வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, August 16, 2010

ஓஷோ சொன்ன கதை - 1

ஒரு ஜென் சந்நியாசி மீது கோபம்க் கொண்ட அந்த தேசத்து அரசன், அவரை தூக்கிட உத்தரவிடுகிறான். கொல்வதற்கு முன்பு அவரசன் அவரிடம், " உனக்கு இன்னும் 24 மணி நேரம் தான் இருக்கிறது - நீ அதை எப்படி வாழ வேண்டும் என்று விரும்புகிறாய்" என்று கேட்டார்.

இதைக்கேட்ட சந்நியாசி சிரித்தவாறு, " நான் எப்போதும் வாழுவது போல - கணத்துக்குக் கணம் வாழ்கிறேன் ! என்னைப் பொறுத்தவரையில், இந்த கணத்துக்கு மேல் எதுவும் கிடையாது. ஆகவே, எனக்கு இன்னும் 24 மணி நேரம் இருந்தால் என்ன ? 24 வருடம் இருந்தால் என்ன ? எனக்கு இதில் எந்த வேற்பாடும் இல்லை. நான் கணத்துக்கு கணம் வாழ்ந்து வந்திருப்பதால், இந்த கணமே எனக்கு அதிகம் தான். இந்த ஒரு கணம் போதும்" என்றார்.

அரசர் ஒன்று புரியாமல் விழித்தார். அப்போது சந்நியாசி அரசரிடம், " நான் உங்களை ஒன்று கேட்க அனுமதி கொடுங்கள். நீங்கள் தொடர்ந்து இரண்டு கணங்கள் ஒரே சமயத்தில் வாழ முடியுமா ?" என்று கேட்டார்.

யாருமே அப்படி வாழ்ந்தது கிடையாது. வாழ்வதற்கு ஒரே வழி, ஒரு சமயத்தில் ஒரு கணம் வாழ்வது தான்.

யோக , யோகி, தியானம் பற்றி விளக்கம் சொல்ல ஓஷோ அவரள் உதாரணத்திற்கு சொன்ன கதை.

***



போதிதர்மர் சீனாவுக்கு சென்ற பொழுது, தன் செருப்பு ஒன்றை தலையிலும், மற்றொன்றை காலிலும் போட்டுக் கொண்டு நடந்தார். இதை பார்த்த அரசர், " நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? இது என்ன முட்டாள் தனம் ? " என்றார்.

அதற்கு போதிதர்மர், " நான் ஜோக் அடிக்கிறேன்" என்றார்.

அரசர், " நாங்கள் ஜோக் அடிக்கும் சாதுவை எதிர்பார்க்கவில்லை" என்றார்.

இதை கேட்ட போதிதர்மர், " ஒரு உண்மையான சாதுவால், எப்படி கடுமையாக இருக்க முடியும்? கடவுள் கடுமையாகவே இல்லை. அவர் எப்போழுதும் விளையாட்டில் தான் இருக்கிறார்" என்றார்.

திருமணம் அன்பது ஆத்மிகமானது அல்ல விளக்கம் சொல்லும் கூறிய கதை.

***

ஓஷோ அவர்கள் தனது சொற்பொழிவின் போது பல ஜென் கதைகள் சொல்லியிருக்கிறார். அதில், ஒன்று....

புகழ்பெற்ற குருவான ஒரு துறவி இறந்துவிட்டார். அவருக்கு இறுதி அஞ்சலி செய்ய ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த குருவின் முக்கிய சீடர், தன் குரு இறந்ததை நினைத்து தேம்பி தேம்பி அழுகிறார். வந்தவர்களுக்கு புரியவில்லை. பற்றற்றவன் அழக்கூடாது - அதுவும் ஆத்மாவுக்கு அழிவில்லை என்று கூறிக் கொண்டிருக்கும் ஒருவன் அழுததால், அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவர் சீடரிடம் நேருங்கினான்.

"எதற்காக அழுகிறீர்கள் ?" என்று கேட்டான்.

அந்த சீடர், " என்னால் எப்போதும் 'ஏன்' என்ற கேள்விகளோடு வாழ முடியாது. 'ஏன்' என்ற கேள்வி இல்லாத நேரமும் உண்டு. நான் இப்போழுது அழுகிறேன். அவ்வளவு தான்" என்று பதில் சொன்னார்.


கூட்டத்தில் இருப்பவர் இன்னொருவர், " நீங்கள் எப்போழுதும் ஆத்மாவுக்கு அழிவு கிடையாது என்று சொல்லி வந்தீர்கள். பிறகு ஏன் அழுகிறீர்கள் ?" என்று மீண்டும் கேட்டார்.

அதற்கு, "இப்போழுதும் நான் அப்படிதான் கூறுகிறேன். ஆனால், நான் அழுவதை அதனால் தடுத்து நிறுத்த முடியாது" என்றார்.

ஆத்மாவுக்கு அழிவில்லை என்று சொல்பவன் அழக்கூடாது. ஆனால், அந்தத் துறவி, "என் ஆத்மாவே அழும்போழுதும், என்னால் என்ன செய்ய முடியும் ? என்னால் எதுவும் செய்ய முடியாது. எது என்னிடம் வந்தாலும், நான் அதனுடன் ஒன்றாகி விடுகிறேன். என் கண்களில் கண்ணீர் வருகிறது. நான் அத்துடன் ஒன்றாகி விடுகிறேன்" என்று சொன்னார்.

கதைக் கிடைத்த புத்தகம்

The Great Challenge - ஓஷோ

1 comment:

என்னது நானு யாரா? said...

கதைகள் எல்லாம் அருமை! மனசை கிள்ளுதுங்கோ!

நான் புதுசா எழுத வந்திருக்கேன்! என் வலை பக்கம் நீங்க வாங்க. நான் எப்படி எழுதி இருக்கேன்னு சொல்லுங்க. கூட ஓட்டுக் கூட போடுங்க. (உங்கள் பதிவுக்கு ஓட்டு போட்டாச்சுங்க)

LinkWithin

Related Posts with Thumbnails