வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, August 19, 2010

ஓஷோ சொன்ன கதை - 3

புத்தரின் சீடன் ஒருவன் அவர் போதனையைப் பரப்ப அவரை விட்டு விலக எண்ணினான். அப்போது அவன் புத்தரிடம், " பெண்களிடம் எப்படி அணுகுவது ?" என்று கேட்டான். துறவிகளுக்கு எப்போதும் இது தான் பிரச்சனை.

புத்தர் கூறினார், " அவர்களை பார்க்காதே ! இது தான் சுலபமான வழி" என்றார்.

ஐயோ ! அது அவ்வளவு சுலபமில்லை. புத்தருக்கு எளிதாக இருக்கலாம். அது நமக்கு உதவாது என்று நினைத்த அந்த சீடன் புத்தரிடம், " பார்ப்பதைத் தவிர்க்க முடியாமல் போனால் என்ன செய்வது?" என்றார்.

" தொடாதே !" புத்தர் கூறினார்.

பார்ப்பது கூட ஒருவகையில் தொடுதல் தான். கண்களால் தொடுதல். ஒரு பெண்ணை மூன்று கணங்களுக்கு மேல் வெறித்துப் பார்த்தால் அவள் கூச்சப்படுகிறாள். உன் கண்களை கைகளாக்கி நீ அவளைத் தொட்டுக் கொண்டுள்ளனர்.

மீண்டும் சீடன், " சில சந்தர்ப்பங்களில் பெண்ணை தொடுகிற நிலையும் ஏற்படுகிறது. ஒரு பெண் தெருவில் விழுந்து கிடந்தால் யாரும் அவளை கவனிக்காத இடமாக இருந்து விட்டால் அவளுக்கு உதவுவதற்காக தொட நேரிடுமே ? அப்போது என்ன செய்வது ?"

புத்தர் சிரித்து விட்டு சொன்னார், "அப்படியானால் விழிப்புடன் இரு"

கடைசியாக புத்தர் கூறியது தான் உண்மை. கண்களை மூடுவது, தீண்டாமல் இருப்பது என்று எதுவும் உதவாது. செக்ஸ் பற்றி விளக்கம் சொல்லும் ஓஷோ சொன்னக் கதை.

***



ஒரு ஜென் துறவி மரணப் படுக்கையில் இருக்கிறார். அன்று மாலை தான் இருக்க மாட்டோம் என்றிந்து அதை அவர் அறிவித்தார். அவரது சீடர்களும், நண்பர்களும் கூடிவிட்டனர், ஒரு பழைய சீடன் குரு இறக்கப் போகும் சேதியறிந்து சந்தைக்கு ஓடி அவருக்கு விருப்பமாக கேக் ஒன்றை வாங்க செல்கிறான். அந்த குறிப்பிட்ட கேக் எங்கும் கிடைக்கவில்லை. இருந்தும், அந்த சீடன் விடாமல் தேடிக் கண்டுபிடித்து விட்டான். குருவும் யாருக்காகவோ காத்திருந்தார் எல்லோரும் அவரைப் பார்த்து வேதனைப்பட்டனர். சீடன் வந்தான்.

அவர் கண்களைத் திறந்து, " நீ வந்து விட்டாயா ? எங்கே என் கேக் ?" என்றார். சீடன் கேக்கை வாங்கி அளவற்ற மகிழ்ச்சியுடன் ருசித்தார்.

இதை பார்த்த ஒருவன் குரு மரணத்தில் நடுங்காமல் ஆச்சரியத்துடன் கேட்டான். அதற்கு குரு, " நான் நடுங்கவில்லை. ஏனென்றால் எனக்கு பயமில்லை. என் உடல் மூப்பு கொண்டாலும் நான் இன்னும் இளைமையாக இருக்கிறேன்."

மீண்டும் அவன், " உங்கள் கடை சேதி என்ன குருவே ?"

குரு புன்னகைத்தார். " கேக் மிகவும் ருசியாக இருக்கிறது " என்றார்.

சாகும் முன்பு இப்போது வாழ்கிற மனிதரின் அடையாளம் இது தான். கேக் ருசியாக இருக்கிறது. மரணம் கூட ஒரு பொருட்டல்ல. அடுத்த கணம் அர்த்தமற்றது என்பதை விளக்கவதற்காக சொல்லப்பட்ட கதை.

***

பழைய ஜென் சம்பிரதாயப்படி ஒரு சீடர் தன் குருவிடம் பத்து வருடங்களாவது சேர்ந்திருக்க வேண்டும்.

ஒரு ஜென் கதையில் பத்து வருடம் முடிந்து ஒரு சீடர் தன் குருவான 'நான் - இன்'னை சந்தித்தார். தான் விலகிச் செல்ல அனுமதி கேட்ட போது நான் - இன், " நீ உன் கால் செருப்புகளை வாசலில் விட்டு வந்திருக்கிறாய். ஆனால் உன் குடையின் எந்தப் பக்கத்தில் செருப்புகளை விட்டாய் ?" என்று கேட்டார்.

ஒரு கணம் அந்த சீடர் தயங்கினார். அந்த தயக்கம் தான் ஒவ்வொரு கணமும் ஜென்னுடன் இல்லாததை அவர் உணர்ந்துக் கொண்டார்.

நாம் செய்யும் எந்த காரியமானாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிட சொல்லப்பட்ட கதை.

4 comments:

Rajasurian said...

நல்ல பகிர்வு. நன்றி

VELU.G said...

நல்லபகிர்வு

ரசிகன் said...

கதைகள் நல்லாயிருக்கு:)

ramya said...

நல்லா இருக்கு கதைகள்!

LinkWithin

Related Posts with Thumbnails