வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Saturday, September 11, 2010

அட்டடென்ஸ் பதிவு !

வேலை எழுத்து ஆர்வமுள்ளவனை எப்படி விழுங்குவிடுகிறது என்று கடந்த பத்து நாட்களில் அனுபவ ரீதியாக உணர்ந்துக் கொண்டேன். என்ன தான் வேலை, டென்ஷன் இருந்தாலும் ஒரு நாளைக்கு பத்து நிமிடமாவது படிப்பேன் இல்லை என்றால் எழுதுவேன். கடந்த பத்து நாட்களில் எந்த புத்தகத்தை படிக்கவோ, எழுதவோ முடியவில்லை.

28.8.10 அன்று ‘கவிதை உலகம்’ வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. பதிவு நண்பர்கள் வேடியப்பன், லக்கி, ஆதிஷா வந்திருந்தார்கள். முதல் முறையாக நிகழ்ச்சி நடத்திய செலவுக்கு மேல் புத்தகம் விற்பனையானது. ஆனால், இதை பற்றி பதிவு போட இப்போது தான் நேரம் கிடைத்தது. 'கவிதை உலகம்' நூல் வெளியீடு, வேலூர் புத்தகக் கண்காட்சி , அலுவலக வேலை என்று என்னை கட்டிப்போட்டு கைதியாகவே மாற்றிவிட்டது.

எந்த பதிவும் எழுதாததால் எதோ பதிவுலகில் இருந்து அந்நியப்பட்டு விட்டோமோ என்ற உணர்வு தோன்றியது. என்ன எழுத வேண்டும், எதை பற்றி எழுத வேண்டும் என்று யோசிக்க கூட முடியவில்லை. புத்தக கண்காட்சி முடிந்தாலும் அதன் சார்ந்த சில வேலைகள் முடிந்தபாடில்லை. இன்னும் தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது. எல்லா வேலைகளும் முடிய ஒரு வாரம் மேல் ஆகும்.

யாரும் என்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக, ஒரு அட்டடென்ஸ் போட தான் இந்த பதிவு.

***

நாகரத்னா பதிப்பகத்தின் வெளியிடான 'கவிதை உலகம்' நூல் வாங்க....

1. பெயர் : K.G.Kannan
வங்கி எண் : 50132 82449
வங்கி : Citibank, Chennai

வங்கியில் பணம் செலுத்திய பிறகு, tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் வீட்டு முகவரி அல்லது தொடர்பு கொள்ளும் முகவரி அனுப்பவும்.

2. M.O / Cheque / DD மூலம் வாங்க விரும்புபவர்கள் 'K.G.Kannan' என்ற பெயரில் ரூ.45 (தபால் செலவு ரூ.10 சேர்த்து)யை, Nagarathna Pathippagam, 3A., Dr.Ram Street, Paddy field Road, Perambur, Chennai - 11 முகவரிக்கு அனுப்பவும்.

புத்தகத்தோடு சான்றிதழ் பெற விரும்புபவர் கோரியர் ரூ.25 அனுப்பவும்.

3. இணையத்தில் வாங்க...
http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=156

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails