வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, April 27, 2012

கல்லூரி காதல் - டைரிக்குறிப்பு !!

ஒவ்வொருவனின் வாழ்க்கையில் மறக்க முடியாத புத்தகம் இருக்கும். கருத்தும், குணத்திற்கும் அந்த புத்தகம் மாறுபடலாம். ஆனால், எல்லோரும் மிக முக்கியமாக, பொக்கிஷமாக பாதுகாத்து வரும் ஒரு புத்தகம் ஒன்று உண்டு. அது, அவரவர் டைரி தான்.

பழைய புத்தகங்களை எல்லாம் எடுத்து வைக்கும் போது, கல்லூரியில் நான் எழுதிய ‘காதல் சோகப் பாடல்’ கண்ணில் பட்டது. என் நண்பன் ஒரு ட்யூன் சொல்ல, அதற்கு எதோ எழுதியிருக்கிறேன். நண்பன் சொன்ன ட்யூன் ஞாபகமில்லை. காதலை அதிகம் ரசிக்கும் பருவம் கல்லூரி காலங்கள் என்பது என் பழைய டைரிக்குறிப்புகளில் தெரிகிறது.

எல்லா உணர்வுகளை விட காதல் மட்டும் எப்படி கை ரேகைப் போல் உடம்பில் ஒட்டிக் கொள்கிறது என்று புரியவில்லை.

***


மனதென்பது அவளிலுள்ளது
காதலென்பது என்னிலுள்ளது
ஈருயிராலும் ஒர் காதல்
ஒருயிரானாலும் உயர்வனாது காதல்
காதலை நான் தான் சுமந்தேன்
கருத்தரிக்க சொன்னால்
உயிர் துறப்பேன்
(மனதென்பது



வந்தது வரட்டும் என்பதல்ல காதல்
வாழ்க்கையோடு வாழ தேவை காதல்
வருபவர்கள் எல்லாம் செய்வதல்ல காதல்
வலிக் கொடுத்தவளை செய்வது தான் காதல்

புதிரா ! புனிதாமா புரிவதில்லை
பலர் சொன்னாலும் விளங்குவதில்லை
தியாகம், துரோக,
தர்மம் , கர்மம்

எல்லாம் இருப்பது காதல் தான்...
காதல் தான்... காதல் தான் !
(மனதென்பது



ஓடி ஒதுங்கியவர்களை எல்லாம் விரும்பாது காதல்
விரும்பியவர்களை தேடி தேடி அழையும் காதல்
ஒப்பனை செய்தாலும் வருவதில்லை காதல்
வெற்றி தோல்வியிலும் இருப்பது காதல்

தொடங்கியது தொடங்கியது தான்
கல்லறை வரை தொடர்வது தான்
சொர்க்கம், நரகம்,
ஜனனம், மரணம்

எல்லாம் இருப்பது காதல் தான்
காதல் தான்... காதல் தான்...

(மனதென்பது


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails