வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, June 30, 2009

வீடு வாடகைக்கு - 4

காட்சி - 1, காட்சி - 2, காட்சி - 3

காட்சி - 4

ஏகாம்பரம் : வாப்பா... என்ன இந்த மாசம் வாடகையா...
சுந்தர் : இல்ல ஸார்...எனக்கு வேலை போய்ட்டுச்சு,, ஊருக்கு போலாம் இருக்கேன்.

ஏகாம்பரம் : நேத்து வரைக்கும் வேலைக்கு போய்ட்டு தானே இருந்த !
சுந்தர் : இப்போ இப்படி தான் ஸார்... எப்போ வேலையில இருந்து தூக்குறாங்கனு தெரிய மாட்டீங்குது...

ஏகாம்பரம் : சரிப்பா....நீ ஊருக்கு போய் இரண்டு மாசம் இருந்திட்டே வா...
சுந்தர் : நா ரூம்ம காலிப் பண்ணுறேன்.

ஏகாம்பரம் : ரொம்ப சந்தோஷம்... ! ( அப்பாடா இனிமே இரண்டு பேர சமாளிக்க தேவையில்ல...)
சுந்தர் : அட்வான்ஸ் இப்ப கொடுத்தீங்கனா..!

ஏகாம்பரம் : யோவ் ! Notice கொடுக்காம ஒரு லட்சம் கேட்டா என்ன பண்ணுறது,
சுந்தர் : Notice கொடுக்காம தான் எங்கள வேலைய விட்டு அனுப்சாங்க...



ஏகாம்பரம் : சரி...! இரண்டு நாள்ல எப்படியாவது பணத்த கொடுக்குறேன்.

[ சுந்தர் மாடிக்கு போகாமல் வெளியே செல்கிறான். கொஞ்ச நேரத்தில் ரங்கன் வீட்டுக்கு வருகிறான். ]

ஏகாம்பரம் : ஐயோ...ராத்திரி வர வேண்டியவ பகல்ல வந்திருக்கானே.... என்னப்பா உடம்பு சரியில்லையா...
ரங்கன் : எனக்கு வேல போய்டுச்சு...

ஏகாம்பரம் : உனக்கும் வேல போய்டுச்சா...
ரங்கன் : உனக்கும்னா....!

ஏகாம்பரம் : ஒண்ணுமில்ல சொல்ல வந்தத சொல்லு..
ரங்கன் : ஊருக்கே போலாம் இருக்கேன். அட்வான்ஸ் கொடுத்தா...

ஏகாம்பரம் : அடபாவிங்களா... ! ( இப்படி எல்லாரும் சேர்ந்து அட்வான்ஸ் கேட்டா...நா எங்க போறது...) அட்வான்ஸா சொல்லுறதுக்கு பேரு தான் அட்வான்ஸ்... இப்ப கேட்டா என்ன பண்ணுறது...?
ரங்கன் : இப்பவே தரனும் இல்ல.... இரண்டு நாள் கழிச்சு தாங்க.

[ ரங்கன் மாடிக்கு செல்ல...]

ஏகாம்பரம் : இரு..இரு.. மேல கிளினிங் வேல நடக்குது.
ரங்கன் : என்ன ஸார்... எப்ப பார்த்தாலும் கிளிங் வேல சொல்லுறீங்க..

ஏகாம்பரம் : ( அவசரத்து அந்த போய் தேனே வருது... )நீ தான் நிறைய கோட்டு போட்டிருக்க. அத கிளின் பண்ண வேண்டாம். போ..போ.. போய்ட்டு கொஞ்ச நேரம் கலிச்சு வா...
ரங்கன்: ஆபிஸ்ல இதே தான் சொன்னாங்க... நீங்களுமா...!!

[சொல்லி விட்டு ரங்கன் வெளியே செல்கிறான். கொஞ்ச நேரத்தில் ரங்கனும், சுந்தரும் சேர்ந்து வருகிறார்கள் ]

ஏகாம்பரம் : என்னது இரண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கீங்க.... தனி தனி வந்தாலே சமாளிக்க முடியாது...
சுந்தர் : ஏய்யா...ஒரே வீட்ட இரண்டு பேருக்கு வாடக விட்டு இரண்டு அட்வான்ஸ் வாங்கியிருக்க...

ரங்கன் : இதுவரைக்கும் நாங்க கொடுத்த வாடக, அட்வான்ஸ் கொடுக்குற... இல்ல கன்ஸூமர் கோர்ட்க்கு போவோம்.
ஏகாம்பரம் : பிச்சக்காரனில இருந்து சாப்ட்வேர் வரைக்கு கன்ஸூமர் கோர்ட்க்கு சொல்லி மிரட்டுறாங்களே...

சுந்தர் : பணத்த கொடுக்குறீயா இல்லையா...
ஏகாம்பரம் : இருங்கையா... கொண்டுவந்து கொடுக்குறேன்.

[ஏகாம்பரம் உள்ளே சென்று பணத்தை எடுத்து வருகிறான். சுந்தர், ரங்கன் பணத்தை வாங்கி செல்கிறார்கள். ]

கார்த்திக் : பாத்தியப்பா... இதுக்கு தான் ரொம்ப பேராசப்படக் கூடாது சொல்லுறது..
ஏகாம்பரம் : இப்ப எதுக்கு இத சொல்லுற...

கார்த்திக் : 'டிராம்மானா ஒரு மெசேஜ் சொல்லனும்ல..

[ ஏகாம்பரம் வீடு காலி என்று போட் மாட்டுகிறான் ]

ப்ரோக்கர் : வீடு காலி போடு பார்த்தேன். மூனு ஷிப்ட்ல வேல செய்ற பசங்க. ஒரு ரூம்ம மூனு பேருக்கு வாட விடுவோம்.
ஏகாம்பரம் : உன்ன தான்டா தேடுறேன். டேய் கார்த்திக் உன்ன பீரோ சொன்னவ வந்திருக்கான் வாடா...

[ ஏகாம்பரம், கார்த்திக் இருவரும் சேர்ந்து பிரோக்கரை அடிக்கிறார்கள். ]

-- முற்றும் --

2 comments:

கலையரசன் said...

தெடர்ந்து படிக்கிறேன்...
நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!

குகன் said...

// கலையரசன் said...
தெடர்ந்து படிக்கிறேன்...
நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!
//

வாங்க கலையரசன் ! ரொம்ப நன்றி :)

LinkWithin

Related Posts with Thumbnails