Monday, May 3, 2010

படித்ததும் பார்த்ததும் - 3.5.10

தேவதை, திரிசக்தி, தமிழக அரசியல் போன்ற இதழ்களை வெளியீட்டு வரும் திரிசக்தி குழுமம் , இப்போது மேலும் மூன்று இதழோடு வருகிறது. ஜோதிடம், சினிமா, இலக்கியம் போன்ற பிரிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. பதிப்பகம் மூலம் மேலும் பல புத்தகங்களை வெளியீட இருப்பதாக தெரிகிறது.

விகடன் மார்க்கெட்டை பிடிக்க மிக தீவிரமாக திரிசக்தி இறங்கியுள்ளது. இது போன்ற போட்டிகளில் யார் வெற்றி பெற்றாலும் வாசகர்களுக்கு கண்டிப்பாக வெற்றி.

திரிசக்தி குழுமத்திற்கு வாழ்த்துகள் !!

***

சமிபத்தில் நாம்மக்கல் கவிஞர் ராமலிங்கம் அவர்கள் எழுதிய "என் கதை" சுயவரலாறு படிக்க வாய்ப்பு கிடைத்தது. இன்னும் முழுமையாக படித்து முடிக்கவில்லை. தன் வாழ்க்கை கதையை இவ்வளவு எளிமையான நடையில் எழுதியிருக்கிறார். தமிழில் நேரடி சுயவரலாறு புத்தகங்கள் மிகவும் குறைவு. கலைஞரின் " நெஞ்சுக்கு நீதி", கண்ணதாசனின் "வனவாசம்", "மனவாசம்" என்று விரல் விட்டு எண்ணிவிடலாம். கண்டிப்பாக அந்த வரிசையில் "என் கதை" புத்தகமும் இடம் பெறும். முழுமையாக படித்துவிட்டு பதிவிடுகிறேன்.

***

1.5.10 அன்று நம் உரத்தசிந்தனை நடத்திய "எழுத்துக்கு மரியாதை" நிகழ்ச்சியில் நாகரத்னா பதிப்பகம் ஸ்டால் போடப்பட்டது. முன்பு விட அதிக அளவு புத்தகங்கள் பார்வைக்கு வைத்தும், எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வராததால் விற்பனை சொல்லும் படியாக இல்லை. ஆனால், இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொது தான் பதிப்பாளனாக கற்றுக் கொள்ள முடிகிறது.

***

சரத்குமார், நெப்போலியன் போன்றவர்களுக்கு பல வருடம் தவம் இருந்து தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்கள். ஆனால், ஜே.கே.ரித்தீஷ் இரண்டு படங்களில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுவிட்டார். அவரி விஜய் டி.வியின் வேடிக்கையான நேர்காணல்.

நான் மிகவும் ரசித்த கேள்வி பதில்...

கேள்வி : கானல் நீரை நீங்களாவது முழுசாப் பார்த்தீங்களா?
ஜே.கே: படத்தோட டைட்டிலுக்கு கீழே நானே ஒரு வரி போட்டிருப்பேன். கானல் நீர் – a true punishment.

கேள்வி : கானல் நீர் படத்தை ஏன் கலைஞருக்குப் போட்டுக் காட்டல?
ஜே.கே: அவ்வளோ பெரிய தண்டனையை தலைவருக்குக் கொடுக்க விரும்பல.


நிகழ்ச்சியை முழுமையாகப் பார்க்க : இங்கே.

1 comments:

VAAL PAIYYAN said...

VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com

LinkWithin

Related Posts with Thumbnails