வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, March 5, 2009

அறிவியல் புனைகதை : கனவே கலைந்து விடாதே

என் தேகத்தை அசைக்க முடியாமல் படுத்து கிடந்தேன். எழுபது, எண்பது கிலோ எடையுள்ள் உருவம் ஒன்று என் உடல் மீது ஊடுருவது போல் இருந்தது. அந்த உருவம் மெல்ல மெல்ல என் பெண் உருப்புக்களை சுவைத்துக் கொண்டு இருந்தது. அந்த உருவத்தை தள்ளி விட நினைத்து என்னால் முடியவில்லை. அந்த உருவத்தின் கரங்கள் என் கரங்களோடு பின்னி பினைந்து அசைக்க முடியாமல் இருந்தேன். இது வரை என் உடலை எந்த ஆணும் தீண்டியதில்லை. அந்த உருவம் தீண்டியதில் ஆண் என்று உணரமுடிந்தது. என் பெண்மையை காப்பாற்றி கொள்ள கத்தினேன். எதுவும் பலனில்லை. என் தேகத்தை அந்த உருவம் அனுபவித்துக் கொண்டு இருந்தது. தன் வேட்கையின் உச்சக்கட்டத்தை தீர்த்துக் கொள்ள அந்த உருவம் முயற்சி செய்தது. இந்த முறை மேலும் பலமாக கத்தினேன். மூடப்பட்டிருந்த அறை கதவுகள் வேகமாக திறந்து. இரண்டு உருவங்கள் உள்ளே நுழைந்தன. இதற்கு முன் அந்த இருவரை எங்கோ பார்த்தது போல் இருந்தது. என் பெண்மையை காப்பாற்ற, அந்த இருவர் உருவத்தை அடிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், அந்த இருவர் என்னை தட்டி எழுப்ப தொடங்கியது.

" அனிதா.... அனிதா... என்னம்மா ஆச்சு உனக்கு.... எதுக்கு கத்துன...?? " என்று பதட்டத்துடன் ஒரு பெண் குரல் கேட்டது.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நான் திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தேன். என் அறையில் பாதுக்காப்பாய் தூங்கி கொண்டு இருந்திருக்கிறேன். என் வலது பக்கத்தில் பதட்டத்துடம் அம்மா இருந்தார். இடது பக்கம் சாந்தமாய் என் அப்பா சீதாராமன் நின்றுக் கொண்டு இருந்தார். என் பெண்மை யாரோ சுரையாடுவது போல் கனவு கண்டுயிருக்கிறேன் என்பதை உணர எனக்கு கொஞ்சம் நேரமானது.

" என்னடி.... கெட்ட கனவா ? வீடே இரண்டாகுற மாதிரி கத்துன... " பயந்தப்படி அம்மா கேட்டார்.

" கெட்ட கனவும்மா... யாரோ என்ன கெடுக்குற மாதிரி கனவு. எனக்கு பயமா இருக்கு..." என்று கனவில் நடந்ததை என் பெற்றோர்களிடம் மறைக்காமல் கூறினேன்.

" போடி... அடுத்த வாரம் கல்யாணம். அந்த பயம் இந்த மாதிரி கனவா வருது. மனசுல பகவான வேண்டிட்டு தூங்கு..." என்று ஆறுதலாக அம்மா கூறினாள்.

ஆனால், இது போன்ற கனவு பயம் எனக்கு புதிதில்லை. சிறு வயதில் இருந்தே எனக்கு கெட்ட கெட்ட கனவுகள் தான் வரும். பள்ளியில் படிக்கும் போது டீச்சர் அடிப்பது போல் வரும், பல்லி, கரப்பான் எல்லாம் என் மேல் ஏறி கடிப்பது போல் வரும், பருவம் அடைந்த பிறகு வகுப்பில் இரத்தம் கசிவது போல் வரும். நான் கனவு பயத்தில் கத்தி எழும் போது அம்மா பதட்டம் அடைவாள். எனக்கு பேய் பிடித்திருக்குமோ என்று பல கோயிலுக்கு அழைத்து சென்று மந்திரித்து காயத்து எல்லாம் கட்டிவிட்டார். அடுத்த நாள் இரவில் அந்த கோயில் புசாரி என்னை கொலை செய்வது போல் கனவு வரும். இந்நாள் வரை கனவு பயம் என்னை விடவே இல்லை.

சில சமயம் எனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறா என்ற சந்தேகம் எழும். நான் பைத்தியமில்லை என்பதை என் அப்பா உறுதி செய்வார். அவர் ஒரு மனதத்துவ டாக்டர். நோயை குணப்படுத்த மருந்தை விட மனதை தான் அதிகம் நம்புவார். வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் நான் தான் என் பெற்றோர்களுக்கு இளவரசி. என் கனவு பயம் தான் அவர்களுக்கு கவலைக் கொடுத்துக் கொண்டு இருந்தது.

அம்மா கடவுளை வேண்டிவிட்டு என் நெற்றியில் விபூதி பூசினாள்.

" எதபத்தியும் யோசிக்காம அமைதியா தூங்கு...." என்றாள் அம்மா.

அப்பா எதுவும் பேசாமல் அமைதியாக என்னை பார்த்தார். அம்மா அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

" அப்பா..! எனக்கு பயமா இருக்கு... என் கூடவே இருங்கப்பா..."

தன் மகள் அனிதா இன்னும் குழந்தையாக தான் இருக்கிறாள் என்பதை சீதாராமன் உணர்ந்தான். தன் மனைவியை அனுப்பி விட்டு மகளுக்கு ஆறுதலாக அவள் அருகில் அமர்ந்தான்.

" என்னடா... உனக்கு ஒண்ணும் ஆகாது... நாங்க இருக்கோம்ல்ல...." என்றான் சீதாராமன்.

" எனக்கு பைத்தியமா அப்பா... ஏன் எனக்கு மட்டும் அடிக்கடி இப்படி நடக்குது.... " என்று கேட்டேன். ஒவ்வொரு முறை நான் பைத்தியம் என்று சந்தேகம் வந்தால் என் தந்தையிடம் கேட்டு உறுதி செய்துக் கொள்வேன். என் தந்தையும் எனக்கு பதில் அளித்து அளித்து அசந்து போவார். ஏதாவது ஒரு காரணம் கூறி என்னை தேற்றுவார். ஆனால், இந்த முறை எனக்கு என்ன வியாதி என்று வெளிப்படையாக கூறினார். இன்று தான் எனக்கு என்ன வியாதி என்று தெரிந்துக் கொண்டேன்.

" உனக்கு பைத்தியம் இல்லம்மா... இத டிரீமிங் டிஸார்டர் சொல்லுவாங்க... அதனால தான் உனக்கு கெட்ட கனவு வருது. வேற ஒண்ணுமில்ல..." என்று சீதாராமன் கூறினான்.

" எதனால வருதுனா??.... இதுக்கு டிரிட்மென்ட் இல்லையா... ஏன் இவ்வளவு நாள் எந்த மருந்து எனக்கு கொடுக்கல்ல...." கண்ணீர் கலந்த குரலில் நான் கேட்டேன்.

" இது வியாதி கிடையாதுமா... ராபிட் ஐய் மூவ்மென்டால வருது... நிறைய பேருக்கு 'டிரீமிங் டிஸார்டர்' பிரச்சனை இருக்கு. ஆனா, யாரும் பெருசா எடுத்திக்கிறது இல்ல. இந்த கனவு இரண்டு, மூனு நாளைக்கு ஞாபகம் இருக்கும் அவ்வளவு தான். அப்புறம் நாமே மறந்திருவோம்..." என்று மருத்துவ ரீதியாக இருக்கும் 'டிரீமிங் டிஸார்டர்' பற்றி விளக்கினார்.

" அப்போ இத குணப்படுத்த முடியாதா....?" என்று என் மனதில் ஆழமாய் பதிந்த கேள்வியை கேட்டேன்.

" டிரீமிங் டிஸார்டர் வியாதியே இல்லாத போது... மருந்து எப்படிம்மா...?? தியானமும், மனச சந்தோஷமா வெச்சிக்கிறதும் தான் இதுக்கு மருந்து. கனவு மனுஷனோட கற்பனை குதிரை. அத மனுஷன் தான் கட்டி வைக்கனும். மருந்து, மாத்திரை கிட்ட அந்த பொறுப்ப கொடுத்த நம்ப மனசே நம்ப பேச்ச கேட்காது..."

தந்தை சீதாராமனின் விளக்கத்தை கேட்டவுடன் நான் புன்முருவலோடு பார்த்தேன். என் மனதில் இருந்த பயம் மெல்ல மெல்ல விலகியது. அப்பா சொல்வதிலும் உண்மை இருக்கிறது. எப்படி மனிதனின் கற்பனை மருத்துவத்தால் தடுத்து நிருத்த முடியும். இயல்பு வாழ்க்கை நடக்காததை பலர் கனவில் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். எனக்கு இப்படி ஒரு கனவு வருகிறது என்றால், என் மனதில் வன் புணர்ச்சிக்கு ஆசைப்படுகிறேனா...?? அடுத்த வாரம் திருமணம் என்பதால் எனக்கு இப்படி ஒரு கனவு வந்திருக்கலாம். எனக்குள்ளே கேள்வி கேட்டு நானே பதில் சொல்லிக் கொண்டேன்.

" அப்பா! தியானம், மனச சந்தோஷமா வச்சிக்கிறது தவிர கெட்ட கனவு வராம பார்த்துக்க இன்னொரு வைத்தியம் இருக்கு..." என்றேன்.

" என்ன வைத்தியம்...." ஆரவமாக அப்பா கேட்டார்.

" தூங்காம்மா இருக்கனும்..." என்று கூறி குறும்பா சிரித்தேன்.

" அடி உன்ன.... இராத்தி நேரத்துல கடி ஜோக் சொல்லிட்டு... எத பத்தி கவலப்படாம தூங்கும்மா...." என்று கூறி விட்டு, போர்வை என்னை போர்த்திவிட்டு அப்பா தன் அறைக்கு சென்றார். வெடிக்கையாக பேசினாலும் மனதுக்குள் பயம் இருக்க தான் செய்கிறது. எதற்கும் என் அறையில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று சுற்றி பார்த்து விடுகிறேன்.

நல்ல வேளை. யாருமில்லை. தைரியமாக தூங்கலாம். கனவு மட்டும் வரகூடாது என்று சொல்லி கொண்டே தூங்கினேன்.

ஒரு வாரம் உருண்டோடியது. நாட்கள் எப்படி போகிறது என்று சொல்ல முடியவில்லை. என் திருமணம் சிறப்பாக நடந்தது. அப்பா, அம்மா கண்களில் ஆனந்த கண்ணீரை பார்த்தேன். உறவினர்கள், நன்பர்கள் வாழ்த்திவிட்டு சென்ற பிறகு முதல் இரவுக்கு தேவையான அழங்காரம் என் அறையில் நடந்துக் கொண்டு இருந்தது.

என் கணவர் பெயர் சேகர். ஒரு கணிணி நிறுவனத்தில் வேலை செய்கிறார். நல்ல சம்பளம். பல இடங்கள் வரன் பார்த்து செய்து வைத்த திருமணம். இத்தனை நாள் சேர்த்து வைத்த என் இளமையை சேகருடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். இல்லை..இல்லை... சேகருக்கு கொடுக்க போகிறேன். என் இன்பமும், துன்பமும் ‘அவன்’ தான். மன்னிக்கவும் ‘அவர்’ தான். திருமணம் ஆன பிறகு எப்படி தான் 'அவன்' 'அவராக' மாறுகிறது என்பதை அப்பாவிடம் மன தத்துவ ரீதியான விளக்கத்தை கேட்க வேண்டும்.

மனதில் பல கனவுகளுடன் என் அறைக்கு சென்றேன். அங்கு சேகர் எனக்காக காத்திருந்தார். என்னுடைய அறையாக இருந்தாலும், உள்ளே நுழைவதற்கு பயமாக இருந்தது. சந்தோஷம் கலந்த பயத்துன் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்தேன். சேகர் என் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி கட்டில் அருகில் வைத்தார். சேகர் கைகளால் என் கையை பிடித்து கட்டிலில் உக்கார வைத்தார். அவரது கண்கள் என் தேகத்தை மேய்ந்து கொண்டு இருந்தன.

" என்னங்க அப்படியே பார்க்குறீங்க...." என்று கேட்டேன்.

"இன்னைக்கு எவ்வளவு அழகா இருக்க.... உன்ன அப்படி கடிச்சு சாப்பிடலாமா இருக்கு..." என்று கூறியப்படி என் அருகில் வந்தார்.

"நீங்க தொடும் போது ஒரு மாதிரியா இருக்கு. கொஞ்சம் நேரன் ஏதாவது பேசுவோமே !" பயத்தில் கூறினேன். அவரது தீண்டல் பிடித்திருந்தாலும், முதல் முறை என்பதால் எனக்கு பயமும் இருந்தது.

" கல்யாணத்து முன்னாடியே எல்லா பேசியாச்சு... இங்க வந்து பேசியும் நம்ப டைம்ம வேஸ்ட் பண்ண விரும்பல்ல..." என்று சொல்லிவிட்டு கட்டில் படுக்க வைத்தார். வார்த்தைகளுக்கும், ஆடைக்கும் அவசியம் அற்று போயின. வியர்வை ஆறாக ஓடின. அறையின் நிசப்தத்தை என் இதய துடிப்பு கலைத்தன. எங்கள் மூச்சு காத்து புயல் போல் அறையில் பரவியது.

எனக்கு போன வாரம் வந்த கனவு ஞாபகம் வந்தது. இதே போல் தான் ஒரு உருவம் என்னை அனுபவிப்பது போல் கண்டேன். இப்போது என் கணவர் என்னை அனுபவிப்பத்து கொண்டு இருக்கிறார். ஒரு வேளை நான் காணும் கனவு நிஜமாக நடக்கிறதா... என்று யோசித்தேன். என் கனவு எல்லாம் நிஜமாக நடக்கிறதா என்று எனக்குள்ளே கேட்டு பார்த்தேன்.

" ஆ...ஆ........ஆ..." என்று விரிட்டு கத்தினேன். வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் எழுந்தேன். படுக்கையில் சேகர் இல்லை. என்னை சுற்றி மருத்துவ முகாமே அமைத்தது போல் இருந்தது. என் கண் எதிரே இரண்டு கம்ப்யூட்டர் மானிடர் ஓடிக் கொண்டு இருந்தது. மனித இயந்திரங்கள் அங்கும், இங்கும் அசைந்துக் கொண்டு இருந்தன. சேகர் இங்கு இருப்பதாக தெரியவில்லை. என் கைகள் அசைக்க முடியாமல் இரண்டு பக்கமும் பாடிலில் க்லுகோஸ் ஏறிக் கொண்டு இருந்தது. அது மட்டுமில்லாமல், என் கைகள் தோள் சுருங்கி காணப்பட்டன. இரண்டு விரலுக்கு நகமே இல்லை. தலை முடியில் இருந்து உதிர்ந்த முடி வெள்ளையாக இருந்தது. என்ன நடந்தது...? என் கணவர் சேகர் எங்கே... ? அப்பா, அம்மா எங்கே....? நினைத்து கொண்டு இருக்கையில் ஒருவன் உள்ளே நுழைந்தான்.

" என்ன பாட்டிம்மா... தூக்கம் தெழுஞ்சிருச்சா..." என்றான்.

" நீ யாரு..." என்றேன். நான் பேசும் உதடுகள் அசைக்க மிகவும் சிரம்ம பட்டேன்.

" என் பேரு மதன். இங்க வேளை செய்யுற டாக்டர். நீங்க என்னோட பெஷன்ட் பாட்டிம்மா..." என்றான்.

" நான் பாட்டியில்ல. எனக்கு இருபது வயசு தான் ஆகுது...." கோபமாக கூறினேன்.

" ஓ.... இன்னும் கனவு உலகத்துல இருந்து வெளியே வரலைய்யா... இது 2108 ஆம் வருஷம். உங்களுக்கு நூற்றி இருபது வயசு ஆகுது. உங்க பேரங்க மெடிக்கல் ரிசர்ச்காக உங்கள இருபது வருஷம் முன்னாடி டோனேட் பண்ணியிருக்காங்க..."

" எனது..?? என்ன டோனேட் பண்ணிட்டாங்களா...!!! " அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டு இருந்தான் மதன். எனக்கு என்னவோ மாய உலகத்தில் இருப்பது போல் இருந்தது. எனக்கு ‘நூற்றி இருபது வயது’ என்று அவன் சொல்வதை நம்ப முடியவில்லை. இப்போது தான் என் கணவர் சேகர் என்னை கட்டிலில் தள்ளி இன்ப சுகத்தை கொடுத்தார். நான் அந்த இன்ப சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தேன். அதற்குள் இத்தனை வருடங்கள் எப்படி கடந்து வர முடியும் ? எனக்கு எத்தினை குழந்தைகள் பிறந்தார்கள் ? அவர்களுக்கு எப்போது திருமணம் நடந்தது ? என் பேரன், பேத்திகள் என்னை எதுக்கு அறிவியல் ஆராய்ச்சிக்கு தத்துக்கொடுக்க வேண்டும் ? எனக்கு எதுவுமே நினைவில் இல்லை.

ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் கேள்வியாக தான் இருந்தது. குழப்பங்கள் மட்டுமே நிரம்பி வழிந்தது. என் தந்தை அருகில் இருந்தால் குழப்பத்தை தீர்த்து வைப்பார். அப்பா இங்கு இருப்பதாக தெரியவில்லை. சேகர் எங்கே...?? இவ்வளவு நேரம் இங்கு தானே இருந்தாய்.. சேகர்... சேகர்... மனம் என் கணவரை தேடியது.

" இவ்வளவு நேரம் உங்க கணவர் சேகரோடவா இருந்தீங்களா....? " என்றான்.

" ஆமாம். அவரு இப்போ எங்க...?" என்று ஆவலுடன் கேட்டேன்.

" அவரு செத்து அம்பது வருஷம் ஆகுது. இவ்வளவு நேரம் நீங்க இருந்தது கனவு...." என்றான் மதன்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.” என் கணவர் இறந்து விட்டாரா ?” , "நான் கனவோடு வாழ்ந்தேனா.... எப்படி முடியும் ? நான் நிஜம். என் அப்பா சீதாராமன் நிஜம் . என் கணவர் சேகர் நிஜம். எல்லாம் கனவு என்று சொல்கிறான் இந்த முட்டாள் மதன்." என்று எனக்குள்ளே கூறிக் கொண்டேன்.

" நான் முட்டாள் இல்ல பாட்டிம்மா.." சிரித்துக் கொண்டே கூறினான் மதன்.

நான் மனதுக்குள் நினைப்பது இவனுக்கு எப்படி தெரியும். இதற்கு முன்பு நான் சேகருடன் இருந்ததை நினைத்தையும் கண்டு பிடித்தான். நான் நினைப்பது எப்படி அவனுக்கு தெரிந்தது…?

" ரொம்ப குழப்பிக்காதிங்க பாட்டிம்மா. நீங்க, உங்க அப்பா சீதாராமன், சேகர் எல்லாரும் நிஜம் தான். உங்களுக்கு கனவு கொடுக்கும் இயந்திரம் பொருத்தியிருக்கோம். இருபத்திரண்டாம் நூற்றாண்டு கொடுமையா வியாதிகளுல 'டிரீமிங் டிஸார்டர்' ஒண்ணு. கனவு வராம எப்படி தடுக்கனும் ஆராய்ச்சி பண்ணி மிஷின் கண்ணு பிடிக்க போறோம். அதுக்கு உங்கள எங்களுக்கு டோனேட் பண்ணியிருக்காங்க. "

‘டிரீமிங் டிஸார்டர்’ இருபத்திரண்டாம் நூற்றாண்டின் கொடுமையான வியாதியா....!!!! எனக்கு தலையே சுற்றியது.

" உங்க உடம்புல சிலிகோன் சிம் ஒண்ணு பொருத்தி இருக்கோம். உங்க கனவுகள், உள் மனது பேசும் வார்த்தைகள், எண்ணங்கள் எல்லாம் எனக்கு கேட்கும்..." என்றான்.

அடப்பாவி இது வேறையா... இவனுக்கு தெரியாமா நான் எதுவும் நினைக்க கூட முடியாதா... எல்லாம் என் தலையெழுத்து என்று என்னை நானே நொந்துக் கொண்டேன்.

" எப்படி இவ்வளவு வருஷம் நான் சாகமா இருக்கேன்....?"

" உங்க உடம்புக்கு நல்லா இருக்க நாங்க மருந்து கொடுக்குறோம். கனவு உங்கள ரொம்ப இளமையா வச்சிட்டு இருக்கு. மனுஷன் தன்னோட முதுமை நினைக்கும் போது தான் மரணமே வருது. உங்க கனவு உங்கள இருபது வயசுல வாழ வைக்கிறதாளா நீங்கள இவ்வளவு வருஷம் இருக்கீங்க.."

கனவு காண்பதை வியாதி என்கிறான். அதே சமயம் அந்த கனவு தான் என் மனதை இளமையாக வைத்துக் கொண்டு நீண்ட நாள் வாழ வைத்ததாக கூறுகிறான். ஜிலேப்பி போல் அவன் சொல்லுவது ஒன்று புரியாமல் இருந்தது.

"ஜிலேப்பி.. இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன ?" என்று ஒரு இயந்திரமிடம் கேட்டான் மதன்.

" இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் இனிப்பு வகை உணவு. அதை எப்படி செய்வது என்ற குறிப்புகள் என் டேடா பேஸ்ஸில் இல்லை. " என்றது இயந்திரம்.

" பரவாயில்லை” என்று இயந்திரமிடம் கூறிவிட்டு “என்ன பாட்டிம்மா.. இனிப்பு வேணும்மா..." என்று கூறி இரண்டு மாத்திரை நீட்டினான் மதன்.

"என்னது இது...?" வினாவினேன்.

"இனிப்பு மாத்திரை" என்றான்.

"ஐயோ.... எனக்கு ஒரே குழப்பமா இருக்கே....." என்று தலையில் கை வைத்துக் கொண்டேன்.
முதுமையில் மறதி சகஜம் தான். ஆனால், என் கணவரின் மரணம், எனக்கு பிறந்த குழந்தைகள், பேரன், பேத்திகள் என்று எல்லோரையுமே மறந்து விட்டேன்.

‘நூற்றி இருபது’ வயதில் நான் வாழ்வதே அதிசயம் என்ற போது, இவர்கள் மறந்தது பெரிதாக தெரியவில்லை. என்னை ஆராய்ச்சிக்கு தத்து கொடுத்தவர்களை நினைவில் வைத்துக் கொண்டு என்ன செய்ய போகிறேன். என் கணவர் சேகரின் மரணத்தை மறந்ததை தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அப்பா சொன்ன சில வார்த்தைகள் காதோரம் ஒலித்துக் கொண்டு இருந்தது " கனவு மனுஷனோட கற்பனை குதிரை. அத மனுஷன் தான் கட்டி வைக்கனும். மருந்து, மாத்திரை கிட்ட அந்த பொறுப்ப கொடுத்த நம்ப மனசே நம்ப பேச்ச கேட்காது..."

இங்கு ‘முட்டாள்’ மதன் கனவை மிஷின் மூலம் தடுக்க பார்க்கிறேன் என்று நினைத்தேன். இருப்பத்தி ஓறாம் நூற்றாண்டில் படித்த சில விஷயங்கள் ஞாபகம் வந்தது. அதை விட மிகையாகவே நேரில் பார்க்கிறேன். தூக்கம் கண்களில் குடிப்புக தொடங்கியது. கனவு மெல்ல மெல்ல என் தூக்கத்திற்குள் நுழைந்தது.

சேகர் என்னை நோக்கி வருகிறார். அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தார். நான் சேகரை ஆசையோடு அனைத்துக் கொண்டேன். இருவரும் இன்ப உலகத்திற்கு சென்றோம்.

என் கனவில் சல்லாபம் செய்வதை ‘முட்டாள்’ மதன் கேட்டுக் கொண்டு இருந்தான்.

----

அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டிக்காக எழுதியது. போட்டி முடிவு வழக்கம் போல் உத்திக்கிச்சு...

2 comments:

வலசு - வேலணை said...

நன்றாயிருக்கிறது.
தொடருங்கள்

குகன் said...

//வலசு - வேலணை said...
நன்றாயிருக்கிறது.
தொடருங்கள் //

நன்றி வலசு - வேலணை :)

LinkWithin

Related Posts with Thumbnails