
பறவைப் போல பறக்கும் வயதில்
பேரூந்து பயணிகளிடம் பிச்சை கேட்க !
பரதம் ஆடும் பொழுதில்
பாவாடை கிழிந்து தெருவோரம் கிடக்க !
சித்தரங்கள் வரையும் இடத்தில்
சிறுவர் தொழிலாளி உருவெடுக்க !
முல்லை மலர்ப்போல் சிரிக்க வேண்டிய சிறுமி
முரவாசல் வேலைக்காக காத்துக்கிடக்க !
சின்ன சிறு பெட்டியுடன்
பள்ளி செல்லும் நேரத்தில்
சிவகாசி தீப்பெட்டி
தொழிற்சாலையில் வேலை செய்ய....
வாடிய மலர்களுக்காக
வாடிய நெஞ்சங்களே !
மீண்டும் ஒரு முறை வாடும்
இந்த பிஞ்சுகளுக்காக.....

இளைஞர்கள் கையில்
உள்ளதோ எனது தேசம்
இளைஞர்களாக மாறவேண்டிய
சிறுவர்களுக்கு வனவாசம் !
எங்கு போகிறது எனது தேசம்
என்ற வினாவுடன் நான் இருக்கிறேன்
அவர்கள் வாழ்க்கையின் விடைக்காக
வினாவுடன் யாரிடம் செல்ல வேண்டுமோ ?
3 comments:
///இளைஞர்கள் கையில்
உள்ளதோ எனது தேசம்
இளைஞர்களாக மாறவேண்டிய
சிறுவர்களுக்கு வனவாசம் !///
சூப்பர் சார்...:) Hat's off to you.
// Vidhoosh said...
சூப்பர் சார்...:) Hat's off to you.
//
Thank you Vidhoosh.
Nice
Post a Comment