வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, May 15, 2009

ஜெயமோகன் எழுதிய 'நிழல் வெளிக்கதைகள்'

'கடவுள் உண்டா ? இல்லையா ? என்ற வாதங்கள் இழுவையில் இருப்பது போல் 'பேய்கள் உண்டா ? இல்லையா' என்ற வாதமும் இழுவையில் உள்ளன. 'கடவுளை பார்த்தேன்' என்று ஒருவன் சொன்னால், அவனை பைத்தியக்காரனாக பார்ப்பவர்கள் கூட, 'இந்த இடத்தில் பேய் இருக்கிறது' என்று சொன்னால் உள்ளூர இருக்கும் பயத்தில் செல்லமாட்டார்கள். 'கடவுள் இல்லை' என்று சொல்பவர்கள் கூட மனதில் ஒரு இடத்தில் பேய் பயம் ஒழிந்துக் கொண்டு இருப்பதை தான் இது காட்டுகிறது. அப்படிப்பட்ட பேய்களை பற்றின பத்து சிறுகதைகள் தான் ஜெயமோகன் எழுதிய 'நிழல் வெளிக்கதைகள்'.

'Evil dead, Excorist போன்ற படங்களை நல்லிரவு 12 மணிக்கு கூட தனியாக பார்த்திருக்கிறேன். இரவில் பேய் கதைகள் படிக்கும் அனுபவம் இது தான் முதல் தடவை. 'இமையோன்' சிறுகதையை படித்தவுடன் கொஞ்ச நேரத்தில் பேய் உல்கத்திற்கு சென்று விட்டேன். அடுத்த சிறுகதையான 'பாதைகள்' படிக்கும் போது வீட்டில் கீழே விழுந்த பாத்திரம் எப்படி பயமுறுத்தும் என்று அப்போது தான் புரிந்துக் கொண்டேன்.



பேய் படமாக இருந்தாலும், புத்தகமாக இருந்தாலும் யாராவது நம்மை தொடாத வரை நாம் தைரியசாலியாக தான் இருக்கிறோம். அந்த சமயத்தில் ஒருவர் அழைக்கும் போது, சத்தம் கேட்கும் போதும் நமக்குள் ஒழிந்து இருக்கும் பயம் பிரீட்டு வெளிப்படுகிறன.

"தம்பி" சிறுகதை குறிபிட்டு சொல்ல வேண்டும். சுபமாக முடியும் என்று எதிர்பார்த்த கதை. ஆனால், பயத்தில் பேய்யை உதாசினம் செய்வதால் மேலும் பேய் விடாது என்பதை கதை உணர்த்துகிறது.பத்து சிறுகதைகளும் பேய்களால் மனிதன் ஆழ் மனதில் இருக்கும் பயமும், பீதியை காட்டுகிறது, 'பேய் இல்லை' என்று சொல்பவன் கூட தன் மனதில் ஒழிந்து இருக்கும் பேய் குணங்களோடு தான் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறான்.

ஜெயமோகன் அவர்கள் பீதியும், பரபரப்பும் உருவாகும் படி எழுதியிருக்கிறார். வரிவேலு பாணியில் சொல்வதென்றால் " நல்ல தான் கலப்புறாங்க பீதிய ?" என்று சொல்லும்படி இந்த சிறுகதைகள் இருக்கிறது.

உயிர்மை பதிப்பகம்,
பக்கங்கள் : 120, விலை.60

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails