நம் நான்கு வருட நட்பில்
நான் அனுப்பும் முதல் மடல் !
நன்றி , மன்னிப்பு    
வார்த்தைகள் நம்மிடம் இல்லை !
மடல் அனுப்பும் தொலைவில்   
இதுவரை நாம் இருந்தில்லை !
எல்லை தாண்டிய பயங்கரவாதம்    
நாளைக் கூட தொடரும் ! 
நம் நட்பு  
எல்லை தாண்டியும் தொடரும் ! 
அதற்கு  
இந்த மடல் ஒரு ஆதாரம் !
அன்று -    
ஆழகிய பாவை ஒருத்தி     
நம்மை பார்க்கும் போது  
'அவள் என்னை தான் பார்க்கிறாள்'
- என்று நீ உரைக்க ! 
'என்னை விட அழகன் நீ'
- என்று நான் பொய்யுரைக்க !
'அவள் உன்னை தான் பார்க்கிறாள்'
 என்று நான் கேலி செய்ய !
நாம் வாழ்ந்த கல்லூரி நாட்களை     
எப்படிச் சொல்ல  !
இன்று -     
நீ பார்க்கும் பாவையர்களை        
நான் பார்க்கவில்லை ! 
நான் பேசும் பெண்ணிடம்      
நீ பேசவில்லை !
அன்று -
நம் நான்கு கண்களில்
ஒரே அழகை ரசித்தோம் !
இன்று -      
தேசம் வேறு ஆனதால்     
வேவ்வெரு அழகை ரசிக்கின்றோம் ! 
வெளிச்சத்தில் மறையும்
தீப்பொறி போல்  
எல்லா துறையில் வல்லவனாக     
என்னை நான் முற்பட்டேன் !
ஒரு துறையில் திறமை காட்ட    
எழுத்து பக்கம் திசை காட்டினாய் ! 
ரயில் பொட்டிப்போல்    
பேச்சை அடுக்கிக் கொண்டு இருந்தேன் !
அதிகமாய் பேசும் நாவை
பூட்டு என்றாய் !
 
தவறு செய்ய தவறியவன்  
வரலாறு படைப்பதில்லை என்றாய் !
என் தவறுகளில்
பாடம் படிக்கச் சொன்னாய் !
காதல் கடிதங்கள்   
பொய்களைச் சொல்லும் !
நட்பின் கடிதங்கள்   
மனதைச் சொல்லும் !
 
உனக்கோ 
அங்கு பல நண்பர்கள்  
எனக்கும் 
இங்கு பல நண்பர்கள்
ஆனால்...   
என் தமிழுக்கு முதல் நண்பன் நீ  !
நம் சந்திப்பை  
கடல்,எல்லை,பாஸ்போட்,விசா  
இவைகள் தடுக்கலாம்  
நாம் சந்தித்த   
நினைவுகளை இல்லை |
நம் முதல் சந்திப்பில்  
வழிப்போக்கர்களாக சந்தித்தோம் ! 
நாளை சந்திப்பில்   
நாம் உலக்கிற்கு வழிக்காட்டிகளாக ...!!
No comments:
Post a Comment