வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, June 30, 2010

நடைபாதை - எதிர்வினை

அன்பரீர் ! வாழ்க !

தங்களின் 112 பக்கத்தில் அடங்கிய 24 தலைப்புக்கள் கொண்ட 'நடைபாதை' சிறுகதைத் தொகுப்பை, 11.10.08ல் பெற்றேன். படித்தேன்.

சிறுகதைகள் ஒவ்வொன்றும் தங்களின் சமூதாய உணர்வைக் காட்டிய வண்ணம், எளிய நடையில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு ரசித்தேன். குறிப்பாக 'வலி' என்ற சிறுகதையும், 'இன்னொரு கண்ணதாசன்', 'உனக்கு நீ செய்யும் உதவி' போன்றவை நன்று.

'மனசாட்சி சொன்னது' என்ற சிறுகதை 'உரத்தசிந்தனையின் பரிசு பெற்றது என்று நினைக்கிறேன். அதில் படித்ததாக நினைவு. சரியா ?

சிறுகதைகள் பொழுதுபோக்குக்காக எழுதப்பட்டவை மட்டுமல்ல; சில ச்மூதாயப் பழுது நீக்குபவையும் ஆகும். உங்கள் முயற்சி வெல்க !

கட்டுரையிலிருந்து கதை எழுத முயற்சி எடுத்திருக்கிறீர்கள். 'எனது கீதை'யிலிருந்து இது மாறுபட்டிருப்பதும், முன்னேற்றப்பாதையில் செல்வதும் நன்று. கூடுமானவரை ஆங்கில சொற்களைத் தவிர்த்த பேச்சு மொழியை இனி பயன்படுத்துக.

வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அரிமா மூரளீதரன்
15.10.2008



நான் சந்தித்த வாசகர்களில் மிகவும் வித்தியாசமானவர். எந்த புத்தகம் கொடுத்தாலும் இரண்டே நாட்களில் படித்து முடித்து அதன் விமர்சனத்தை தபாலில் அனுப்பி விடுவார்.

'எனது கீதை' நூல் வெளியீட்டு முன்பு நாள், இவர் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு புத்தகத்தை பற்றி பாராட்டி பேசினார். நூல் வெளிவர முன்பே எப்படி புத்தகம் இவருக்கு கிடைத்தது என்று தெரியவில்லை. புத்தகம் படித்து விட்டு கருத்துக்கள் சொல்பவர்கள் மிக சிலரே. அதில், முரளீதரன் போன்றவர் மிகவும் வியப்பு தக்க மனிதர். தொலைப்பேசியில் கருத்தை கூறினாலும், கடித்ததில் எழுதி அனுப்பினால் தான் சரியாக இருக்கும் என்று கடித்தம் எழுதி அனுப்புவார்.

இவ்வளவு ஆர்வமுள்ளவராக இருப்பவர் இளைஞராக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், இவரை நேரில் சந்திக்கும் போது ஏமாற்றம் தான். ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர். 63 வயது.

சிற்றிதழில் நான் எழுதிய கட்டுரை, கதை கொண்டு நினைவில் வைத்து பேசுவார். தீவிரமாக வாசித்தவர்களை பார்த்திருக்கிறேன். வாசித்ததை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு மனிதனை சந்தித்தேன் என்றால் அது இவர் தான். என்னுடைய எழுத்துக்களை மட்டுமல்லாமல் மற்றவர் எழுதிய கட்டுரை, கதைகளை அந்த எழுத்தாளரிடம் சொல்லி தன் கருத்தை கூறுவார். இவர் போன்ற வாசகரை பார்க்கும் போது தான் எழுத்துபவருக்கு தன் எழுத்து மீது நம்பிக்கை பிறக்கிறது.

சமீபத்தில் உடல் நல குறைவால் எந்த நிகழ்ச்சிக்கும் அவரால் கலந்துக் கொள்ள முடியவில்லை. ஒய்வு பெறும் வரை குடும்பத்திற்காக உழைத்தவர். ஒய்வு பெற்ற பிறகு 'தமிழுக்காக உழைத்தேன்' என்று சொல்லுவார். ஆனால், அவர் உடல் ஒத்துழைக்கவில்லை.

இவருடைய விமர்சனத்தை படிக்கும் போதும், கேட்கும் போதும் உத்வேகமாய் இருந்தது. அதே சமயம் செய்ய நினைத்ததை காலம் கடத்தாமல் செய்து முடிக்க வேண்டும் பயமும் பற்றிக் கொண்டது.

நடைபாதை நூலை வாங்க...

1 comment:

Cable சங்கர் said...

thamilish, tamilmanathil serungal

LinkWithin

Related Posts with Thumbnails