வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, May 31, 2010

படித்ததும் பார்த்ததும் - 31.5.10

பிரபல தொலைக்காட்சி ஒன்று, தனது டி.வி நிகழ்ச்சிக்காக பல ஜோடிகளை அழைத்து போட்டிகள் நடத்தினர். போட்டியில் வெற்றிப்பெற்ற தம்பதியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தனர். இதில், எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் தன் மனைவியுடன் கலந்து கொண்டு முதல் பரிசு வென்றார். முதல் பரிசு வழங்குவது போல் படம் எடுத்து விட்டு, பரிசுடன் வெளியே வரும் போது ஒருவர் தடுத்தார். பரிசு பொருளை வீட்டுக்கு அனுப்புவதாக சொல்லி, கொடுத்த பரிசு பொருளை வாங்கி கொண்டார். அன்று ஐந்து வாரத்திற்கு சேர்த்து நிகழ்ச்சியை படம் பிடித்ததில் , முதல் பரிசுக்கு ஒரே பெட்டியை பயன்படுத்தியுள்ளார்கள் என்று பிறகு தான் என் நண்பருக்கு தெரியவந்துள்ளது.

முதல் பரிசு பெற்ற தம்பதியருக்கு பரிசு பொருளே வரவில்லையாம். டி.வியில் அவர்களை காடியது தான் மிச்சம்.

பரிசு மழை, பம்பர் பரிசு என்று அறிவித்து பல போட்டிகள் நடத்தி தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக் கொள்கிறார்கள். உண்மையில் பரிசு பொருள் போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு கிடைக்கிறதா என்று விசாரனை செய்ய தனி குழுவே தேவைப்படும் போலிருக்கிறது.

***
சுட்டாச்சு சுட்டாச்சு
பக்கங்கள் : 286
விலை.120

காங்கிரஸ் ஆதரவாளாரான எம்.ஆர்.ராதா தி.மு.க தொண்டரான எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கு பற்றின விசாரணை புத்தகம். இந்த கொலை முயற்சிக்கு பிறகு மருத்துவமனையில் இருந்தபடி எம்.ஜி.ஆர் பரங்கிமலை தொகுதியில் வெற்றி பெற்றார். தி.மு.க முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. காமராஜர் கல்லூரி மாணவரிடம் தோல்வியுற்றார்.

இரண்டு திரை கலைஞர்களுக்குள் இருக்கும் அரசியல் கருத்து வேறுபாடு, தமிழ அரசியல் மாற்றத்திற்கு முக்கிய காரணங்களில் இதுவும் ஒரு காரணமாக இந்த சம்பவத்தை சொல்லலாம்.

நந்தா என்ற கதாப்பாத்திரத்தை புகுத்தி கற்பனை நடையில் உண்மை சம்பவத்தை மிக ஸ்வாரஸ்யமாக கொடுத்துள்ளார் சுதாங்கன்.

எம்.ஆர்.ராதா - என்.எஸ்.கே விவகாரம் எம்.ஆர்.ராதாவின் குணத்தை அறிந்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தகவலாக இருந்தாலும், இந்த புத்தகத்திற்கு தேவையில்லாதது.
எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படிப்பது போல் சில இடங்களில் தோன்றுவதை தடுக்க முடியவில்லை. வழக்கு விசாரணை பற்றிய புத்தகம் என்பதால் படித்த கேள்வி - பதில், தேவையில்லாத கேள்விகள் என்று எல்லாவற்றையும் படிக்க வேண்டியதாக உள்ளது. படிக்கும் வாசகனுக்கே இப்படி இருக்கும் போது விசாரணைக்கு பதில் அளித்தவருக்கு எப்படி இருந்திருக்கும்.

***

நேற்று ஜெயா டி.வி நிகழ்ச்சியில் ஒரு சிறுமி தன் ஒரு நாள் முழுக்க செய்யும் வேலையை பற்றி பட்டியல் போட்டாள். ஸ்கூல், டூஷன், பியனோ க்லாஸ் என்று பல வகுப்பு இருப்பதால், அரை மணி நேரம் தான் தன்னால் டி.வி பார்க்க முடிகிறது என்று குறைப்பட்டு கொண்டாள்.

பெரியவர்களை விட சிறுவர், சிறுமியர்கள் பிஸியாக இருக்கிறார்கள் என்ற உண்மையை அப்போது தான் புரிந்தது.

நேரமின்மையை பற்றி பேச பெரியவர்களை விட சிறுவர்களுக்கு அதிக உரிமை இருக்கிறது.

***

நாகரத்னா பதிப்பக சார்பில் 'கவிதை உலகம்' என்ற கவிதை தொகுப்பு நூல் போட இருக்கிறோம். படைப்புகள் அனுப்ப விரும்புவோர் 'nagarathna_publication@yahoo.in' என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

தலைப்பு : எழுத்தாளர் விரும்பும் தலைப்பில் எழுதலாம்

கவிதை 24 வரிக்குள் இருக்க வேண்டும். ஹைக்கூ, மரபு, புதுக்கவிதை என்று எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

கவிதைகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 30.6.10

1 comment:

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

LinkWithin

Related Posts with Thumbnails