வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Saturday, August 28, 2010

நாகரத்னா பதிப்பகம் வேலூரில் என்ன செய்கிறது ??

முதல் முறையாக வேலூரில் 'புத்தகக் கண்காட்சி - நூலாறு 2010' என்ற பெயரில் பிரமாண்டமான புத்தகக் கண்காட்சி நடைப்பெறவுள்ளது. பல புத்தகக் கண்காட்சி நிபந்தனைகளில் இருந்து விடுபட்டு இப்புத்தகக் கண்காட்சி மாறுபட்டு இருக்கிறது.



புத்தகம் பார்க்க வரும் வாசகர்களுக்கு அனுமதி கட்டனம் இல்லை. ஒவ்வொரு முறையும் பணத்தை செலவு நுழைய வேண்டும் என்ற தொல்லை வாசகனுக்கு இருக்காது. ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் உள்ளே வரலாம்.

வார நாட்களில் மதியம் 2:30 முதல் இரவு 8:30 வரை நடைபெறும் கண் காட்சியில் இருந்து விடுபட்டு வார நாட்களிலும் காலை 11 முதல் இரவு 8:30 வரை வேலூர் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

குறும்படம், உலக சினிமா திரையிட பிரத்யேக கண்காட்சி அரங்கம் அமைத்திருக்கிறார்கள்.

இவை எல்லாவற்ற்கும் மேலாக ஒரு முக்கியமான விஷயம்.... முதல் முறையாக 'நாகரத்னா பதிப்பகம்' நேரடியாக புத்தக கண்காட்சியில் அடியெடுத்து வைக்கிறது. (ஸ்டால் : 51). உள்ளே நுழைந்தது மூன்றாவது ஸ்டால் !! நாகரத்னா பதிப்பக நூல்களோடு இருவாட்சி, சோலை, பாலவசந்தா... எங்களை போன்ற சிறு பதிப்பகத்தின் நூல்கள் விற்பனை உரிமை வாங்கி விற்கபடுகிறது.

கேபிள், பரிசல் போன்ற பதிவர் நூல்களோடு ஒரு பாதி இலக்கிய சம்மந்தமான நூல்களும், இன்னொரு பாதி மாணவர்களுக்கு சுய முன்னேற்றம், பாட நூல்களும் உள்ளது. வேலூர், காட்பாடி, ஆரணி அருகில் உள்ள பதிவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் நாகரத்னாவின் அரும்பு முயற்சியை ஆதரப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் விபரங்களுக்கு....

***

இன்று(28.8.10), 'கவிதை உலகம்' நூல் வெளியீட்டு விழா தேவநேயப் பாவாணர் நூலகம் கட்டிடம், சிற்றரங்கம் , LLA, அண்ணா சாலை, சென்னை – 2, மாலை 6 மணி நடைபெறவிருக்கிறது.

அனைவரும் வருக !!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails