
அடையாரில் ஒருவர் பன்றி காய்ச்சலுக்கு மருந்து இருப்ப சொல்லி சிரிச்சை செய்ய, இன்னொரு பக்கம் பன்றி காய்ச்சலுக்கு பயன் படுத்தும் 'மாஸ்க்' அசுர விலை சொல்லி விற்க, ஊடகங்களும் தலைப்பு செய்திகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையை சொல்லி பிரசுரம் செய்ய.... யப்பா யப்பப்பா.... எதோ சென்னையே பன்றி காய்ச்சல் தவிப்பது போல் பல பீதிகளை பரப்புகிறார்கள். ஒவ்வொரு முறை இது போன்ற செய்திகள் படிக்கும் போது எனக்கு தொண்டை வலி வருவது போல் இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் 'Psychologically everyone getting affected by Swine-flu.'
வைரஸ் கிருமி எப்போது காற்றில் பரவி கிடைக்கிறது. ஒரு மாஸ்க் அணிந்து விடுவதால் 'பன்றி காய்ச்சலில் இருந்து தப்பி விடலாம்' என்று கிடையாது. அந்த மாஸ்க் அணிந்து தி.நகர் ரங்கநாதன் தெருவில் நடந்து பாருங்கள். மற்றவர் உடல் உரசி உங்களுக்கு பன்றி காய்ச்சல் வர வாய்ப்புண்டு.
தொலைக்காட்சிகளும் சரி... பத்திரிகைகளும் சரி... ஏன் இறந்தவர்களின் எண்ணிக்கையை சொல்லி மக்களை பயமுருத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இதுவரை ஐந்நூறு மேற்பட்டவர்கள் பன்றி காய்ச்சலில் இருந்து குணமடைந்திருக்கிறார்கள். இறந்தவர்கள் எடுத்துக் கொண்டாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ( immunity ) குறைவாக இருப்பவர்கள் தான் இறந்திருக்கிறார்கள். அதனால் தான் குழுந்தைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் மருந்து, உணவு சாப்பிட்டாலே போதும். எந்த வித கவலையுமில்லை.
இரண்டு மாதம் முழுக்க பிரபாகரனின் மரணத்தை பற்றியும், அதன் ரகசியத்தை பற்றியும் சொல்லி பணம் சம்பாதித்த ஊடங்கள், இப்போது ‘பன்றி காய்ச்சல்’ இறந்தவர்களின் எண்ணிக்கை சொல்லி சம்பாதிக்கிறார்கள். யாராவது குணமடைந்தவர்களை காட்டி, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கலாம். அதை ஏன் யாரும் செய்யவில்லை.
பன்றி காய்ச்சல் வரமால் தடுக்க... அசைவம் முழு வேக வைத்து சாப்பிட வேண்டும், கை கழுவ வேண்டும், தும்மல், இரும்மல் வரும் போது வாய்யை முட வேன்டும்... இவை எல்லாம் நாம் அன்றாடம் செய்யும் முறைகளே ! இதுவும் நமக்கு வரும் சாதான காய்ச்சல் தான். குடுமபத்தோடு முகமுடி அணிந்துக் கொள்ளும் அளவிற்கு பயம் தேவையில்லை.
நண்பர்களே ! இறந்தவர்கள் எண்ணிக்கையை மறந்து... பிழைத்தவர்களின் எண்ணிக்கை பார்த்து தைரியமாக இயல்பு வாழ்க்கையை நடத்துவோம்.
5 comments:
Nanri, Nalla pathivirkku... Nambikai ootiyatharku
நல்ல பதிவு
பேருந்தில் பயணம் செய்யும் அன்பர்களே, கண்டக்டரிடம் சொல்லுங்கள் எச்சில் தடவாமல் டிக்கெட் கொடுங்கள் என்று. (வைரஸ் காய்ச்சல் பரவ எச்சிலும் மிக முக்கியமான காரணம்.)
பாராட்டுக்கு நன்றி Periyarmathi,
கிருபாகரன் :-)
// P. said...
பேருந்தில் பயணம் செய்யும் அன்பர்களே, கண்டக்டரிடம் சொல்லுங்கள் எச்சில் தடவாமல் டிக்கெட் கொடுங்கள் என்று. (வைரஸ் காய்ச்சல் பரவ எச்சிலும் மிக முக்கியமான காரணம்.)
//
தகவலுக்கு நன்றி
Post a Comment