வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, May 25, 2012

நேரு vs ராஜாஜி, காமராசர்

இலக்கிய நிகழ்வில் ஒன்றில் முத்த பத்திரிக்கையாளர் ’மின்னூர்’ சீனிவாசன் அவர்கள் நேருவைப் பற்றி உரையாற்றினார். நேருவின் மீது எனக்கு ஆர்வம் இல்லை என்றாலும், சீனிவாசன் அவர்களின் உரையை கேட்பதற்காக அமர்ந்தேன். சில தகவல்கள் உண்மையிலே மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது.

**


அறிஞர் அண்ணா அவர்கள் நேருவின் கருத்துக்கு எதிராக மேடையில் பேசியது நேருவின் காதுக்கு சென்று இருக்கிறது. அப்போது, நேரு முதல்வர் ராஜாஜியை தொடர்பு கொண்டு கேட்ட போது ராஜாஜி, “ Don’t worry Nehruji. I will Suppress them” என்றார்.
அதற்கு நேரு, “நான் அவர்களை கட்டுப்படுத்த சொல்லவில்லை. உங்கள் மாநிலத்திற்குள் ஒரு கலாச்சார ஏக்கம் தெரிகிறது. அதை இங்கு இருந்து என்னால் உணர முடிகிறது. அதை கவனித்து சரி செய்யுங்கள்என்றார்.

**

ராஜாஜி கவர்மெண்ட் ஜென்ரல் பதவியில் இருந்து ஓய்வு பெரும் விழாவில் எல்லோரும் ராஜாஜியை பெருமையாக பேசினார்கள். அவரைப் பற்றி நேரு பேசும் போது, “ இதயத்தின் பங்கு இல்லாமல் எப்படி மூளை பலத்தை கொண்டு பொதுவாழ்க்கையில் இவரால் நிர்வாகம் செய்ய முடிகிறது என்பதை பல முறை பார்த்து வியந்துள்ளேன்என்றார்.

ராஜாஜி இதயமில்லாமல் நிர்வாகம் செய்தார் என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.

**

நேரு இந்தியாவை நான்கு மாநிலமாக (வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு) பிரிக்கலாம் என்று எண்ணிய போது, எல்லா தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், காமராசர் மட்டும் ஏற்றுக் கொள்ள்வில்லையாம். அதற்கு அவர் கூறிய பதில், ” எங்க தமிழ் நாட்டுக்காரங்கள் ஒத்துக்க மாட்டாங்க” என்றார்.

ஒரு சில கருத்தின் காரணமாக நேருவும் நான்கு மாநிலமாக இந்தியாவை பிரிக்கும் எண்ணத்தை கைவிட்டார்.

**

நேருவின் மொழிகள்



I am not Socialist. I am not communist. I am an Individualist.

There is one way traffic in Time.

1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails