வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, August 17, 2010

ஓஷோ சொன்ன கதை - 2

ஒரு பிச்சைக்காரன் அனாதை சிறுவன் ஒருவனை வளர்த்து வந்தான். பிச்சைக்காரனின் குடிசை அருகே சுடுகாடு இருந்தது.
இரவில் சிறுவன் சுடுகாட்டுக்குள் சென்று குறும்புகள் செய்யாமல் தடுக்க அவனிடம், "சுடு காட்டுக்குள் இரவில் நுழைந்தால் அங்கிருக்கும் பேய்கள் உன்னைப் பிடித்து தின்றுவிடும்” என்று பயப்படுத்தினான். அந்த சிறுவன் பெரியவனாக வளர்ந்து கல்வியறிவு பெற்ற பின்னும் பேய் பயம் ஓயவில்லை.

பிச்சைக்காரன் வாலிபன் கையில் தாயத்தைக் கட்டி, " இப்போது தெய்வ சக்தி உள்ளது. கடவுள் உனக்கு பேய்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பார்" என்று கூறினான்.

வாலிபன் தைரியமாக சுடுகாட்டை இரவில் தாண்டி வெளியூர் செல்லும் போது, " பேய்களே அஞ்சும் கடவுள் எவ்வளவு பெரிய பேயாக இருக்க வேண்டும் ?" என்று நினைத்து கடவுள் மீது பயம் கொண்டான். முன்பெல்லாம் பேய்யை நினைத்து இரவில் பயந்தவன், கடவுளை நினைத்து பயப்படத் தொடங்கினான்.

விபரீதத்தை உணர்ந்த பிச்சைக்காரன் கொடுத்த தாயத்தை தூக்கி எறிந்து, சுடுக்காட்டில் சென்று பேய்களை பற்றியும், பிசாசுகளை பற்றியும் விளக்கினான். அதன் பிறகு அந்த வாலிபன் மனதில் இருக்கும் பேய்களும், பிசாசுகளு விடைப்பெற்று மனத்தெளிவு பெற்றான்.

தெய்வ பயமும், சரணாகதியும் பற்றி விளக்கும் போது ஓஷோ சொன்ன கதை.

***


வாழ்நாள் முழுவதும் தீமைகளைச் செய்து விட்டு கடைசி நேரத்தில் கடவுளை நினைத்தால் போதுமா என்று ஒருவர் ஓஷோவிடம் கேட்கிறார். அதற்கு ஓஷோ ஒரு கதை சொல்கிறார்.

பேராசை பிடித்த வியாபாரி ஒருவன் மரணப் படுக்கையில் இருக்கிறான். எந்த நேரமும் அவன் உயிர் பிரிந்துவிடும் நிலையில் இருந்தது. அவன் கண்களை மூடிய நிலையில் இருந்தான். அவன் படுக்கையை சுற்றி கவலையுடன் அவன் மனைவி, மகன், மகள் என்று எல்லோரும் இருந்தனர்.

கொஞ்ச நேரத்தில் கண் விழித்த கிழவன், " என் மனைவி உங்கு இருக்கிறாளா ?" என்று கேட்டான். மனைவி, " இதோ இங்கு இருக்கிறேன்" என்றாள். மகள்களைப் பற்றி கேட்டதும் அவர்களும் இருப்பதாக மனைவி கூறினாள். "மகன் எங்கே ?" என்று வியாபாரி கேட்க, அதற்கு அவன் மனைவி " எல்லோரும் இங்கு தான் இருக்கிறார்கள். கவலையை விடுத்து ஓய்வு எடுங்கள்" என்றாள்.

"அப்படியானால் கடையை யார் கவனித்துக் கொள்வது ?" என்று கேட்டான்.

இந்த கதையில் உள்ள வியாபாரியைப் போல கடைசி நேரத்தில் மனிதன் மனதில் அதுவரை இருந்த எண்ணங்களின் சாரம் தான் தோன்றும்.

***

பணத்திற்கும் சொர்க்கத்திற்கும் சம்பந்தம் கிடையாது என்பதற்கு ஓஷோ ஒரு கதை சொல்லுகிறார்.

யாருக்கும் உதவாத ஒரு பணக்கார கஞ்சன் இறந்து சித்திரகுப்தர் முன் நிற்கிறான். அந்த பணக்காரன் கையில் இருக்கும் பணத்தை கொடுத்து சொர்க்கத்தின் கதவுகளை திறந்து விடும்படி கூறினான்.

சித்திரகுப்தர் சிரித்தபடி, " பூலோக முறைகள் இங்கு பயன் தராது. சொர்க்கத்தில் நுழையும் தகுதி பெறும் அளவிற்கு நீ யாருக்கு என்ன நன்மைகள் செய்தாய் ?" என்று கேட்டார்.

பணக்காரன் நன்கு யோசித்துவிட்டு, " ஒரு கிழவிக்கு பத்து பைசா தானம் கொடுத்தேன்" என்றான். சித்திரகுப்தர், "இது தவிர, வேறு ஏதாவது நன்மை செய்து இருக்கிறாயா ? " என்று கேட்டார்.

பணக்காரன் மேலும் யோசித்து, " ஒரு அனாதை சிறுவனுக்கு ஐந்து பைசா கொடுத்தேன்" என்றான். சித்திரகுப்தர் "இன்னும் வேறு உண்டா ?" என்று கேட்டதற்கு இல்லை என்று பதிலளித்தான்.

அப்போது சித்திரகுபதரின் உதவியாளர் சித்திரகுப்தரிடம், " இந்த பணக்காரனிடம் பதினைந்து பைசாவை திருப்பிக் கொடுத்துவிட்டு அவனை நரத்திற்கு அனுப்பிவிட வேண்டும்" என்றான்.

இந்த கதையில் வெறும் பதினைந்து பைசாவில் சொர்க்கத்தை வாங்க முடியாது என்பதற்காக ஓஷோ கூறினார்.

***

வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று எதுவும் புரியவில்லை என்று ஒருவன் ஓஷோவிடம் சொல்லும் ஒரு கதை சொல்லுகிறார்.

கிராமம் ஒன்றை அடுத்து உயரமான மலை இருந்தது. அதில் மரங்கள் வளர்ந்து இருண்ட காடாக இருந்தது. கிராமவாசி ஒருவன் மலை உச்சிக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது. பகல் வேளையில் இந்த மலையில் ஏறுவது மிக சிரமம். இதனால் இந்த கிராமவாசி இரவு வேளையிலேயே கையில் விளக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். கிராமத்தின் எல்லையில் அவன் நின்று விட்டான்.

அவன் கையில் உள்ள விளக்கின் வெளிச்சம் பத்தடி தூரத்திற்கு தான் தெரிந்தது. அதற்கு பின்னால் எல்லாம் இருட்டாகத் தெரிந்தது. அவனுக்கு ஒரு சந்தேகம். இந்த பத்தடி தூரத்திற்குத் தானே விளக்கின் வெளிச்சம் தெரிகிறது ? இதை வைத்துக் கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் எப்படி மலையேற முடியும் ? என்று யோசித்தான்.

அப்போது அங்கு ஒரு கிழவன் அதை விட சிறிய விளக்குடன் அங்க் வந்தான். அவனும் மலையேற கூறினான். கிராமவாசி கிழவனிடம் சந்தேகத்தை கேட்டப் போது, கிழவன் சிரித்தப்படி "விளக்கு தரும் வெளிச்சத்தில் நீ பத்தடி தூரம் முதலில் முன்னேறு, பின் அவ்வாறு முன்னேறிய நிலையில், இதே விளக்கின் வெளிச்சம் மேலும் பத்தடி தூரத்திற்கு தெரியும். அவ்வாறே எத்தனை கிலோ மீட்டர் வேண்டுமானாலும் நீ மலையேறிச் செல்லலாம்." என்றான்.

நீண்ட கால திட்டம் போடும் போது, உங்களுக்கு முன் இருப்பதை மறந்து விடு குழம்பக் கூடாது என்பதற்கு ஓஷோ கூறுகிறார்.

**

கதை கிடைத்த புத்தகம்

அர்த்தமுள்ள ரஜனீஷ் - பி.குமார் எம்.ஏ, நர்மதா வெளியீடு

2 comments:

கவி அழகன் said...

பின்னி பிடல் எடுதிடிங்க நண்பரே வாழ்த்துக்கள் தொடருவும்

ramya said...

நல்லா இருக்கு கதைகள்!!!

LinkWithin

Related Posts with Thumbnails