வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, April 15, 2013

RAW என்ன செய்கிறது ?

இந்திரா காந்தி புன்னியத்தில் உளவுத்துறை உருவாகிவிட்டது. 'ரா' என்று அழகிய நாமகரனமும் சூட்டிவிட்டார்கள். அவர்களுக்கு என்ன வேலை ? என்ன நோக்கங்கள், கொள்கைகள், செயல்பாடுகள் என்று எல்லாவற்றையும் வரைமுறைப்படுத்த வேண்டுமே ! மனித உயிர்களை கொள்ளும் தீவிரவாத இயக்கமே கொள்கையோடு இயங்கும் போது ஒரு நாட்டை பாதுகாக்கும் பொருப்பில் இருக்கும் உளவுத்துறை செயல்பாடுகள் எப்படி இருக்கும் ? பாதுகாப்பில் மட்டுமல்லாமல் எதிர் நாட்டை உளவு பார்க்கும் வேலையில், திட்டம் மிகவும் அவசியம்.

‘ரா’வின் செயல்பாடுகளைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

ராவின் முக்கிய வேலைகள்

1. அண்டை நாடுகளில் நிகழும் - அரசியல், ராணுவ மாற்றங்களைக் கண்காணிப்பது.
2. சர்வதேச கம்யூனிசத்தின் வளர்ச்சியை கண்காணிப்பது. அந்த நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள்ள தொடர்புகளைக் கண்காணிப்பது.
3. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ராணுவம் நவீன ஆயுதங்களை கண்காணிப்பது. ஏதாவது புது ஆயுதம் வாங்குவதாக தகவல், அதன் ரிஷிமூலத்தை மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் ஆராய வேண்டும்.
4. சர்வதேச நாடுகளில் வாழும், இந்திய சமூகத்தினைப் பயன்படுத்தி, அந்த நாடுகளில் கருத்துருவாக்கம் மற்றும் அரசியல் அழுத்தங்களை உருவாக்குதல்.

உலகில் எந்த ஒரு உளவு நிறுவனம் தொடங்குவதாக இருந்தாலும், அவர்களுக்கு பயிற்சி அளிக்க முதலில் அணுகுவது அமெரிக்க அண்ணனின் ‘சி.ஐ.ஏ’ என்பது மாற்றப்படாத விதி. அடுத்து பயிற்சிக்கு தொடர்பு கொள்வது அமெரிக்காவின் தம்பி இஸ்ரேலின் உளவு நிறுவனமான ‘மோஸாட்’. அதே விதியை தான் ரா விஷயத்திலும் பின்ப்பற்றப்பட்டது.



ராவில் பணியாற்றுபவர்கள் அமெரிக்கா, இஸ்ரேலிடம் பயிற்சிப் பெற்றவர்கள். ‘ரா’ வின் தலைமை அமைச்சரவை செயலாளருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார்கள். அமைச்சரவை செயலாளர் பிரதமருடன் தொடர்பு கொண்டுள்ளார். ஆனாலும், ஒவ்வொரு நாளும் – ‘ரா’ செயலாளர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருகிறார்.

இரண்டு சிறப்பு செயலாளர்கள் மற்றும் ஒரு சிறப்பு இயக்குனரின் கீழ் ‘ரா’வின் விமான ஆய்வு மையங்கள் இயங்குகின்றன. பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நான்கு கூடுதல் செயலாளர்களின் நிர்வாகத்தின் கீழ் விடப்பட்டுள்ளன. பல்வேறு தலைப்புகளின் கீழ் ‘ரா’ பிரச்சினைகளை கையாளுகிறது.

புது டெல்லி மட்டுமல்லாமல் வேறு பல இடங்களிலும் ‘ரா’விலும் மண்டல தலைமையகங்கள் உண்டு. சர்வதேச நாடுகளில், ரகசியமாக தகவல்கள் திரட்டி அனுப்பும் வேலைகளை கள அதிகாரிகளும் மற்றும் அவர்களது உதவியாளர்களும் கவனித்து வருகிறார்கள். திரட்டப்பட்ட தகவல்கள் இறுதியாக, ‘ஆய்வு அதிகாரிகளின்’ பார்வைக்கு வரும். திரட்டப்படும் தகவல் சரிபார்த்து, உண்மையானதா என்பதை உறுதி செய்துக் கொண்டு பிறகு அதற்கான செயல் திட்டங்கள் இறங்குவார்கள்.

என்ன தகவல் திரட்டுகிறார்கள் ?

தகவல் சேகரிப்பு : இந்தியாவின் நலன் தொடர்பான தகவல்கள் – முறையான வழிகளிலும், முறைகேடான வழிகளிலும் திரட்டப்படுகிறது.

தகவல் பகுப்பு : சேகரிக்கப்பட்ட தகவல்கள் – தலைப்பு வாரியாக பகுக்கப்பட்டு, கணினி வழியாக பதிவு செய்யப்படுகின்றன. புதுடில்லியிலுள்ள குண்டு துளைக்காத 13 அடுக்கு தலைமையகத்தில், இதற்கென்று தனித்தளம் உண்டு.

அதிரடி நடவடிக்கைகள் : உளவு பார்த்தல், கவிழ்ப்பு நடவடிக்கைகள், சதித் திட்டம், கலகக் குழுக்களை உருவாக்குதல் ஆகியவையும், ‘ரா’வின் செயல்பாடுகள் ஆகும்.

ஊடுருவல் : எதிரிகளின் உளவு நிறுவனங்களில் ஊடுருவி செயல்படும் முறையையும் ‘ரா’ பின்பற்றி வருகிறது. ஒரு காலத்தில் ‘ரா’ நிறுவனத்தின் முக்கிய பணியாக ‘ஊடுருவல்’ கருதப்பட்டது. ‘ரா’ உளவு நிறுவனங்களிலிருந்து பல முக்கிய அதிகாரிகள் வேறு நாடுகளின் உளவு நிறுவனங்களுக்கு தாவி விடுவது அதிகரித்து வருவதால், ‘ஊடுருவல்’ வேலைகளை இப்போது அதிகமாக ‘ஐ.பி’ மேற்கொண்டு வருகிறார்கள். 

( அண்மைக்காலமாக ‘ரா’ நிறுவனம், பாகிஸ்தானை விட சீனாவிடமிருந்து தகவல்களை திரட்டுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.)

 ‘ரா’ உளவு நிறுவனத்தின் உளவாளிகள் – தூதரகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தகவல் தொடர்பு நிறுவனங்களான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு செயல்படுகிறார்கள். ஆப்கானின் “காட்” (KHAD), இஸ்ரேலின் மொஸாத் அமெரிக்காவின் சி.ஐ.ஏ ஆகிய உளவு நிறுவனங்களோடு தொடர்பு கொண்டும் செயல்படுகிறார்கள். மேற்குறிப்பிட்ட உளவு நிறுவனங்கள் – பாகிஸ்தானின் அணு ஆயுதக் கொள்கைகளையும், அது தொடர்பான செயல்பாடுகளையும் கண்காணிப்பதும் ஒத்த கருத்துள்ளவையால் அவர்களின் ஆதரவு ‘ரா’ வுக்கு உண்டு.

ஆப்கானிஸ்தான், பிரிட்டன், ஹாங்காங், மியான்மர், சிங்கப்பூர் போன்ற நாடுகளைத் தளமாகக் கொண்டு, தீவிரமாக ‘ரா’ உளவு நிறுவனம் செயல்படுகிறது. தங்களது உளவு வேலைகளுக்கு, உள்ளூர் பகுதிகளிலிருந்தும் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். மது, மங்கை, பணம் போன்ற பலவீனங்களையும் பயன்படுத்தி, தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. சில நேரங்களில் மிரட்டியும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இனம் , பிரிவு, பிரிந்து போகும் கொள்கை போன்ற உணர்வு ரீதியான பிரச்சனைகளை முன்வைத்து பணிபுரிவோரின் பலவீனங்களுக்கு தீனி போட்டு தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

இதை எல்லாம் செய்வதால் ரா கெட்ட நிறுவனமோ, மக்களுக்கு எதிரான அமைப்போ இல்லை. எல்லா அரசு நிறுவனம் போல் ரா உளவு அமைப்பும் இந்திய நாட்டு மக்களுக்கான உருவாக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரை பணயமாக வைத்து, அந்நிய நாட்டை உளவு பார்த்து தகவல் திரட்டியிருக்கிறார்கள். அந்நிய நாட்டில் இவர்கள் மாட்டிக் கொண்டால், இந்தியாவுக்கும் இவர்களுக்கும் சம்மந்தமில்லை என்று இந்தியாவும் மறுத்திருக்கிறது. இராணுவ சிப்பாய்க்கு கிடைக்கும் இறுதி மரியாதைக் கூட நாட்டு பாதுக்காக்க தகவல் சேகரிக்கு உளவாளிக்கு கிடைப்பதில்லை.

பிரதமர், அமைச்சர்களின் கருத்துக்கு இவர்களின் செயல்பட வேண்டி இருப்பதாலும், அவர்களின் கருத்தை பிரதிபலிக்கும் தகவலை திரட்ட வேண்டியிருப்பதால் அரசியல்வாதிகள் மேல் இருக்கும் கோபம் இவர்கள் மீதும் வருகிறது.

பண்டைய காலத்திலும் சரி, தற்காலத்தில் சரி ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் உளவுத்துறை மிகவும் முக்கியம். அதற்கான பணியில் ‘ரா’ உளவு நிறுவனம் மிகவும் அவசியம். ஆனால், முழுமையாக மக்கள் பாதுகாப்புக்கு செயல்படுகிறதா ? என்பதை வரும் அத்தியாயங்களின் பார்ப்போம்.

உதவிய நூல்

விடுதலை க.ராசேந்திரன். எழுதிய "ஈழப் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி" பின் சேர்கை கட்டுரை.

LinkWithin

Related Posts with Thumbnails