வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, June 3, 2010

நட்பில் ஒரு காதல் !! - 2

முதல் பகுதி - 1



" பொளாரிஸ், டி.சி.எஸ் இரண்டு கிடைச்சா.. எதுலடா சேறது " என்றாள்.

" நான் டி.சி.எஸ்" என்றேன்.

" எனக்கு என்னவோ பொளாரிஸ் சேறலாம் தோனுது. டி.சி.எஸ் விட பெரிய கம்பேனி இல்லனாலும், சிட்டிக் குள்ள ஒரு ஆபிஸ் வெச்சிருக்கான். சீக்கிறம் வீட்டுக்கு போய்ட்டு வரலாம் "

அவள் என்னிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வது எவ்வளவு பிடிக்குமோ, அந்த அளவிற்கு அவள் முடிவு எடுத்துவிட்டு என் கருத்தை கேட்பது எனக்கு பிடிக்காது. அந்த முடிவை எந்த பதில் சொல்லியும் மாற்ற முடியாது. ரேகா எப்போதும் இப்படி தான். யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுப்பாள். நான் பேசாமல் அமைதியாக வந்தேன்.

நாங்கள் வீட்டுக்கு திரும்பும் போது நல்ல மழை. முன்பே பஸ்ஸில் ஏறிவிட்டதால் நனையவில்லை. ஆனால், நனையாமல் இருந்தது ரேகாவுக்கு வருத்தம் தான். ஜன்னலோர சீட்டில் அமர்ந்து மழை நீரை பிடித்து என் மீது தெளித்தாள். முதல் முறையாக அவள் கண்ணில் காதலை கண்டேன்.

" கை ரொம்ப ஜில்லுனு இருக்கு.... பாரேன்" என்று என் அனுமது கேட்காமலே கை பற்றினாள். அந்த ஸ்பரிஸ்த்தில் அவள் காதலை இன்னும் உணர்ந்தேன். கொஞ்ச நேரத்தில் நாங்கள் இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப் வந்தது. மழை விடாமல் பெய்தது. ரேகாவிடம் குடையிருந்ததால், மழையில் நனையாமல் இருவரும் குடைக்குள் நடந்தோம். பஸ்ஸில் அமர்ந்து வந்த நெருக்கத்தை விட குடைக்குள் எங்கள் நெருக்கம் அதிகமாகவே இருந்தது.

அவள் தப்பாக நினைத்து விடுவாளோ என்று பயந்து குடையில் இருந்து வெளியே வர நினைத்த போது, " ரொம்ப வெட்கப்படாத.. குடைக்குள்ள வாடா" என்றாள்.

இருவரும் அவள் வீட்டு தெரு முனை வரை பேசிக் கொண்டு நடந்தோம்.

" எனக்கு வர போற புருஷன் கூட இப்படி கொட புடிக்க மாட்டான்" என்று வெட்கத்தோடு சிரித்தாள்.

ரேகா சொன்னது போல் நான் ட்யூப் லைட் தான். அவளின் காதலை இப்போது கூட புரிந்து கொள்ளவில்லை என்றால் என்னை விட முட்டாள் யாருமில்லை.

மாடியில் தம் அடித்துக் கொண்டே யோசித்தேன்.

ரேகாவிடம் காதலை சொல்ல வேண்டும். ஆனால், அதற்குள் அம்மா எனக்கு பெண் பார்த்து நிச்சயதார்த்த தேதி குறித்துவிட்டாள். "உனக்கு புடிச்ச பொண்ண சொல்லு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று முன்பு சொன்னது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது தெரிந்தது. அம்மாவிடம் சொல்லி நிச்சயதார்த்தத்தை நிறுத்துவதை விட முதலில் ரேகாவிடம் காதலை சொல்ல வேண்டும்.


தம் முடித்து கீழே வந்தேன். நான் ரேகாவுக்கு போன் பேசலாம் என்று நினைக்கும் போதே, என் செல்போன் மணி ஒலித்தது. ரேகா தான்.

செல்போனை எடுத்து, " சொல்லு ரேகா ! " என்றேன்.

"உன்ன அவசரமா பார்க்கனும். என் வீட்டுக்கு வா " என்றாள்.

என்னது என்று கேட்க தோன்றவில்லை. அவள் அழைக்கவில்லை என்றாலும் நானே அவளை பார்க்க வேண்டும் என்று தான் இருந்தேன். பத்து நிமிடத்தில் உடைகளை மாற்றிவிட்டு அவள் வீட்டுக்கு சென்றேன்.

முகம் கடு கடுவென கோபத்தோடு இருந்தாள். கணவனுக்காக காத்திருக்கும் மனைவி கோபம் போல் எனக்கு தெரிந்தது.

" ஹாய் ரேகா... என்ன அவசரமா கூப்பிட்ட...." என்றேன்.

அவள் முகம் மாறவில்லை. எனக்கு என்னவோ போல் இருந்தது.

" ராஜா ! ஏன்டா என்கிட்ட உண்மைய மறைச்ச...." என்று கண்ணீருடன் கேட்டாள்.

அவளிடம் காதலை சொல்லாமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு. அவள் என் மேல் எவ்வளவு காதல் இருந்தால், சொல்லாமல் இருந்ததற்கு கண்ணீர் சிந்துவாள்.

" ரேகா ! இதுக்கு போய்யா அழுவுற. நாம மூனு வருஷமா பிரண்ட்ஸா இருக்கோம். நம்ப லவ்வ சொல்லி தான் புரிஞ்சிக்கனுமா..." என்றேன்.

" நான் லவ்வ பத்தி கேட்கல. உன் நிச்சய தார்த்தம் பத்தி கேட்டேன் " என்றாள்.

இவளுக்கு எப்படி தெரியும். காதலனின் நிச்சய தார்த்தம் என்றால் கண்டிப்பாக அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும். ஆனால், என் காதலுக்கு அது தடையாக இருக்கும் என்று நினைக்கவில்லை. அவள் காதலுக்கு சம்மதம் சொல்லிவிட்டால், என் நிச்சயதார்த்ததை நிருத்திவிட போகிறேன். அம்மாவிடம் காதலை பற்றி சொன்னால், கொஞ்சம் மன வருத்தம் இருந்தாலும் ஏற்றுக் கொள்வாள்.

நான் மாடியில் தம் அடிக்கும், என் செல்போனுக்கு ரேகா தொடர்பு கொள்ள அம்மா போனில் என் கல்யாண விபரத்தை பற்றி சொல்லியிருக்கிறார்.

" ரேகா ! இது எல்லாம் ஒரு மேட்டரே இல்ல. நீ மட்டும் சரி சொல்லு. அம்மா கிட்ட நம்ப லவ்வ சொல்லி ஓ.கே வாங்கலாம்."

"அது எல்லாம் வேண்டாம். நீ உங்க அம்மா சொல்லுற பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ..!! " என்றாள்.

பெரிய சுத்தியல் தலையில் விழுந்தது போல் இருந்தது. என் மேல் இருக்கும் காதலை பல சமயத்தில் உணர்த்தியவள் அவள் தான். அவளை என்னை காதலிப்பது நூறு சதவீத உண்மை. ஏன் இப்படி ஏற்க மறுக்கிறாள்.

" என்ன ஆச்சு உனக்கு ? நம்ப லவ் பண்ணுறதுக்கு முன்னாடி அம்மா பொண்ணு பார்த்தது. இப்ப நினச்சா கூட நிறுத்தலாம்."

" இல்ல வேண்டாம் ராஜா. எனக்கு என்னவோ சரியா வரும்னு தோணல்ல..."

வழக்கம் போல் முடிவு எடுத்து விட்டு என்னிடம் பேசுகிறாள் என்று புரிந்தது. அவள் முடிவை எப்படியாவது மாற்றிவிட்டுவேன். அந்த அளவிற்கு எங்கள் காதல் மீது நம்பிக்கை இருந்தது.

" நீ என்ன லவ் பண்ணா போதுமா. நா உன்ன லவ் பண்ணவே இல்ல. " என்றாள்.

அவள் சொன்னதை நான் மட்டுமல்ல படிக்கும் நீங்கள் கூட நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். அவளிடம் அதற்கு மேல் பேச எனக்கு விருப்பமில்லை. காதல் இல்லை என்று பொய் சொல்லுபவளிடம் என்ன பேசினாலும் வீண் தான். இவளாகவே முடிவு எடுத்து விட்ட பிறகு, என் பேச்சை மதித்ததில்லை. இப்போது மட்டும் என்னால் எப்படி எதிர்பார்க்கமுடியும்.

என் நிச்சயதார்தம் நன்றாக நடந்து முடிந்தது. இரண்டு மாதத்தில் திருமணமும் நடந்தது. சிரித்த முகத்துடன் ரேகா என்னை வாழ்த்தினாள். கொஞ்ச தூரம் சென்றதும் அவள் கண்ணில் நீர் துடைப்பதை பார்த்தேன். எந்த பதிலும் பேச முடியாமல் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு கை கொடுத்துக் கொண்டு இருந்தேன்.

இன்று முதலிரவு.

பல கனவுகள் சுமந்து ராதா அறைக்கு வந்தாள். அவளிடம் என் காதலை சொல்லிவிடலாம் என்று தோன்றியது. காதல் இல்லை என்று சொன்ன காதலை பற்றி ஏன் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னை உறுத்தியது. அமைதியாக அவள் கொடுக்கும் பாலை வாங்கி கொடுத்து, மீதி பாதிக் கொடுத்தேன்.

கொஞ்சம் நேரம் பேசினோம். மாற்று புடவை அணிய வேண்டும் என்றாள். என் கண்ணை முட சொன்னாள். புது வெட்கம் தெரிந்து திரும்பினேன்.

இருந்தாலும், பல ஆண்டுகள் சீடியில் பார்த்த ஆன்டிகளும், பியூட்டிகளும் கண்ணில் வளம் வர தொடங்கினர். என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என் மனைவியை கட்டிபிடித்து கட்டிலில் தள்ளினேன்.

"வலிக்குதுங்க...."

" ஸாரி.... ரேகா......!!"

1 comment:

Vediyappan M said...

2 பகுதியையும் படித்தேன். நல்ல கதைதான்
(ஏற்கனவே பல காதல் கதைகளை படித்திருந்தாலும் கூட..) அதுதான் காதல். கதாபாத்திரங்கள் அருமை. கதையை கொஞ்சம் பொறுமையாக ஒவர்ஸ்பீடு இல்லாமல் சொல்லியிருக்கலாம். முடித்துவிடாமல் தொடர்ந்தால் நல்லது.

LinkWithin

Related Posts with Thumbnails