வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, April 10, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 2

அந்த மூன்று பெண்கள் நாவலை முழுவதும் வாசிக்க

சென்னைக்கு வந்த நாட்களில் என்னைத் திகைப்பூட்டியது, சாலைகள் தான். எல்லா சாலைகளும் ஒரே மாதிரியாக இருக்கும். சாலையை நினைவுபடுத்திக் கொள்வதற்கான இடங்களும் குழப்பம் தருவதாக இருக்கும். சிதம்பரத்தில் நுழையும் வழியும், வெளியேறும் வழியும் ஒன்றாக இருக்கும் சில இடங்களில் இரண்டே இரண்டு செல்லும் பாதையிருக்கும். இதனால், ஊருக்குள் வருபவர்கள் எவராக இருந்தாலும் கண்ணில் படாமல் போகவே முடியாது. சிதம்பரத்தில் நான் சைக்கிள் மிதித்து செல்லும் போது என்னுடன் படிப்பவர் யாராவது கண்ணில் பட்டுக்க் கொண்டே இருப்பார்கள்.

ஆனால், சென்னையில் நூற்றுக்கணக்கான பாதைகள், சாலைகள் கொண்டது. இந்த பாதைகளும், சாலைகளும் ஒன்றோடு ஒன்று குறுகிட்டும் வெட்டியும் கடந்துக் கொண்டே இருக்கின்றன. ஒரே சென்னைக்குள் எத்தனை ஊர்கள் அடங்கி இருக்கிறது என்று பிரம்பித்தேன். சென்னையில் இருந்து கொண்டே உறவினர்கள் முகத்தை பார்க்காமல் பலர் இருக்கிறார்கள். இருந்தாலும், மூன்று வருடம் சென்னையில் கழிக்க வேண்டுமே என்ற எண்ணம் எனக்கு வரவில்லை. அதற்கு, காரணம் 'ரம்யா' தான்.

லட்சியம், காதல் இரண்டும் ஒரே இடத்தில் சந்திப்பது போல் தினமும் அவளை சந்திப்பதற்காகவே கல்லூரிக்கு சென்றேன். ‘சட்டப்படிப்பு’ என்ற லட்சியத்தில் இருந்து நான் தடமாறவில்லை. அதே சமயம் வகுப்பு நடக்கும் போது அவளை என்னால் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

லஷ்மி வீடு சென்னையில் இருப்பதால் கல்லூரி முடிந்ததும், வீட்டுக்கு சென்று விடுவாள். ஜோசப் தன் ஸ்கூட்டரில் ஜாஸ்மினை அழைத்துக்கு வீட்டில் விட்டு செல்வான். ரம்யா தன் விடுதிக்கு செல்வாள். நான் பஸ் ஏறி பரூக் வீட்டுக்கு வந்துவிடுவேன். கல்லூரியில் நன்றாக பேசி கொள்வோம். முடிந்ததும் வீட்டுக்கு சென்று விடுவோம். ஒன்றாக சேர்ந்து எங்கும் வெளியே செல்வதில்லை. ஒவ்வொரு நாளும் கல்லூரி முடிந்ததும் இப்படி தான் நடந்துக் கொண்டு இருந்தது.

ஒரு முறை ரம்யாவின் வற்புருத்ததால் எல்லோரும் கடற்கரைக்கு சென்றோம். அந்த மாலை பொழுது இனிமையாக தான் இருந்தது. இருந்தாலும், நான் மட்டும் ரம்யாவுடன் தனியாக இந்த கடற்கரையில் நடக்க வேண்டும் போல் இருந்தது. எனக்கு தோன்றும் இதே உணர்வு அவளுக்கும் தோன்றியுக்குமா என்று தெரியவில்லை. அப்படி நடந்தால் என்னை போல் சந்தோஷப்படுபவனும் யாருமில்லை.

ஒரு பாட்டி ஜோசியம் பார்க்க எங்கள் அருகில் வந்தாள். எனக்கு நம்பிக்கையில்லாததால் நான் மறுத்து விட்டேன். ஆனால், ரம்யா, லக்ஷ்மி அந்த அம்மாவிடம் தங்கள் கையை காட்டி எதிர்காலத்தை பற்றி கேட்டுக் கொண்டு இருந்தனர். ஜாஸ்மினுக்கு இதில் நம்பிக்கை இல்லாததால் அவள் கை காட்டவில்லை. அந்த அம்மா ரம்யாவுக்கு சொன்னதை கொஞ்சம் மாற்றி லக்ஷ்மிக்கு சொன்னாள். அவர்கள் வயிற்று பிழைப்பு நான் ஏன் கெடுக்க வேண்டும் என்று பேசாமல் அமைதியாக இருந்தேன். அந்த அம்மா யோசியம் பார்த்து முடித்தவுடன் என் கையில் இருந்து பணத்தை கொடுத்தேன்.

பெண்களுடன் வந்து விட்டு அவர்களை செலவு செய்ய வைத்தால் நன்றாக இருக்குமா...? ரம்யாகாக லக்ஷ்மிக்கும் சேர்த்து நான் பணம் தந்தேன்.

கொஞ்ச நேரம் மணலில் உட்கார்ந்து பேசினோம். ஜோசப் என்னை பார்த்து தனியாக பேச வேண்டும் என்பது போல் சமிக்ஞை செய்தான். ஒரு வேளை ஜாஸ்மினுக்கு செய்வதை நான் தவறாக புரிந்துக் கொண்டானோ என்று யோசித்தேன். ஆனால், அவன் என்னை அழைக்க தான் இந்த சம்பாஷையில் அழைத்தான் என்று புரிந்துக் கொண்டேன்.

நாங்கள் இருவரும் எழுந்தோம். ஜாஸ்மின் "எங்க போறிங்க ?" என்று கேட்டாள். ஜோசப் எதுவும் பேசாமல் தன் சுண்ட விரலை மட்டும் நீட்டினான். ரம்யா, லஷ்மி, ஜாஸ்மின் மூவரும் சேர்ந்து சிரித்தனர். எனக்கு வரவேயில்லை. இவன் அவசரமாக போக வேண்டும் என்றால் தனியாக செல்ல வேண்டியது தானே ! என்னை எதற்கு அழைத்தான். அது கூட பராவியில்லை. சொல்லுவதற்கு காரணமா இல்லை. பெண்கள் முன் அநாகரிகமாக சுண்டு விரலை ஏன் நீட்ட வேண்டும். ஜோசப்பை மனதில் திட்டிக் கொண்டே அவனுடன் நடந்து வந்தேன்.

ஜோசப் ஒரு ஐஸ் வண்டியிடம் சென்று ஐந்து ஐஸ் வாங்கினான். ஜாஸ்மினுக்கு ஐஸ் என்றால் ரொம்ப பிடிக்குமாம். அவளுக்கு தெரியாமல் வாங்கி தர வேண்டும் என்பதற்காக வந்ததை சொன்னான். " அதுக்கு ஏன்டா ! என் மானத்த வாங்குன" என்றேன். சிரித்தப்படி அவன் கடைக்காரனிடம் இருந்து இரண்டு ஐஸ் வாங்கினான். மூன்று ஐஸ்யை வாங்கி கொண்டேன்.

நாங்கள் இருவரும் அவர்களிடம் சென்ற போது மாங்காய் விற்ப்பவன் ஜாஸ்மின்னிடம் கோபமாக பேசினான். "ஏம்மா...! கையில காசு இல்லாம எதுக்கு சாப்பிடுறீங்க..." என்றான். எங்களுக்கு விஷயம் புரிந்தது. மூன்று பேரும் அவனிடம் மாங்காய் வாங்கி சாப்பிட்டு, கொடுக்க பணம் இல்லாமல் இருந்துள்ளார்கள். ஜோசப் மாங்காய் விற்ப்பவனுக்கு பணம் கொடுத்து அனுப்பினான். மாங்காய் விற்ப்பவன் கோபமாக பேசியதில் ஜாஸ்மின் அழுதுவிட்டாள். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால், அதை பற்றி கவலைப்படாமல் ரம்யா, லஷ்மி மாங்காய் தின்ற வாயில் ஐஸ் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

ஜோசப் ஜாஸ்மினை சமாதானப்படுத்தினான். ஜாஸ்மின் அழுத முகத்தோடு இருந்ததால் எங்களால் நீண்ட நேரம் இருக்கவில்லை. ஜோசப் ஜாஸ்மின்னை அழைத்துக் கொண்டு சென்றான். நான் ரம்யா, லஷ்மியுடன் பஸ்ஸில் ஏற பஸ் நிலையத்திற்கு சென்றோம். பஸ்ஸில் செல்ல இவர்களிடம் கண்டிப்பாக பணம் இருக்கும். ஏன் இருவரும் அந்த மாங்காய் விற்ப்பவனுக்கு பணம் கொடுக்கவில்லை. மூவரும் சேர்ந்து தான் சாப்பிட்டார்கள். தன் தோழியை ஒருவன் திட்டுவதை எப்படி பேசாமல் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தங்கள் கையில் இருக்கும் பணத்தை ஏன் கொடுக்க இவர்களுக்கு மனம் வரவில்லை.

இதை பற்றி அவர்களிடம் கேட்க நான் அவர்களுக்கு இன்னும் நெருக்கமாகவில்லை என்று தோன்றியது. அதனால், அவர்களிடம் இதை பற்றி எதுவும் பேசவில்லை. கடற்கரையில் நடந்தை ஒன்று விடாமல் பரூக்கிடம் சொன்னேன். பெண்களை பற்றி எனக்கு தெரிந்த அளவில் கூட அவனுக்கு தெரியாது. அவன் எல்லாவற்றையும் கேட்டு மௌனமாக இருந்தான். தெரியாத விஷயத்தை பற்றி அவன் வாய் திறக்கமாட்டான். இருந்தாலும், தினமும் ரம்யாவிடம் என்ன பேசினேன் என்பதை அவனிடம் கூறினால் தான் எனக்கு தூக்கமே வரும்.

என் நண்பர்களின் குணம் கொஞ்சமாக புரிந்துக் கொள்ள ஆரம்பித்தேன். ஜோசப் ஜாஸ்மின் மீது உயிரே வைத்திருக்கிறான். சிறு வயதில் இருந்தே இவனுக்கு அவள் என்று அவர்கள் வீட்டில் பேசியிருக்கிறார்கள். அவனும் அப்படியே வளர்ந்துவிட்டான். ரொம்பவும் வேடிக்கையானவன். சில சமயம் அவன் செய்வது ரசிக்கும் படியாக இருக்கும். பல சமயம் கோபம் வரும் படி இருக்கும். அதற்கு எடித்துகாட்டு.... கடற்கரையில் பெண்கள் முன் சுண்டு விரலை நீட்டியது.

ஜாஸ்மின் நல்ல பெண். அப்பாவி. மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவள். நல்ல படிக்க கூடியவள். ஜோசப்புடன் இருக்கும் போது என்னிடம் அன்பாக பேசியிருக்கிறாள். ஜோசப் தவறாக நினைப்பான் என்று என்னிடம் பேசாமல் இருந்ததில்லை. ரம்யாவை விட இவள் தான் எனக்கு நெருக்கமாக பலகினாள். ஜாஸ்மினின் நல்ல குணத்தை பார்க்கும் போது எனக்கு ஜோசப் மீது பொறாமை கூட வந்திருக்கிறது.

கடற்கரை ஒரு விஷயம் போதும். ரம்யா சுயநலவாதி என்று சொல்லுவதற்கு. தனக்கு வேலையாக வேண்டும் என்றால் தான் அவளாக வந்து பேசுவாள். மற்றப்படி நான் தான் அவளை தேடி பேசியிருக்கிறேன். மற்றவர்களிடம் வாங்க கூச்சப் படமாட்டாள். அதே சமயம், தன்னிடம் இருந்து ஒரு பொருளை கொடுக்கும் போது பல முறை யோசிப்பாள். அப்படி கொடுத்தால் தனக்கு என்ன லாபம் இருக்கும் என்று கணக்கு போடுவாள். அவள் குணத்தை பற்றி தெரிந்தும் என் மனம் அவளை தான் விரும்பியது என்பது தான் துரதிஷ்டம்.

அடுத்து லக்ஷ்மி... இவளை தன் நண்பர்களில் ஒருத்தியாக நினைக்க கூட முடியவில்லை. ரம்யாவின் தோழி என்பதற்காக அவளிடம் பேசிகிறேன். மற்றவர்கள் விஷயம் என்றால் இவளுக்கு ஆர்வம் அதிகம். என்னை பொருத்தவரை இவளும் ஒரு சுயநலவாதி தான். ரம்யாவை காட்டிலும் இவள் பெரிய சுயநலவாதி. மாங்கை விற்றபவன் ஜாஸ்மினை திட்டிய போது கவலைப்படமால் ஜாஸ்மின் ஐஸ்யையும் சேர்த்து சாப்பிட்டவளை என்னவென்று சொல்லுவது...!

காலை வகுப்பு முடிந்தது, மதியம் ரம்யா, ஜாஸ்மின், லக்ஷ்மி மூவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். ஜோசப் இன்று கல்லூரிக்கு வராததால் தனியாக சாப்பிட ஒரு மாதிரியாக இருந்தது. நான் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதை யாராவது பார்த்தால் என்ன சொல்லுவார்களோ என்று பயமாக இருந்தது. நான் யோசித்துக் கொண்டு இருந்த போது, ரம்யா என்னை பார்த்து. " வா சந்திரு. எங்க கூட கூட்கார்ந்து சாப்பிடு..." என்றாள்.

என் தேவதையே சொன்ன பிறகு நான் எப்படி மீற முடியும். அவர்களுடன் உணவு அருந்த சென்றேன். அப்போது, ரம்யாவும், லக்ஷ்மியும் ஜாஸ்மின்னை கேலி செய்துக் கொண்டு இருந்தார்கள். நான் வந்த பிறகு அவர்கள் நின்று விடும் என்று இருந்தேன். ஆனால், அப்படியும் ஜாஸ்மின்னை கேலி செய்வதை நிருத்தவில்லை.

" ஜாஸ்மின் ! ஜோசப் தினமும் வந்து வீட்டுல விடுறாரே. உங்க வீட்டுல ஒண்ணும் சொல்லமாட்டாங்களா..." என்று கேலி கலந்த குரலில் லக்ஷ்மி கேட்டாள்.

" எங்க வீட்டுல சொல்லி தான் அவர் தினமும் வந்து விடுறாரு...." பதில் அளித்தப்படி தன் கையில் இருந்த சப்பாத்தி எனக்கு கொடுக்க நீட்டினாள். நான் வேண்டாம் என்று மறுத்தேன். ஒரு ஆண்ணை முன் வைத்து கொண்டு இப்படி ஒரு கேள்வி கேட்கிறோமே என்று லக்ஷ்மிக்கு அறிவில்லை. அப்பாவியான ஜாஸ்மினும் அவள் கேட்பத்ற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருந்தாள். எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

நான் என் சாப்பாட்டை கொடுக்க ஜாஸ்மினுக்கு நீட்டினேன். அவள் சம்பிரதாயத்திற்கு என்று கொஞ்சம் எடுத்துக் கொண்டாள். ரம்யா, லஷ்மியிடம் என் சாப்பாட்டை நீட்டியும் வேண்டாம் என்றனர். ரம்யாவும், லஷ்மியும் தங்கள் சாப்பாட்டை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவேயில்லை. சாப்பாட்டை நீட்டவுமில்லை.

" இரண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்கு போகாம... வெளியே போயிருக்கீங்க..." என்று ஆரவம் கலந்த பார்வையில் ரம்யா கேட்டாள். எனக்கு அவளை அரைந்து விட வேண்டும் போல் இருந்தது. இன்னும் விட்டால் என் முன்பே காதலன், காதலி அந்தரங்கத்தை பற்றி எல்லாம் கேட்டாலும் கேட்பார்கள். ரம்யாவை எனக்கும் பிடிக்கும் என்றாலும் அவள் செய்வதெல்லாம் 'சரி' என்று சொல்லும் ஆள்ளில்லை. ஆனால், என் மீது என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறாள் என்று தெரியாமல் நான் அவளுக்கு அறிவுரை வழங்க தயாரகயில்லை.

நான் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு, " எனக்கு அவசரமா லைப்ரரியில வேலை... நான் போனும்.." என்று சொல்லி அந்த இடத்தை விட்ட நகர முயற்சித்தேன். ஆனால், ரம்யா " இன்னு சந்திரு ! நாங்களும் சாப்பிட்டு வரோம்" என்றாள். சாப்பிடும் வரை காத்திருக்கலாம். ஆனால், ஜாஸ்மின்னை சீண்டுவதை பார்த்துக் கொண்டு என்னால் சும்மா எப்படி இருப்பது. நான் அவசரபட்டுத்தியதாலோ என்னவோ லக்ஷ்மியும், ரம்யாவும் சீக்கிரம் சாப்பிடு என்னடன் வந்தனர். ஜாஸ்மினும் அவர்கள் பேசிதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எங்களுடன் வந்தாள்.

மதியம் வகுப்புகள் முடிந்து எல்லோரும் வீட்டுக்கு செல்ல ஆயத்தமானோம். லக்ஷ்மியும், ஜாஸ்மினும் பஸ்ஸில் ஏறி சென்றார்கள். ரம்யா தனியாக விடுதிக்கு சென்று கொண்டு இருந்தாள். அவள் தனியாக போவதை பார்த்து, இது தான் அவளிடம் பேச சரியான சந்தரப்பம் என்று தோன்றியது. நான் அவள் பின்னாலே சென்று அவளிடம் பேசினேன்.

" ஹாய் ரம்யா....! என்ன ஹாஸ்டல் போரீயா...?" என்று அபத்தமான கேள்வி கேட்டேன். கல்லூரி முடிந்த பிறகு வேறு எங்கு செல்வார்கள் திருப்பி கேட்டால் என் முகத்தை எங்கு கொண்டு போய் வைத்துக் கொள்வேன்.

"ம்ம்.... நீ என்ன இந்த பக்கம் " என்றாள்.

" வீட்டுக்கு போய் என்ன பண்ண போறேன். அத சும்மா இங்கையே சுத்திட்டு இருக்கேன்..."

அடுத்து என்ன பேசுவதென்று தெரியவில்லை. எதாவது கேட்டால் தான், அவளிடம் பதில் வருகிறது. அவளாக எதாவது பேசினால் நன்றாக இருக்கும். அளவாய் அளவுக்கு அதிகமாய் என்னை கொள்கிறாள்.

" மதியம்...ஏன் பொய் சொன்ன...." என்று திடீர் மதிய நடந்த நிகழ்ச்சியை பற்றி கேட்டாள். எனக்கு ஒன்று புரியவில்லை. பேசிக் கொண்டது இவர்கள். நான் இவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சாப்பிட்டேன். அவ்வளவு தான். இங்கு 'பொய்' எங்கிருந்து வந்தது.

" என்ன பொய் சொன்னேன்" செய்ததறியாமல் கேட்டேன்.

" லைப்ரரியில அவரசமா வேலை இருக்கு சொல்லி கலம்ப பார்த்த. ஆனா, லைப்ரரி பக்கம் போக எங்களொட க்ளாஸ்க்கு வந்த. இது வரைக்கு நீ லைப்ரரி பக்கம் போகல. அப்படி தானே..." என்றாள்.

நான் அதிர்ந்தே விட்டேன். நான் சொன்ன ஒரு வார்த்தை இவ்வளவு சரியாக ஞாபகம் வைத்துக் கொண்டு பொய் சொன்னதற்கு கோபம் படுகிறாள் என்றால் என் மீது அவளுக்கு எதோ இருந்திருக்க வேண்டும். அதனால், நான் சொன்ன பொய்யை பற்றி கேட்கிறாள்.

" தேவையில்லாம பொய் சொல்லல்ல. பொண்ணுங்க நீங்க பேச்சிட்டு இருந்தீங்க. நான் வந்திருக்க கூடாது. என்ன வெச்சிட்டு ஜாஸ்மின கிண்டல் பண்ணா அவ தப்பா நினைச்சிட்டா என்ன பண்ணுறது. அதான் பொய் சொன்னேன்" என்றேன்.

ரம்யா எதுவும் பதில் சொல்லவில்லை. அவள் நான் செய்வதை கவனித்து என்னை பற்றி கேட்டாள். அவளுக்கு என் பொருட்டு மண்டைக்கனம் ஏறிவிடக்கூடாதென்று நானும்; எனக்கு அவளால் மண்டைக்கனம் ஏறிவிடக்கூடாதென்று அவளும், மிகவும் எச்சரிக்கையாக பேசி கொண்டோம்.

எனக்கு இந்த கல்லூரி சேர்ந்த நாளில் ராம்யாவை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கும் அவளிடம் ஒரு சந்தேகம் கேட்க தோன்றியது.

"ரம்யா..! நான் ஒண்ணு கேட்கலாமா...."

" என்ன....?"

" லக்ஷ்மியும், ஜாஸ்மினும் நம்ப கூட தான் படிக்கிறாங்க. ஆனா, நீயும் ஜாஸ்மினும் சேர்ந்து ஒரு வாட்டி கூட லக்ஷ்மிய கிண்டல் பண்ணதில்ல. அதே மாதிரி லக்ஷ்மியும், ஜாஸ்மினும் சேர்ந்து உன்ன கிண்டல் பண்ணதில்ல. நீங்க ரெண்டும் பேரும் சேர்ந்து ஏன் எப்போவும் ஜாஸ்மின சீண்டிக்கிட்டே இருக்கீங்க...?" என்று மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டேன்.

எனக்கு ஜாஸ்மின் மீது ஈடுபாடோ, அக்கரையோ இல்லை தோழிகள் என்றால், ஒரு முறை ஒருவர் கேலி செய்வார், இன்னொரு முறை இன்னொருத்தர் கேலி செய்வார். ஆனால், இரண்டு பேர் சேர்ந்து எப்போது ஒருவரை சீண்டுவது எனக்கு பிடிக்கவில்லை. இந்த விஷயம் நீண்ட நாட்களாக என் மனதில் உருத்திக் கொண்டு இருந்தது. இது தான் சரியான சந்தர்ப்பம் என்று அவளிடம் கேட்டேன்.

" எனக்கு ஜாஸ்மின்ன விட லக்ஷ்மி தான் நல்ல பிரண்ட். அத தான் லக்ஷ்மி என்னைக்கும் விட்டு கொடுத்து பேச மாட்டேன். ஜாஸ்மின் அப்படியில்லை. ஜோசப் இருந்தா எங்கள கண்டுக்கவே மாட்டா...!" என்றாள்.

" என்னதான் இருந்தாலும் நட்புல பாகுபாடு பார்க்குறது தப்பு ரம்யா...." என்று என்னையும் அறியாமல் அவளுக்கு அறிவுரை கூறினேன். நான் சொன்னது அவளுக்கு பிடிக்கவில்லை என்று அவள் பார்வையிலே தெரிந்தது.

" இது பொண்ணுங்க விஷ்யம் சந்திரு. உனக்கு எதுவும் தெரியாது..." என்று கோபமாக சொல்லிவிட்டு அவள் விடுதியை நோக்கி சென்றாள்.

அவளிடம் ஏதாவது கூறினால் தனக்கு தான் எல்லாம் தெரியும், மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற மனப்போக்கு அவளிடம் இருந்ததை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

ஜாஸ்மின் இதுவரை எந்த பாகுபாடுயில்லாமல் தான் எல்லோரிடமும் பழகுகிறாள். இருந்தும் ரம்யா ஏன் இப்படி சொல்கிறாள். எனக்கு தெரிந்தவரையில் லக்ஷ்மி ஒரு சுயநலவாதி. தன் வேலை முடிந்தால் போதும் என்று இருப்பவள். ஆனால், ஜாஸ்மின் தன் வேலையை மட்டும் கவனம் செலுத்தாமல் மற்றவர்களுக்கும் உதவி செய்வாள்.

இதை தான் பெண்கள் மனம் அறிந்தவன் யாருமில்லை என்று சொல்கிறார்களோ !!!!

ரம்யா பற்றி யோசித்து யோசித்து ஒரு வருடம் முடிந்ததே தெரியவில்லை. அவள் மேல் இருந்த காதலில் படிக்காமல் இருந்துவிடவில்லை. முதலாண்டு தேர்வை நன்றாக தான் எழுதினேன்.

(தொடரும்....)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails