வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, June 25, 2009

வாடிய பிஞ்சுகள்



பறவைப் போல பறக்கும் வயதில்
பேரூந்து பயணிகளிடம் பிச்சை கேட்க !
பரதம் ஆடும் பொழுதில்
பாவாடை கிழிந்து தெருவோரம் கிடக்க !
சித்தரங்கள் வரையும் இடத்தில்
சிறுவர் தொழிலாளி உருவெடுக்க !
முல்லை மலர்ப்போல் சிரிக்க வேண்டிய சிறுமி
முரவாசல் வேலைக்காக காத்துக்கிடக்க !

சின்ன சிறு பெட்டியுடன்
பள்ளி செல்லும் நேரத்தில்
சிவகாசி தீப்பெட்டி
தொழிற்சாலையில் வேலை செய்ய....

வாடிய மலர்களுக்காக
வாடிய நெஞ்சங்களே !
மீண்டும் ஒரு முறை வாடும்
இந்த பிஞ்சுகளுக்காக.....



இளைஞர்கள் கையில்
உள்ளதோ எனது தேசம்
இளைஞர்களாக மாறவேண்டிய
சிறுவர்களுக்கு வனவாசம் !

எங்கு போகிறது எனது தேசம்
என்ற வினாவுடன் நான் இருக்கிறேன்
அவர்கள் வாழ்க்கையின் விடைக்காக
வினாவுடன் யாரிடம் செல்ல வேண்டுமோ ?

3 comments:

Vidhoosh said...

///இளைஞர்கள் கையில்
உள்ளதோ எனது தேசம்
இளைஞர்களாக மாறவேண்டிய
சிறுவர்களுக்கு வனவாசம் !///

சூப்பர் சார்...:) Hat's off to you.

குகன் said...

// Vidhoosh said...

சூப்பர் சார்...:) Hat's off to you.
//

Thank you Vidhoosh.

Unknown said...

Nice

LinkWithin

Related Posts with Thumbnails