வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, March 2, 2010

வங்கி ரகசியம் : கார்ட் வேண்டுமா ?



ஒரு காலத்தில் மாத சம்பளத்தை வேலை செய்யும் நிறுவனம் ஒரு கவரில் போட்டு கொடுப்பார்கள். அந்த கவரை பிரித்து சம்பளப்பணத்தை சரி செய்த பிறாகே அந்த இடத்தை விட்டு நகர்வோம். சம்பளக் கவரை அப்படியே வீட்டில் அம்மா, அப்பாவிடம் கொடுத்து அசிர்வாதம் பெற்று, அதன் பின் மாதம் செலவுக்கு பணம் வாங்கும் சில சென்டிமெட் சீன் எல்லாம் முதல் தேதில் நடக்கும்.

ஆனால் இப்பொது யாரும் சம்பத்தை கவரில் வாங்குவதில்லை. சம்பள பணத்தை உருவிக் கொண்டு வருகிறோம். ஆட ! ஆமாங்க...!! சம்பளப்பணத்த (ATM) உருவுறாங்கள...!! (ATM) கார்ட் வந்த பிறகு பலர் இன்று வங்கியில் நீண்ட வரிசையில் நின்று டோக்கனில் பணம் எடுக்கும் கூட்டம் குறைந்து விட்டது.

'பாஸ்புக் என்ட்ரி' கூட இன்டர்னெட் பாக்கிங் (Internet Banking) வந்த பிறகு அதுவும் குறைந்து விட்டது. கடைசி ஆறு மாத பண பட்டுவடா எல்லாமே இன்டர்னெட்டில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

'விசிட்டிங் கார்ட்' சைஸ் அட்டை தான். பணத்தை கையில் இருந்து பொருட்களை வாங்குவதை விட நம் கார்ட்டை தெய்து பொருள் வாங்குவது பாதுக்காப்பானது. பத்தாயிரம் ரூபாய் கொடுத்து டி.வி வாங்க வேண்டும் என்றால் பணத்தை கையில் எடுத்து செல்ல வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் கையில் கொண்டு போகும் பணத்துக்கு எந்த ஆபத்து வேண்டுமானாலும் வரலாம். அந்த பணம் நம் கார்டில் இருப்பது ஒரு விதத்தில் பாதுக்காப்பானது.அதே போல் வெளியூர் பயணம் செய்யும் போது பணத்தை பெட்டியில் எடுத்து சொல்வதை விட நாம் கார்ட்யில் எடுத்து செல்வது இன்னும் பாதுக்காப்பானது.

இப்படி எல்லாம் கார்ட் மயமாகி விட்டது. இப்பொது எல்லோருமே வங்கியில் ஒரு அக்கோன்ட் ஓபன் பண்ணும் போதே டெபிட் கார்ட் வேண்டும் என்று விண்ணப்பத்தையும் சேர்த்து தான் விண்ணப்பிக்கிறார்கள். டெபிட் கார்ட் வழங்கிய பிறகு அதற்கு சேவை செய்ய வங்கிக்கு அதிகம் செல்வாகும். ஆனால், வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்ட் சேவை செய்ய தான் விரும்புகிறார்கள். அப்படியென்றால் டெபிட் கார்ட் சேவை செய்யும் வங்கிகளுக்கு அப்படி லாபம் கிடைக்கும்....?

டெபிட் கார்ட் ஒரு புறம் இருக்கட்டும். கிரடிட் கார்ட் வாருங்கள். இன்று குறைந்த பட்சம் மூவாயிரம் சம்பளம் வாங்கும் நபர் கூட கிரடிட் கார்ட் வைத்திருக்கிறார். கிரடிட் கார்ட்டில் பொருளை வாங்கி ஒரு மாதத்தில் கட்டிவிட்டால் எந்த வட்டியும் கிடையாது. வாங்கிய பொருளுக்கு பணம் செலுத்தவில்லை என்றால் ஒவ்வொரு மாதமும் 3 சதவீதம் வட்டி !! அப்படி என்றால்.... பணம் செலுத்தாமல் இருந்தால் தானே வங்கிக்கு லாபம். கிரடிட் கார்ட் பயன்படுத்தி பொருளை வாங்கினாலே வங்கிக்கு லாபம் உண்டு அது எப்படி ?

இப்படி இந்த 'கார்ட்' விஷயத்தில் பல விபரங்களும், விவகாரங்களும் ஒளிந்துக் கொண்டு இருக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் 'ஐ.டி'யை விட வங்கி எல்லாம் பெரும் அளவில் வளரும் என்பது தொழிற்வல்லுநர்களின் கருத்து.பல ஐ.டி நிறுவனத்தின் பிராஜெக்ட் வங்கி சம்மந்தப்பட்டதாகவே இருக்கிறது. ஏன்...? இன்னும் ஐந்து ஆண்டுகளில் வங்கி ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கூட கிடைக்கலாம்...!! வங்கியின் Back-office வேளை வாய்ப்புகள் அதகமாக காணப்படும்.... பல கேள்விகளுக்கு விடை காணுங்கள்.

(தொடரும்...)

1 comment:

Venkat M said...

Good start Gugan... waiting for the next post..

LinkWithin

Related Posts with Thumbnails