வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, April 24, 2013

அந்த மூன்று பெண்கள் (2) - 7

என் பக்குத்தறிவுக்கு மட்டுமல்ல, தமிழர்களின் பகுத்தறிவுக்கு விளக்கேற்றியவர் பெரியார். என்னை வாழ வைத்த மாமாவை இழந்த இதே நேரத்தில், பெரியாரின் மரணம் என்னை மேலும் பாதித்தது. அரசு மரியாதையோடு அவர் உடல் தகனம் செய்ய போவததை என் மாமனார் சொன்னார்.

முதுமையிலும் கம்பிரமாக பேசக்குடியவர், எங்கள் சுய மரியாதையின் தந்தை என்று கண்கலங்கி சொன்னார். என் மாமாவின் மரணத்தை எப்படி என்னை பாதித்ததோ அதை விட பெரியாரின் மறைவு தமிழ் நாட்டை பாதிக்கும்.

பெரியாரின் சுய மரியாதை கொள்கையை ஏற்றுக் கொண்டதால், உறவினர்கள் எத்தனைப் பேர் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். எத்தனைப் பேர் மன உலைச்சல் ஆளாகியிருக்கிறார்கள். மனைவி, பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு தினமும் பதில் வேண்டியிருக்கும். இத்தனையும் கடந்து ஒருவன் சுய மரியாதை கொள்கையை ஏற்றுக் கொள்கிறான் என்பதை இந்த சமூகம் உணரும் போது தான், சுய மரியாதைக்காரர்களை மதிப்பார்கள்.

பார்ப்பனர்கள் இதை அரசியலாக பார்ப்பதால், அவர்களின் தாக்கம் மற்றவர்களையும் சுய மரியாதைக்காரர்களையும் அரசியல்வாதியாக பார்க்க வைக்கிறது. பல வலிகளை சுமந்து ஏன் சுயமரியாதைக் கொள்கையை ஏன் ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற கேள்வியை தங்களுக்குள்ளே ஒவ்வொருவனும் கேட்டு கொண்டால், சுயமரியாதையில் இருக்கும் சுகத்தை புரியும். பெரியார் இறந்து ஒரு வாரம் கலித்து, ஜோசப்பும், நானும் முத்தையா என்பவரிடம் ஜூனியராக பணிக்கு சேர்ந்தோம்.

 சீனியர் முத்தையா ஐம்பது வயது தாண்டியவர். சட்டத்துறையில் நல்ல அனுபவமுடையவர். வழக்குகளை அவர் கையாளுவதை பார்த்து நாங்கள் இருவரும் பிரம்மித்து விட்டோம். மாதம் ஐந்நூறு சம்பளம் கொடுப்பதாக சொன்னார். எனக்கு சம்பளம் பெரிதாக தெரியவில்லை. வழக்குகளை பற்றி கற்றுக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான். ஒரு வருடம் கலித்து தனி அலுவகம் வைக்கலாம் என்று ஜோசப் கூறினான். எனக்கும் அது தான் சரி என்று பட்டது.

 சிதம்பரத்தை விட்டு வந்தது அம்மாவுக்கு பிடிக்கவில்லை. நான் சொல்வதற்கெல்லாம் 'சரி சரி' என்று சொல்லிவிட்டு மனதில் ஏதோ போட்டு குழப்பிக் கொண்டே இருந்தார். அம்மாவுக்கு பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டதில் இருந்து நான் என்ன செய்தாலும் எந்த மாற்று கருத்தும் சொல்வதில்லை. கடவுள், பூஜை என்று இருந்து விடுவார். முன்பு போல் என்னிடம் அதிகம் பேசுவதில்லை.

அம்மா சாப்பிடுவதற்கு மட்டும் தான் பூஜை அறையை விட்டு வருவாள். என் மனைவி சிவகாமி சமைப்பதில் ஏதாவது குற்றம் குறை சொல்லிக் கொண்டே இருப்பாள். ஆரம்பத்தில் அம்மா பேசுவதது சிவகாமிக்கு கஷ்டமாக இருந்தது. பிறகு அம்மாவின் குணம் அவளுக்கு பழகிவிட்டது. ஒரு நாள் கூட அம்மாவை பற்றி தவறாக சொன்னதில்லை. தாயில்லாமல் அவள் வளர்ந்ததால் என் அம்மாவை தன் அம்மாவாக தான் பார்த்தாள். ஆனால், அம்மா தான் இன்னும் அவளை ராசியில்லாதவளாக பார்த்தாள். ஹோட்டலை விற்று சென்னைக்கு வந்ததும், அந்த எண்ணம் மேலும் அதிகமானது. சின்ன சின்ன விஷயங்களை பெரிதாக சொல்லி கொண்டு இருந்தாள்.

என் மனைவிக்காக பணிந்து பேசும் போதெல்லாம், " இது வரைக்கும் என்ன எதிர்த்து ஒரு வார்த்த பேசுவியா. இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் நா பண்ணுறது தப்புனு சொல்லுற அளவுக்கு நீ வளர்ந்திட்ட...." என்பாள். இன்னும் நான் ஏதாவது பேசினால், கண்களில் நீர் வைத்துக் கொண்டு நான் 'செத்து போறேன்' என்பாள். அதனால், அம்மாவிடம் அதிகம் பேசாமல் இருந்து வந்தேன்.

சிவகாமியிடம் அம்மா எது பேசினாலும் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது என்று சொல்லி வந்தேன். அம்மா அடிக்கடி சிவகாமியை குறை சொன்னாலும், மாமியார் கொடுமை என்று சொல்லும் அளவிற்கு இல்லை.

ஒரு முறை, பரூக் தன் குடும்பத்துடன் எங்கள் புது வீட்டுக்கு வந்திருந்தான். பாத்திமா எங்கள் வீட்டுக்கு வாங்கி வந்த பலகாரங்களை சிவகாமியிடம் கொடுத்து சமையல் அறைக்கு சென்றார்கள். இருவரும் சேர்ந்து சமைத்து ஒரு குடும்பமாக சாப்பிட வேண்டும் என்று முன்பே பரூக்கிடம் சொல்லியிருந்தேன். சிவகாமியும், பாத்திமாவும் சேர்ந்து சமைத்துக் கொண்டு இருக்க சாப்பிட போகும் எங்கள் நிலைமை நினைத்து பயந்திருந்தோம்.

என் அம்மா பரூக்கின் அம்மா ஆயிஷாவிடம் என்னை பற்றி சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தார். நான் முன்பு போல் இல்லையாம். மனைவிக்கு அதிகம் பணிந்து பேசுகிறேனாம். அவர்கள் என் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அம்மா என்னை பற்றி இப்படி சொன்னதற்கு எனக்கு வருத்தமாக தான் இருந்தது. ஆனால், நான் வருத்தப்பட்டு வந்த விருந்தாளிகளுக்கு தெரிய கூடாது என்பதில் அமைதியாக இருந்தேன். போக போக அம்மா மனம் மாறிவிடும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது. இதே போல் ஒரு நாள், ஜோசப் தன் மனைவி ஜாஸ்மின் அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தான்.

நேரம் கிடைக்கும் போது நண்பர்கள் வீட்டுக்கு வருவதும், நாங்கள் அவர்கள் வீட்டுக்கு செல்வதுமாக இருந்தோம். புது ஊருக்கு வந்த உணர்வு, கொஞ்ச கொஞ்சமாக மறைய தொடங்கியது.

நாங்கள் சென்னை வந்து இரண்டு மாதமானது.

கோர்ட் வேலை எல்லாம் முடித்து விட்டு வீட்டுக்கு சென்ற போது அம்மா வாயில் சக்கரை தினித்தார்.

"டேய் ! நீ அப்பாவாக போற...." என்றார்.

சென்னைக்கு வந்து அம்மா சிரிப்பதை இன்று தான் நான் பார்க்கிறேன். மாமாவின் மரணம், ஹோட்டல் விற்றது, சிதம்பரத்தை காலி செய்தது என்று தன் எல்லா கவலைகளை மறந்து பேர குழந்தை பிறக்க போவதை நினைத்து சந்தோஷமாக இருந்தார். நான் அப்பாவாக போவதை விட அம்மாவை பழையப்படி சந்தோஷமாக பார்த்தது தான் எனக்கு பெரிய சந்தோஷமாக இருந்தது.

அம்மா வழக்கம் போல் கருவுற்ற என் மனைவிக்காக கடவுளிடம் நன்றி சொல்ல பூஜையறைக்கு சென்றார். அவளை கருவுற செய்தவன் எனக்கு வாழ்த்துக்கள் மட்டுமே !! எப்படியோ அம்மா பழையப்படியானதே எனக்கு போதும் என்று இருந்தது.

என் அறைக்கு சென்று சிவகாமியை பார்த்தேன். வெட்கப்பட்டு திரும்பிக் கொண்டாள். நான் அவளை கட்டியனைத்தேன். எத்தனையோ முறை அவளை கட்டி அணைத்திருந்தும், இப்போது இரண்டு பேரை சேர்த்து கட்டியணைப்பது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. நாளை, எங்கள் அணைப்பை ஒரு குழந்தை வந்து தடுக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். சிவகாமியின் வயிற்றை தடவி பார்த்தேன். இப்போதே குழந்தை வெளியே வந்து என்னிடம் பேச கூடாதா என்று தோன்றியது.

என் மாமனார் இனிப்புகளோடு வந்திருந்தார். தலைபிரசவம் அம்மா வீட்டில் பார்க்க வேண்டும் என்ற போதிலும் அங்கு பெண்கள் யாரும் இல்லாததால் எங்கள் வீட்டிலே பார்த்து கொள்கிறோம் என்றோம்.

அம்மா சிவகாமியை அன்போடு கவனித்து கொண்டார். அவள் மீது உள்ள கோபம், வெறுப்பு எல்லாம் மறைந்திருந்தது. அவளை பூ போல் பார்த்துக் கொண்டார். பிரசவ நாள் நெருங்க நெருங்க சிவகாமி பயம் அதிமானது. அம்மா அவளுக்கு தைரியமுட்டினாள்.

கோர்ட் வேலையாக ஜோசப்பிடம் ஒரு பத்திரத்தை பற்றி பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது அலுவகத்திற்கு போன் வந்தது. என் மாமனார் தான் பேசினார். சிவகாமிக்கு பிரசவ வழி வந்திருப்பதாக கூறினார். நான் அந்த பத்திர வேலையை ஜோசப்பிடம் கொடுத்து விட்டு சிவகாமியை பார்க்க சென்றேன்.

 மாலை ஆறு மணி.

சிவகாமி பிரச வேதனையில் நாக்கை கடித்து கத்தி கதறுவது காதில் கேட்டது. உடம்பில் இருக்கும் நாடி, நரம்பு இழுத்துக் கொண்டு கத்தினாள். அவள் ஒவ்வொரு முறையும் கத்தும் போதும் என் கண்களில் இருந்து நீர் துளி தரையில் விழுந்துக் கொண்டு இருந்தது.

இரவு ஒன்பது மணி.

முதலில் கத்தியதை விட இன்னும் அதிகமாக கத்தினாள். இடையில் சத்தம் கேட்காமல் இருந்தது. திடீர் என்று சத்தம் போட்டாள். ஏன் இவ்வளவு நேரம் குழந்தை பிறக்காமல் இருக்கிறது. பிரசவ அறையில் இருந்து வந்த சிப்பந்தியிடம் " எதுக்கு விட்டு விட்டு கத்துறாங்க...."

"பிரசவ வலினா அப்படி தான். வலி எடுக்கும் போது கத்துவாங்க. கொஞ்ச வலி தாங்கிட்டு இருப்பாங்க. எங்கள கேள்வி கேட்காம வேல செய்ய விடுங்க" என்று சொல்லி மருத்துவரின் அறையில் இருந்து எதோ எடுக்க சென்றாள்.

நல்லிரவு 12 மணி.

நீண்ட நேரம் மருத்துவமனையில் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டு இருந்தேன். பிரசவம் என் மனைவிக்கு என்றாலும், வலி எனக்கு இருந்தது. ஆறு மணி நேரமாக நடந்திருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. உடல் முழுக்க வேர்வையுமாக இருந்தது. மருத்துவமனையில் இருக்கும் மின் விசிரியில் கீழ் நின்றேன். வேர்வை தனிந்தது. மனதில் படபடப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது.

இரவு 2 மணி

மருத்துவமனையில் அப்படியே இரண்டு மணி நேரம் உடகார்ந்தப்படி தூங்கிவிட்டேன். என் மாமனார் என்னை தட்டி எழுப்பி டீ குடிக்க அழைத்தார். என்னால் எதுவும் சாப்பிட முடியவில்லை. எட்டு மணி நேரம் பிரசவ வலி எடுத்திருக்கிறது. இன்னும் ஏன் குழந்தை பிறக்காமல் இருக்கிறது ? பத்து தடவைக்கு மேல் வெளியே வந்த சிப்பந்தியிடம் கேள்வி கேட்டுவிட்டேன். என்னை பார்த்தாலே முறைத்து கொள்ளும் அளவிற்கு கேள்விகள் கேட்டுயிருக்கிறேன்.

கொஞ்ச நேரத்தில்.... ஒரு சிப்பந்தி வெளியே வந்தாள். நான் மீண்டும் அவளிடம் சென்று கேட்க ஒரு மாதிரியாக இருந்தது. அந்த பெண்ணே சிரித்தப்படி எங்கள் அருகில் வந்தாள். " ஆண் குழந்தை பொறந்திருக்கு....." என்று மருத்துவ சிப்பந்தி சொன்னாள்.

அம்மாவின் கண்களில் ஆனந்த கண்ணீர். என் மாமனாருக்கு சந்தோஷம்.

அம்மா என்னிடம், "உங்க மாமா உனக்கு குழந்தையா பொறந்திருக்காரு" என்று சொன்னார்.

நான் மாமாவுக்கு செய்ய நினைத்தை எல்லாம் என் மகனுக்கு செய்ய வேண்டும். அவன் ஆசைப்பட்டதை எல்லாம் நான் செய்து தர வேண்டும். என் வாழ்க்கையில் நான் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று இருக்கிறேன் என்று மகன் பிறந்த போது புரிந்தது.

அம்மா, சிவகாமி மகனை புதிதாய் பூத்த மல்லிகை பூ போல் ஒவ்வொரு விஷயத்தை பார்த்து பார்த்து செய்தனர். என் மாமாவின் நினைவாக என் மகனுக்கு அவர் பெயரையே வைத்தேன். 'ரகுராம்'.

நாட்கள் உருண்டோடியது. என் மகனுக்கு மூன்று வயது வந்தவுடன் அவனை பள்ளியில் சேர்க்க நினைத்தேன். அம்மா விஜயதசமி அன்று பள்ளி சேர்த்து விடு என்றார். அதில் எனக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும், அம்மாவிடம் இதைப்பற்றி வாதம் செய்திருக்க முடியாது. ஐந்தாறு வருடங்களாக ஏற்றுக் கொண்ட பகுத்தறிவு பேசுகிறேன். ஆனால், அம்மா பிறந்ததில் இருந்து கடவுள் நம்பிக்கை உடையவர். என்னால் எப்படி மாற்ற முடியும். சுயமரியாதைக்காரர்கள் குடும்பத்தில் சந்திக்கும் மிக பெரிய சவால் என்பது என்னைப்போல் இருப்பவர்களுக்கே தெரியும்.

ஜோசப்பின் நண்பர் ஒருவரின் சிபாரிசு மூலம் ரகுவுக்கு பள்ளியில் இடம் கிடைத்தது. அவனை முதல் நாள் பள்ளிக்கு அழைத்து செல்லும் போது பட்டாசு வெடிகள் எல்லாம் வெடித்து சந்தோஷமாக பலர் ஆரவாரம் செய்தனர். இன்று தீபாவளி கூட இல்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"வாத்தியார் முதலமைச்சராயிட்டார்...." கோஷங்கள் பலர் எழுப்பினர்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails