வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, June 24, 2010

கிரேக்கர்கள் ஓரின சேர்க்கையை ஏன் கொண்டாடினார்கள் ??

'300' என்ற ஆங்கிலப்படம். மற்ற நாடுகளுக்கு சென்று யுத்தம் நடத்துவதற்காக படைகளை தயாரிக்கிறார்கள். மரணத்திற்கு அஞ்சாத வீரர்களை உருவாக்க நினைக்கிறார்கள். அதனால், ஐந்து வயது சிறுவனாக இருக்கும் போது ஒவ்வொருவனுக்கும் போர் பயிற்சி அளிக்க முடிவு எடுக்கிறார்கள். குழந்தைகளை பெற்று கொள்வதற்காகவே பெண்களிடம் புணர்கிறார்கள். பிறக்கும் ஆண் குழந்தையை ஐந்து வயதில் அன்னையிடம் இருந்து பிரித்து கடுமையான பயிற்சிக் கொடுத்து பெரும் படையை உருவாக்கி யுத்தம் செய்வது தான் கதை.

பண்டைய காலத்தில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் போர் பிரியர்களாக இருந்தார்கள். போர் களத்தில் நாட்கள் கடத்துவதில் பெருமையாக நினைத்தார்கள். தங்கள் பலத்தை ஒரு ஆணிடம் காட்டுவதில் வீரம் என்று போற்றியவர்கள். கிளியோபட்ராவால் வந்த யுத்தமாகட்டும், 'இலியட்' இதிகாசத்தில் ஹெலனை வைத்து நடந்த மகா யுத்தமாகட்டும். பெண் யுத்தத்திற்கு காரண பொருளாக இருக்கிறாளே தவிர யுத்தத்தில் கலந்து கொள்ள அனுமதித்ததில்லை. யுத்தம் நடத்த காரணத்தை தேடுபவர்களகாக தான் கிரேக்கர்களின் போர் ஆசை இருந்தது.



பெண்களிடம் கூடுவதும் இனப்பெருக்கத்திற்காக மட்டும் தான். தங்களுக்கு ஒரு வாரிசு உருவாக்கி கொள்வதிலும், அடுத்த தலைமுறைக்கு படைகளை உருவாக்கி கொடுப்பது தான் பெண்ணின் முக்கிய வேலையாகவே வைத்திருந்தார்கள். அதனால், பெண்களுக்கு எந்த வித அதிகார பங்கும், பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. ஆண்டு கணக்கில் போர் விரும்பியர்களான கிரேக்க கணவர்களை அவர்கள் மனைவியர் பிரிந்து இருக்க வேண்டியதாக இருந்தது.

போர்களத்திற்கு சென்ற வீரர்கள் தங்கள் இச்சைக்கு ஆண்ணை புணர்ந்துக் கொள்ள இன்னொரு ஆண் நாடுவதுண்டு. அதே போல், ஆண் துணை இல்லாமல் பிரிந்து இருக்கும் பெண் இன்னொரு பெண்ணை தீண்டுவதும் கிரேக்கர்களின் வழக்கத்தில் ஒன்று. விதவை திருமணமோ, திருமணத்துக்கு முன் உடலுறவோ அவர்கள் கலாச்சாரத்திற்கு எதிரானது அல்ல.

போர் காலத்திலும் சரி, போர் ஒத்திகை சமயங்களிலும் சரி புணர்ந்து கொள்வதற்கு ஆண் ஆணை நாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இன்றும், இராணுவத்தில் ஓரின சேர்க்கையில் தங்கள் உணர்ச்சிகளை திர்த்துக் கொள்கிறார்கள். இதில், அமெரிக்க இராணுவமோ, இந்திய இராணுவமோ விதிவிளக்கல்ல.

மண்ணை வெற்றி பெரும் பொது பெண்ணையும் பாலியல் தொல்லை செய்வது முகலாயர் படையெடுப்பு தொடங்கி, இன்றைய ஈழத்தை ஆக்கிரமித்த இலங்கை வரை பொதுவான ஒன்று. ஆனால், உலக வரைப்படம் வரையாத காலத்தில் மாவீரர் அலெக்ஸாண்டர் தன் வெற்றி கொண்ட நாடுகளில் பெண்களை பாலியல் தொல்லை செய்ய அனுமதித்ததில்லை. தன் படை வீரர்களுக்கும் பெண்களை தொல்லை செய்யக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தான். பெண்கள் பாலியல் கொடுமை செய்த வீரர்களுக்கு தண்டனையும் கொடுத்திருக்கிறான்.

பல தேசங்கள் வெற்றி பெற்ற மாவீரன் வெற்றிக் கொண்டாடிய தேசங்களில் பண்களை புணர்ந்துக் கொள்ளாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் அவன் ஓரின சேர்க்கையாளன் என்பதால் தான். மாவீரன் அலெக்ஸாண்டர் பற்றி எழுதிய வரலாறு எழுத்தாளர்களும் அவரை அப்படிதான் குறிப்பிடிருக்கிறார்கள்.

ஆணும், பெண்ணும் கூடுவது தான் இயற்கை என்று சொல்கிறோம். ஆனால், அந்த இயற்கையான உணர்வால் எத்தனையோ பெண்கள் பாலியல் தொல்லை ஆளாகிறார்கள். ஆனால், ஓரின சேர்க்கை கொண்டாடிய கிரேக்க கலாச்சாரத்தில் ஆண் ஆணையும், பெண்ணையும் கற்பழித்ததாக எந்த புகாரும் வந்ததில்லையாம்.

இந்தியாவில் 53 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாளாம். காவல்துறையில் பதிவான வழக்கில் இருந்து வந்த புள்ளி விபரம் இது. பதிவாகாத வழக்குகளை வைத்து பார்த்தால், 40 நிமிடத்துக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படலாம். பசிக்கு உணவு கிடைக்காத நேரத்தில் திருட தோணும். அது போல், செக்ஸ் தேவையான சமயத்தில் செக்ஸ் கிடைக்காத போது தான் கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன என்று தற்கரிதியான வாதம் செய்யமுடியாது.

இப்படி செக்ஸ் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான பல வன்கொடுமைகள் நடப்பதை கட்டுப்படுத்தாதவர்கள், எங்களுக்கு பிடித்தவர்களிடம் செக்ஸ் வைத்துக் கொள்வதை ஏன் எதிர்கிறார்கள் என்று லெஸ்பியன் பெண் தன் உருமைக்காக கேள்வி எழுப்புகிறாள்.

பெண்களின் பாதுகாப்புகாக போதிய சட்டம் இல்லை என்பதற்காக 'ஓரின சேர்க்கை' சரி என்று சொல்லிவிட முடியாது. பெண்கள் லெஸ்பியன் விரும்பி சென்றால், ஆண்கள் அவர்களை மேலும் தொல்லை செய்யலாம்.ஆண்களும் 'ஓரின சேர்க்கையில்' ஈடுபட வேண்டியது இருக்கும்.

இப்படி ஒரு கேள்விக்கு பதிலளிக்க இன்னொரு கேள்வி தான் எழுகிறது. இதற்கு முடிவு காண முடியாமல் பட்டிமன்ற விவாதம் போல் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.கிரேக்க கலாச்சாரம் அழிந்து விட்ட நிலையில் அதை மேற்கொள் காட்டுவது 'ஓரின சேர்க்கையாளர்' வாதத்திற்கு ஆதரவாக அமையவில்லை.

ஓரின சேர்க்கையாளர் தங்கள் ஆதராவாக சொல்லப்படும் வாதங்கள் அடுத்த பதிவில்....

****

இந்த பதிவு எழுத அண்ணன் கோவிகண்ணன் 7 பதிவுகள் உதவியாக இருந்தது. கோவி கண்ணன் அவர்களுக்கு நன்றி !!

3 comments:

http://rkguru.blogspot.com/ said...

அருமையான பதிவு வாழ்த்துகள்..!

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html

Jegan said...
This comment has been removed by the author.
Jegan said...

If u dont mind can I ask.. Are u homo?

LinkWithin

Related Posts with Thumbnails