வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, December 3, 2009

குறும்படம் : என் மேல் விழுந்த மழைத்துளி

பதினைந்து நிமிடத்தில் ஒரு காதலை அழகாக சொல்ல முடியும் நிருபித்த தமிழ் குறும்படம். ஏற்கனவே... தமிழ் சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட கதை தான். ஆனால், இரண்டுரை மணி நேரம் சொன்ன விஷயத்தை சில நிமிடத்தில் உணர வைப்பதை பாராட்டியாக வேண்டும்.

கதாநாயகனாக வரும் அருள், காதலில் காட்டும் முகபாவனையும் மிக அருமை. இறுதி காட்சியில் நடிப்பு ( 'சேது' விகிரம் ஞாபகம் வந்தாலும்) அனுபவத்து நடித்திருக்கிறார்.

'ஐயோடா...', 'சாம்பாரே' சொல்லும் போது 'கதாநாயகி' அஷ்யானா தாமஸ் குரல் கொஞ்சுகிறது. கண் சிமிட்டுவதும் அழகு. பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல் தெரிவதால் என்னையும் அறியாமல் அவளை காதலிக்க வைக்கிறார். ( என் மனைவி இந்த பதிவை படிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்...). நடித்ததோடு இல்லாமல் 'சிறம் தொடும் மழைத்துளி...' என்ற பாடலையும் பாடியிருக்கிறார்.

பாடலிலே இருவரது காதலை மனதில் பதிவைத்துவிட்டுகிறார் இசையமைப்பாளர் நந்தா.

தன் காதலி கொடுக்கும் பரிசு கொடுக்கும் , அதே பரிசில் தன்னை முடித்துக் கொள்ளுவதும் மனதை நெருடுகிறது. இரண்டு பேர் காதல் காட்சியை பார்க்கும் ஒரு படத்தை பார்த்த திருப்தியை கொடுத்திருக்கிறார் இயக்குநர் அட்லீ. (கதை, திரைகதை, வசனம், பாடல் எல்லாம் இவரே ! )

குறும்படம் என்றால் மெசேஜ் என்று சொல்லாமல் ஒரு காதல் கதையும் சொல்லலாம் என்று காட்டுகிறது இந்த படம்.

Part - 1



Part - 2



இவர்கள் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails