வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, February 18, 2009

பாலுணர்வு கதை : அவளும் நானும் ஒர் இனம்

(இது பாலுணர்வு சம்மந்தப்பட்ட கதை மட்டுமே...! பாலுணர்வை தூண்டும் கதையல்ல...!! )

"வர்ஷா...ஆபிஸ்க்கு டைம் ஆச்சி. லன்ட்சு ரெடியா" என்று என் மனைவி வர்ஷாவை அவசர படுத்தினேன். எங்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் தான் ஆகிறது. ஒவ்வொரு விஷயங்களையும் எனக்காக பார்த்து பார்த்து செய்வாள். என் அம்மா கூட இப்படி கவனித்ததில்லை. அன்பின் உருவாக இருந்தாள். 'அந்த' விஷயம் மட்டும் எங்களுக்குள் நடக்க வில்லை என்றாலும், அவள் காட்டிய கனிவு, புன்னகை எதிலும் கலப்படமில்லாதவை.

திருமணமான புதிதில் அவளுக்கு ‘இந்த’ உறவில் விருப்பமில்லாமல் இருந்தாள். நானும் அவளை கட்டாய படுத்தவில்லை. அதன் பின் என் வேலை தொல்லைகள் எங்கள் உறவுக்கு தடைப்போட்டது. பத்திரிக்கை நிருபரான நான் பல நாட்கள் இரவு வரை வேலை செய்ய வேண்டும். இரவு இரண்டு, மூன்று மணி கூட வீட்டுக்கு வந்திருக்கிறேன். புன்னையுடன் கதவு திறந்து என்னை வரவேற்பாள். ஒரு முறை கூட நான் காலதாமதமாக வந்ததிற்கு திட்டியதில்லை. என்னிடம் ஒர் இரு வார்த்தைகள் பேசி விட்டு தூங்கிவிடுவாள். இருவரும் ஒரே படுக்கையில் தான் படுக்கிறோம். ஆனால், உறவு கொள்வதில்லை.

வர்ஷா எனக்கு கொடுத்த லன்ட்சை எடுத்துக் கொண்டு அவசரமாக என் பத்திரிக்கை ஆபிஸ்க்கு சென்றேன்.

" என்ன சுந்தர் ! இவ்வளவு லேட்டு....??" என்றார் எடிட்டர்.

" ஏன் ஸார் ! கேக்க மாட்டிங்க. வேலைய முடிச்சிட்டு நைட் லேட்டா தான் வீட்டுக்கு போனேன். அதுக்கு பாராட்டாதீங்க. லேட்டா வந்ததுக்கு மட்டும் கேள்வி கேலுங்க..." என்று சகித்துக் கொண்டான்.

" சரி ! கோச்சிக்காத... அந்த பொண்ணுங்க எல்லாம் வைட் பண்ணுறாங்க. சீக்கிரம் போய் கவர் பண்ணு..." என்று சொல்லி எடிட்டர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

தினமும் இப்படி யாரையாவது கவர் பண்ண வேண்டிய வேலையை கொடுத்து விட்டு அவர் போய் விடுவார். எல்லாம் சரி செய்தியையும் சேகரித்த பிறகு வெட்டுவதற்கு மட்டும் சரியான நேரத்தில் வந்துவிடுவார்.

" வா சுந்தர் போவோம்மா... டைம் ஆச்சு..." என்றான் கேமிராமேன்.

" இவன் அடுத்த தொல்லை...." என்று மனதில் நினைத்துக் கொண்டு கேமிராமேனனுடன் சென்றேன்.

எங்கள் அலுவலக விருந்தினர் அறையில் காத்திருந்த பெண்களிடம் பேட்டி எடுப்பதற்காக அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்றோம். மொத்தம் ஆறு பெண்கள் இருந்தார்கள். அனைவரும் பாலியல் தொழில் செய்பவர்கள். பாலியல் தொழிலாளர்களை பற்றி ஒரு செய்தி தொகுப்புக்காக அவர்களை அழைத்திருந்தோம். பொதுவாக இது போன்ற விஷயங்களுக்கு நிருபர்கள் தேடி செல்வார்கள். என் எடிட்டருக்கு இது போன்ற விஷயங்களில் அனுபவம் அதிகம். அவர்களை அலுவகத்திற்கே அழைத்து வந்து பேட்டி எடுக்க வைத்துவிட்டார்.

அந்த ஆறு பெண்களில் இரண்டு பெண்கள் அதிக கவர்ச்சியுடன் உடை அணிந்திருந்தனர். எங்கள் இருவரையும் 'உறவுக்கு' அழைப்பது போல் அவர்கள் பார்வை இருந்தது. நான் அதை பொருட்படுத்தவில்லை. ஆனால், கேமராமென் அந்த இரண்டு பெண்களை வலைத்து வலைத்து போட்டோ எடுத்தான். எப்படி எடுத்தாலும் பத்திரிக்கையில் போடும் போது முகத்தை மறைத்து தான் போடுவோம். இருந்தாலும், புகைப்படம் எடுப்பது எங்கள் சம்பிரதாயம்.

ஒரு வழியாக பாலியல் தொழிலாளர்களை பேட்டி எடுத்து விட்டு நான் அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். பேட்டி கொடுத்ததற்காக எடிட்டர் அந்த பெண்களுக்கு ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்து அனுப்பினார்.

அவர்கள் கூறியதை செய்தியாக தொகுத்து எடிட்டருக்கு அனுப்பினேன். எல்லாம் வேலை முடிவதற்குள் மாலை ஆறு மணியானது. இன்றாவது வீட்டுக்கு சீக்கிரம் செல்லலாம் என்று வண்டி எடுக்க சென்றேன். என் செல்போன் மணி ஒலித்தது. எடுத்தேன்.

" ஹலோ... சுந்தர் இருக்காருங்களா.." எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல்.

" ஆமாங்க.... சுந்தர் தான் பேசுறேன். சொல்லுங்க என்ன விஷயம்..." என்றேன்.

" என் பேரு ரம்யா. நீங்க பாலியல் பத்தின செய்தி போட போறதா கேள்வி பட்டேன். அத பத்தி உங்க கிட்ட பேசனும்...." என்றாள்.

இவளும் ஒரு பாலியல் தொழிலாளியாக தான் இருப்பாள். பேட்டிக் கொடுப்பதால் நூறு ரூபாய் வருகிறது என்றால் சும்மாவா ???

"ஸாரி மேடம்...! இப்போ தான் ஆறு செக்ஸ் வொர்க்கர் இன்டர்வியூ எடுத்து நீயூச் கம்போஸ் பண்ணேன். அடுத்த வீக் வேணும்னா நா உங்கள கான்டக்ட் பண்ணுறேன்..." என்றேன்.

" நான் செக்ஸ் வொர்க்கர் இல்ல.... லெஸ்பியன் !" என்றாள்.

எனக்கு தூக்கி வாறி போட்டது. 'பாலியல்' பற்றின செய்தி என்றவுடன் 'செக்ஸ் வொர்க்கர்' மட்டும் தான் நினைவுக்கு வருகிறார்கள். ஓர் இன சேர்க்கை ( லெஸ்பினயன், கே ) போன்றவர்கள் ஏன் நினைவுக்கு வருவதில்லை என்ற கேள்வி எனக்குள்ளே கேட்டு கொண்டேன். ஒரு பெண் தான் விபச்சாரி என்று சொல்வதை விட 'லெஸ்பியன்' என்று சொல்லுவதற்கு அதிக துணிச்சல் வேண்டும். கண்டிப்பா இந்த பெண்ணை இன்டர்வியூ எடுத்தே ஆகனும் என்று தோன்றியது.

" உங்கள எங்க பார்க்கலாம்...." என்றேன்.

" நுங்கபாக்கம்ல இருக்குற இஸ்பானி சென்டர்க்கு வர முடியுமா..." என்றாள்.

" பக்கத்துல தான் இருக்கீங்களா... நான் பத்து நிமிஷத்துல வந்திடுறேன்...." என்று சொல்லி வண்டியை எடுத்தேன். அவளிடம் என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்பதை மனதில் ஒரு முறை சொல்லிக் கொண்டே வந்தேன். பத்து நிமிடத்தில் வர இடத்திற்கு ஐந்தே நிமிடத்தில் வந்து விட்டேன்.
இஸ்பானி சென்டரில் பல அழகான பெண்கள் நின்றுக் கொண்டு இருந்தார்கள். செல்போனுக்கு கால் வந்த நம்பருக்கு தொடர்பு கொண்டேன். என் எதிரில் நின்ற ஒரு பெண் தன் செல்போனை எடுத்தாள்.

" ஹலோ நான் ரம்யா பேசுறேன். வந்துடீங்களா....!!" என்றாள்.

அந்த பெண் தான் ரம்யா என்று உறுதி செய்துக் கொண்டேன்.

பக்கத்தில் இருப்பவளுக்கு போன் போட்டு அம்பது பைசா தண்டம் என்று நினைத்துக் கொண்டேன். அங்கு இருந்த ஒரு காபி ஷாப்பில் இருவரும் சென்று அமர்ந்தோம். சிம்ரன் தேகமும், ஸ்ரீ தேவி முகமும், ரம்பா உதடும் என்று மொத்த கோடம்பாக்கமே அவள் உருவத்தில் வந்து நின்றது. "ச்சே... போன வாரம். சினிமா கவரேஜ் பண்ணதுல இருந்து வர்ணனையில கூட சினிமா நடிகை தான் வரனுமா !" என் மனதில் நினைத்துக் கொண்டேன்.

" நீங்க எப்போ இருந்து லெஸ்பியனா இருக்கீங்க....?" என்றேன்.

எத்தனை வருஷமா எழுதுறீங்க, டான்ஸ் அடுறீங்க என்று கேள்வி கேட்டு தொடங்கி எனக்கு அதே மாதிரியான கேள்வி தான் அவளிடமும் வந்தது.


(தொடரும்.....
கொஞ்சம் பெரிய கதை என்பதால் அடுத்த பதிவில் முடிவடையும் )

5 comments:

கிஷோர் said...

//(தொடரும்.....
கொஞ்சம் பெரிய கதை என்பதால் அடுத்த பதிவில் முடிவடையும் )//

இது ஒரு மோசமான உத்தி நண்பரே.

கதை நன்றாக சென்றால் எவ்வளவு பெரிதாய் இருந்தாலும் படிப்பார்கள்

- இப்படிக்கு பாதி கதை படிக்கும்போது புத்தகம் தொலைத்தவன் :)

RAMASUBRAMANIA SHARMA said...

கதை நன்றாக போய்க்கொண்டிருந்தது....ஆனால் முழுவதும் படித்த பிறகு...(முடிவை ஓர் அளவுக்கு அனுமானம் செய்ய முடிகிற்து)..கருத்துரை இடுவது நலம் என்று நினைக்கிறேன்...waiting for your second part to complete this comments page....however, the article is good....

RAMASUBRAMANIA SHARMA said...

pl send email followup to my gmail id....

குகன் said...

//கிஷோர் said...

இப்படிக்கு பாதி கதை படிக்கும்போது புத்தகம் தொலைத்தவன் :)

//

மீதி கதையை பதிவில் ஏற்றிவிட்டேன். பார்க்கவும் :)

http://guhankatturai.blogspot.com/2009/02/2.html

குகன் said...

// RAMASUBRAMANIA SHARMA said...
கதை நன்றாக போய்க்கொண்டிருந்தது....ஆனால் முழுவதும் படித்த பிறகு...(முடிவை ஓர் அளவுக்கு அனுமானம் செய்ய முடிகிற்து)..கருத்துரை இடுவது நலம் என்று நினைக்கிறேன்...waiting for your second part to complete this comments page....however, the article is good....//


Thanks :). Please read the remaining part and give ur comments.

LinkWithin

Related Posts with Thumbnails