வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, April 19, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 3

அந்த மூன்று பெண்கள் நாவலை முழுவதும் வாசிக்க

ஒரு மாத விடுமுறைக்கு சிதம்பரத்திற்கு வந்தேன். அம்மாவும், மாமாவும் உடல் மேலிந்து விட்டேன் என்று கவலை பட்டனர். இந்த ஒரு மாதத்தில் என் உடல் எடையை ஏற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அம்மா தினமும் அசைவ உணவை சமைத்தார்.

" அப்புறம் மருமகனே ! ஒரு வருஷம் படிப்பு முடிஞ்சிடுச்சு. " என்று எதோ சொல்ல வாயெடுத்தார். மாமா சொல்லும் போது அம்மாவை ஒரு பார்வை பார்த்தார். அம்மா எதோ பேச சொல்ல ஜாடை செய்ய மாமாவும் பேச்சை தொடர்ந்தார்.

" அங்க சாப்பாடுக்கு ரொம்ப கஷ்டமா மருமகனே...." என்று கேட்டார்.

" இல்ல மாமா ! பரூக் அம்மா நல்ல சமைக்கிறாங்க. பாய் விட்டு அசைவ சாப்பாடு சொல்லவே வேண்டாம். சும்மா பிச்சி உதருவாங்க. " என்று பரூக் அம்மாவின் சமையல் பற்றி சொன்னேன்.

எதோ எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தது போல் அம்மா முகம் வாடியிருந்தது. அவர்கள் என்னிடம் ஏதோ சொல்ல நினைத்து சொல்லமால் இருக்கிறார்கள் என்று என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

" என்ன மாமா விஷயம் ! நீங்களும், அம்மாவும் கண்ணுல பேசிட்டு இருக்கீங்க...." என்று நானே தொடங்கினேன்.

" அது ஒண்ணுமில்ல மருமகனே ! மாணிக்கம் ஒரு பொண்ணு ஜாதகம் கொண்டு வந்தான். உனக்கு பொருத்தமா இருக்கும். நீயும் கல்யாணம் பண்ணிட்டு படிச்சா சமைச்சு போடுறதுக்கு இருப்பாள்ல....." என்று சொல்லி கொண்டு இழுத்தார். நான் அம்மாவையும், மாமாவையும் முறைத்தவாரு பார்த்தேன். ரம்யாவுக்கு என் மீது என்ன எண்ணம் இருக்கிறது என்று தெரியாமல் அவளை பற்றி வீட்டில் சொல்ல முடியாது. அதே சமயம் திருமணம் செய்து கொண்டு படிப்பது நடக்காத காரியம்.

" சமைச்சு போடுறதுக்கு ஆள் வேணும்னா சென்னையில் ஒரு வீடு பார்த்து அம்மாவ நா கூட்டிடு போறேன். இப்போதைக்கு கல்யாணம் எனக்கு வேண்டாம்" என்று திட்ட வட்டமாக கூறினேன்.

மாமாவும், அம்மாவும் என் பிடிவாத குணத்தை புரிந்துக் கொண்டு என் திருமணத்தை பற்றி மேலும் பேசவில்லை. விடுமுறை நாட்கள் வேகமாக நகர தொடங்கியது. எனக்கு ஸ்ரீ ரங்கம் சென்று ரம்யாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவள் ஊர் ஸ்ரீ ரங்கம் என்று வைத்துக் கொண்டு எங்கு போய் அவளை தேடுவது. அதுமட்டுமில்லாமல், சிதம்ரத்தில் தன் திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பதற்காக பரூக் வருவதாக சொல்லியிருந்தான். நான் சிதம்பரத்திலேயே இருக்க வேண்டியதாக இருந்தது.

விடியற்காலை வீட்டுக்கு வந்த பரூக் எங்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு வேலை விஷயமாக வெளியே சென்றான். மாலை, கும்பகோணத்திற்கு சேர்ந்து போகலாம் என்று சொல்லியிருந்தான். விடுமுறை என்பதால் ஊரை சுற்ற வேண்டும். எங்கு சென்றால் என்ன... என்ன ஏது என்று கேட்காமல் 'சரி' என்று சொன்னேன். தன் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லோருக்கும் பத்திரிக்கை வைத்து விட்டு பரூக் வீட்டுக்கு வந்தான். அம்மா எங்களுக்காக சுவையான மீன் குழம்பு செய்து வைத்திருந்தாள். இருவரும் சாப்பிட்டு, கும்பகோணத்திற்கு பஸ் ஏறினோம்.

மாலை 4.30 மணிக்கு கும்பகோணம் சென்றோம். அங்கு தனக்கு தெரிந்த தலைமை ஆசிரியருக்கு பத்திரிக்கை வைக்க வேண்டும் என்று சொல்லி கொண்டு இருந்தான். இருவரும் நடந்து அந்த தலைமை ஆசிரியர் வீட்டை விசாரித்து சென்றோம். அங்கு நாங்கள் அவர் வீட்டுக்கு நுழைந்த போது தான் அது பாலசுந்தரம் அவர்களின் வீடு என்று தெரிந்தது. எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக பரூக் யாரை பார்க்க போகிறோம் என்று சொல்லாமல் வந்தான்.

" உள்ளே வாருங்கள். வீட்டில் அம்மா எல்லாம் நலம் தானே...." என்று பாலசுந்தரம் ஐயா எங்களை பற்றி விசாரித்தார்.

" நாங்க நல்ல இருக்கோம்..." என்று இருவரும் சேர்ந்து சொன்னோம்.

" படித்து முடித்த மாணவர்கள் ஆசிரியரை தேடிவருவது வியப்பான ஒன்று. நான் உங்களுக்கு ஏதாவது உதவ வேண்டுமா..." என்று இன்னும் பழைய குணம் மாறாமல் இருந்தார். தான் ஓய்வு பெற்ற போது அடுத்தவருக்கு உதவும் குணத்தில் இருந்து அவர் ஓய்வு பெறவில்லை.



" இல்ல ஐயா... எனக்கு அடுத்த மாசம் கல்யாணம். அதுக்கு பத்திரிக்கை வைக்கலாம்னு..." என்று சொல்லி தன் கையில் இருந்து ஒரு பத்திரிக்கையை பாலசுந்தரம் ஐயாவிடம் பரூக் கொடுத்தான்.

பத்திரிக்கை வாங்கி விட்டு, " நல்லது, அடுத்த மாதம் இந்த தேதியில் எனக்கு சென்னையில் ஒரு கூட்டம் இருக்கிறது. கொஞ்சம் காலதாமதமாக தான் வருவேன். இப்போதே மண்ணித்துக் கொள்ள வேண்டும்...." என்றார்.

" கவல படதீங்க ஐயா. காலதாமதமா வந்தா நீங்க தான் வகுப்புக்குள்ள அனுமதிக்கமாட்டீங்க. நாங்க கண்டிப்பா சாப்பாடு போட்டு தான் அனுப்புவோம் " என்றான் பரூக்.

பரூக் சொல்லும் போது எங்களுக்கு கல்லூரி நாட்கள் ஞாபகம் வந்தது. பாலசுந்தரம் ஐயா அவர்கள் படிப்பு சொல்லிக் கொடுக்கும் போது படிப்பை தவிர எதையும் பேசமாட்டார். கண்டிப்பான சமயத்தில் கண்டிப்பாக இருப்பார். எங்கள் ஞாபக அலை ஓடி ஓயந்தது.

" இன்று மாலை உங்களுக்கு வேறு பணிகள் உள்ளதா...?" என்று பாலசுந்தரம் ஐயா கேட்டார்.

" இல்லை ஐயா... உங்களுக்கு ஏதாவது செய்யனுமா...." என்று பணிவோடு பரூக் கேட்டான்.

" இன்று கும்பகோணத்தில் ஐயா சொர்பொழிவு நிகழ்த்தவுள்ளார். இந்த தள்ளாத வயதிலும் அவர் பேசவருவதை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. நீங்களும் அவர் பேச்சை கேட்க வேண்டும்" என்று அன்பு வேண்டுக்கோள் விடுத்தார்.

"கரும்பு திங்க கூலியா..." என்று மனதில் நினைத்தேன். முதல் முறையாக பெரியாரை பார்க்க போகிறேன். இது வரை அவர் புத்தகங்களை மட்டும் படித்த எனக்கு நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவமாக தான் இருக்கும். பரூக்கு பெரியாரை பிடிக்காது. ஒரு நாளுக்கு நான்கு முறை தொழுகை செய்பவனுக்கு 'கடவுள் இல்லை' என்று சொல்பவரை பிடிக்காமல் போவது நியாயம் தான். இருந்தாலும், என்னக்காக பரூக் பெரியார் கூட்டத்திற்கு வர சம்மதித்தான்.

நான், பரூக், பாலசுந்தரம் ஐயா மூவரும் 'பெரியார்' கூட்டத்திற்கு சென்றோம். கூட்டம் தொடங்கி பெரியார் பேச தொடங்கி விட்டார்.

முதல் முறையாக தொண்டு செய்த பழுத்த பழத்தை பார்க்கிறேன். இவ்வளவு வயதான போதிலும் அவரின் குரல் சிங்கத்தின் கர்ஜனை போல் ஒலித்தது. வயது காரணமாக அவரால் நின்றுக் கொண்டு பேச முடியவில்லை. உட்கார்ந்து கொண்டு தான் பேசினார்.

"சுதந்திர இந்தியா முன்பும், பின்பும் பாப்பனர் தான் பெரிய பதவியில் இருக்காங்க..."
" கடவுள் எல்லாருக்கும் பொதுனா. ஏன் சூத்திரன் கோயிலுக்குள் போக கூடாது."
" யாரு வேணும்னாலும் பூச பண்ணாலாம். பாப்பன தான் பூச பண்ணனும்னு அவசியமில்லை...."
- பெரியாரின் பேச்சு ஒவ்வொரு வாசகங்களும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

பெரியார் பேச பேச என் உள்ளுக்குள் பல கேள்வி எழுந்தது. அது என் காதலின் அஸ்திவாரத்தையே ஆட்டி வைக்க தொடங்கியது. அது வரை என் தேவதையாக தெரிந்த ரம்யா பாப்பத்தியாக தெரிந்தாள். லக்ஷ்மியும், ரம்யாவும் பாப்பத்தியாக இருப்பதால் தான் ஜாஸ்மின்னை ஏற்க்காமல் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் தோன்றியது.

எந்த காலத்திலும் பார்ப்பனர்களின் 'காலை வாரும் குணம் மாற போவதில்லை' என்று கூட்டத்தில் இருந்த ஒரு தி.க தொண்டரின் வார்த்தைகள் காதில் விழுந்தது.

உலகத்தில் காதலிக்க பல பெண்கள் இருக்க ஒரு பார்ப்பன பெண் தேவையா என்ற எண்ணம் அடி மனதில் பாயத் தொடங்கியது.

1 comment:

ADMIN said...

படிக்க சுவராஷயமிக்கதாக இருக்கிறது நாவல்..!!

LinkWithin

Related Posts with Thumbnails