வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, June 21, 2010

படித்ததும் பார்த்ததும் - 21.6.10

ஜூனியர் விகடனில் வந்த செய்தி.

ஜூன் 26 அன்று, ஓரின சேர்க்கையாளர்கள் சென்னை கடற்கரை அருகே மாபெரும் பேரணி நடத்த சென்னை காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். 'இவர்களுக்கு அனுமதி அளித்தால் அதை எதிர்த்து சென்னை கடற்கரையில் நாங்கள் எதிர்ப்பு தேரிவிப்போம்' என்று 'இந்து மக்கள் கட்சி'யை சேர்த்த கண்ணன் தெரிவித்துள்ளார். யாருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற குழப்பத்தில் சென்னை காவல்துறையினர் உள்ளனர்.

***

செம்மொழி மாநாடு சில விமர்சனங்கள்

நேற்று ஒரு கூட்டத்திற்கு சென்றிருந்த போது செம்மொழி மாநாடு பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. செம்மொழி மாநாடு பாடலை ஏன் ஏ.ஆர்.ரகுமானுக்கு கொடுத்தார்கள் ? இளையராஜாவுக்கு கொடுத்திருக்க வேண்டும். சோ 'துக்ளக்' ல் ஏ.ஆர்.ரகுமானுக்கு கொடுத்த ஆஸ்கர் விருதை திரும்ப பெற வேண்டும் என்று எழுதியிருப்பதாக கூறினார்.

*

செம்மொழி புத்தக கண்காட்சி நாகரத்னா பதிப்பக புத்தகங்களை இடம் பெற இரண்டு பதிப்பகங்களை அனுகிய போது அவர்கள் 'செம்மொழி மாநாடு அரசியல் மாநாடு போல் இருக்கும். ஸ்டால் போட்டால் நஷ்டம் ஏற்ப்படும்' என்று கருத்து தெரிவித்தார்.

*

ஒருவர் '15 வருடங்களாக பதிவு செய்த்து நடத்தி வரும் பல முக்கிய இலக்கிய அமைப்புகளுக்கு வாய்ப்பு தரவில்லை' என்று குறைப்படுக் கொண்டார்.

எந்த ஒரு நிகழ்ச்சியும் எல்லோரும் திருப்தி படுத்தி நடத்தி விட முடியாது. ஆனால், நிகழ்ச்சி நடத்தும் முன்பே பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. சொம்மொழி மாநாடு முடிந்ததும் இன்னும் பல விமர்சங்கள் ஏழும் என்று நினைக்கிறேன். பொருத்திருந்து பார்ப்போம்.


***

லால்கர் - ஒரு மூன்றாவது பார்வை

அதிகாரவர்த்திற்கும், போராடும் மக்களுக்கும் இடையே மாட்டி சிக்கி தவிக்கும் இடங்களில் லால்கரும் ஒன்று. அரசாங்க பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் பாதிக்கப்படுவதும், மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லும் நக்ஸல்பாரி தாக்குதலிலும் அழியப்படும் மக்களின் மூன்றாவது பார்வை தான் இந்த புத்தகம்.

சந்தோஷ் ராணா, குமார் ராணா போன்ற எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்பும், அ.மார்க்ஸ்ஸின் கட்டுரை இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள.

விலை.30. பக்கங்கள் : 56
புலம் வெளியீடு

***

இலக்கிய நகைச்சுவை


ஒரு புத்தகத்தை பார்த்து எழுதினால் - திருட்டு
பல புத்தகங்களை பார்த்து எழுதினால் - திரட்டு !

***

வரும் ஜூன் 26, அனைத்ந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், பெரம்பூ கிளை சார்பாக நடத்தப்படும் இலக்கிய கூட்டத்தில் நான் எழுதிய நான்கு சிறுகதைகள் விமர்சனம் செய்யவிருக்கிறார்கள். நேரம் இருக்கும் நண்பர்கள் வரலாம்.

இடம் :
V.O.C ஆரம்ப பள்ளி ,
பட்டேல் ரோடு,
பெரம்பூர், சென்னை - 11.

நிகழ்ச்சியில் அன்று, நான் எழுதிய 'என்னை எழுதிய தேவதைக்கு' (விலை.55/-) மற்றும் நடைபாதை (ரூ.40) இரண்டு நூலும் சேர்த்து ரூ.70 (~30% கழிவு) கிடைக்கும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails