வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, December 15, 2009

பிச்சைக்காரி !?



கருவில் சுமக்காத குழந்தையை
கையில் சுமந்து
யாசகம் கேட்ட பிச்சைக்காரி !

குமரியாக இருந்தாலும்
அன்னை வேடத்தில்
அனுதாபத்தை காசாக்க
காரின் ஜன்னல் வெளியே
கைய்யேந்தினாள் !

பெண் என்றதும்
காற்றடித்த காகிதம் போல்
சீமானின் சட்டை பையில்
தெரிந்தே விழுந்தது
ஐந்நூறு ரூபாய் காகிதம் !

இரவில்
அதுவே அவள் ஆடையானது !
காலையில்
மீண்டும் அன்னையானாள்
அடுத்த நாள் இரவை கடப்பதற்கு... !

**

உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை

12 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

முதல் மூன்று வரிகளே ரொம்ப நல்லா வந்துருக்கு குகன்...!

sri said...

nice kavithai

U.P.Tharsan said...

நல்லாயிருக்கு.... அதுசரி அது அடையானதா ஆடையானதா???

karthikeyan pandian said...

good one

thiyaa said...

அருமை நல்லாயிருக்கு...

காயத்ரி said...

//காலையில்
மீண்டும் அன்னையானாள்
அடுத்த நாள் இரவுவை கடப்பதற்கு... !//

உண்மை அப்படித்தான் இருக்கிறது, அவர்களது நிலைமை...
அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாயிருக்கு

Thenammai Lakshmanan said...

மிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்

S.A. நவாஸுதீன் said...

வெற்றி பெற வாழ்த்துகள்

ராம்குமார் - அமுதன் said...

அருமையான கவிதை... வாழ்த்துக்கள்...

Sakthi said...

சமூக அவலத்தை எடுத்து சொல்லும் அருமையான வார்த்தைகள்.. வாழ்த்துக்கள்..

Unknown said...

கவிதை நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் அனைத்து பிச்சை எடுக்கும் பெண்களும் குழந்தை வைத்திருப்பார்கள் கரணம் குழந்தைக்காக பரிதாபப்பட்டு பிச்சை இடுவார்கள். இதற்காக குழந்தைகள் திருடப்படுகின்றனர்.எனவே இது போன்ற கவிதைகல்மூலன் ஆதரிப்பதை நிறுத்தவும்.

LinkWithin

Related Posts with Thumbnails