காத மாதிரி இருந்தான்.

ட்ரெயின் புறப்பட்டு ஐந்து நிமிடத்தில் ஒரு ஆண்ணும், பெண்ணும் தியாகு முன் பக்கத்தில் இருந்த பாட்டியிடம் காலை வணங்கி சிரித்து பேசினார்கள். பார்க்க இருவரும் புத்திதாக திருமணமானவர்கள் போல் இருந்தனர். தங்களை சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நினைக்காமல் பாட்டி காலை தொட்டு வணங்க அவர்கள் யோசிக்கவில்லை. ஒருவருக்கு மரியாதை கொடுக்க, ‘இடம்’ அவர்களுக்கு தடையாக தெரியவில்லை. அந்த தம்பதியர்கள் இருவரும் பாட்டியின் இடது பக்கத்து இறுக்கையில் அமர்ந்து, கை குழந்தை வைத்திருக்கும் பெண்ணிடம் சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர். அந்த ஆண் தன் பக்கத்தில் அமர்வான் என்று தியாகு எதிர்பார்த்தான். ஆனால், அவன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.

தியாகு புத்தகத்தை படித்துக் கொண்டு அப்படியே தூங்கினான். அப்போது தான் அவனுக்கு தூங்கியது போல் இருந்தது, அதற்குள் ஒருவர் அவனை எழுப்ப காலை சிற்றூண்டி கொடுத்தனர். சிற்றூண்டியை தன் கையில் வாங்கிக் கொண்டு தன் கடிகாரத்தை பார்த்தான். கடிகாரம் ஒரு மணி நேரம் கடந்திருந்தது. தன் பக்கத்து இறுக்கையில் இருக்கு யூவதி குழந்தைக்கு விளையாட்டு காட்டிக் கொண்டு இருந்தாள். அந்த குழந்தையின் அம்மா சிரித்து பேசி சாப்பிட்டு கொண்டு இருந்தாள். அந்த புதுமண தம்பதியர்கள் முன்பே சாப்பிட்டு முடித்திருந்தனர். புது தம்பதியர்களுக்கு அந்த யூவதியிடம் இருந்து குழந்தை வாங்கவில்லை. கொஞ்ச நேரத்தில் குழந்தையின் அம்மா சாப்பிட்ட பிறகு ஒரு பால்பூட்டியை யூவதியிடம் கொடுத்தாள்.

பசி முகத்துடன் அந்த யூவதி பால்பூட்டி கழுவ எடுத்து சென்றாள். கழுவிய பூட்டியை குழந்தையின் அம்மாவிடம் கொடுத்த போது சரியாக கழுவாததிற்கு திட்டினாள். அப்போது தான் தியாகுவுக்கு தெரிந்தது அந்த யூவதி வேலை செய்யும் ‘வேலைக்கார பெண்’ என்று !

இவர்கள் வீட்டு பெண்ணாக இருந்தால் ஒரு ஆடவன் பக்கத்தில் அமர ஏற்றுக் கொண்டு இருப்பார்களா ? எல்லோரும் சாப்பிடும் போது அவளை மட்டும் குழந்தையை பார்க்க சொல்லியிருப்பார்களா ? சின்ன விஷயத்துக்கு எல்லோருமுன் திட்டுவார்களா ? என்று பல கேள்விகளை தியாகு தன் மனதில் கேட்டுக் கொண்டான்.

பெங்களூர் வந்தது மேலே இருக்கும் அவன் பெட்டியை எடுக்கும் போது தெரியாமல் அவன் கை யூவதி மேல் பட்டது. அச்சத்தில் அவள் கை நடுங்கியது. இவ்வளவு நேரம் அவள் உள்ளூர நடுங்கி அமர்ந்ததை அந்த நோடியில் தியாகுவுக்கு தெரிந்தது. ரயிலில் இருந்து இறங்கியதும், குழந்தை பெற்ற தாய் எந்த சுமையும் இல்லாமல் தன் பாட்டியுனும், புதுமண தம்பதியர்களுடனும் பேசிக் கொண்டு நடந்தாள். அந்த யூவதி குழந்தையும், குழந்தையின் பையையும் சுமந்துக் கொண்டு செல்வதை தியாகு பரிதாபமாக பார்த்தான்.

2 comments:

Raju said...

கொஞ்சம் எழுத்து பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்..!

Unknown said...

வாசித்தோம் ,ரசித்தோம்

LinkWithin

Related Posts with Thumbnails