வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, April 11, 2013

ஆட்டிசம் சில புரிதல்கள்

எல்லா புத்தகங்களும் வாசிப்பதற்காக மட்டுமே எழுதப்பட்டதல்ல. எல்லா புத்தகங்களும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு மட்டுமே தயாரிக்க பட்டதுமல்ல. அதையும் தாண்டி நம் சிந்தனையை தூண்டவும், மற்றவர் உணர்வுகளை புரிந்துக் கொள்ள உதவவும் புத்தகங்கள் வெளிவருகிறது. அந்த எண்ணத்தில் எழுதப்பட்டப் புத்தகம் தான் யெஸ்.பாலபாரதி எழுதிய "ஆட்டிசம் சில புரிதல்கள்".

"அந்த குழந்தைக்கு பைத்தியம், மனநிலை சரியில்லை" என்று சுற்றி இருக்கும் சமூகத்தினர் நினைத்தார்கள். அவர்களை ஒதுக்கிவைத்தார்கள். பெற்றோர்கள் மீது இரக்கம் காட்டினார்கள். இப்படி தான் ஆட்டிசம் பற்றி தெரியாமல் பலர் இருந்தோம். ஆனால், இதை எல்லாம் மாற்றி அமைக்க முடியும் என்பதை சமிபத்தில் ஆட்டிச குறைபாடு உள்ளவர்களின் இயல்பான வாழ்க்கை புரிய வைத்திருக்கிறது.

ஹிந்தியில் பிரியங்கா சோப்ரா நடித்த ‘பர்பி’, சமிபத்திய தமிழ்ப்படம் ‘ஹரிதாஸ்’ போன்ற திரைப்படங்களுக்கு ‘ஆட்டிசம்’ பற்றி நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில மக்களுக்கு "ஆட்டிசம்" என்றால் என்ன என்பது தெரிய ஆரம்பித்திருக்கிறது.


ஆனால், ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வது என்பது வேறு; புரிந்துக் கொள்வது வேறு. 'ஆட்டிசம்' பற்றி தெரிந்தவர்களுக்கு இந்த நூல் மிக எளிமையாக புரிதலை தரும். 'ஆட்டிசம்' என்ற சொல்லுக்கு யதார்த்ததிலிருந்து விலகி ஒடுவது என்பது அர்த்தம். இது ஒரு குறைபாடே அன்றி, நோயல்ல என்பதை புரிந்துக் கொள்ள உதவுகிறது.

1943ல் டாக்டர் வியோ கானர் 'ஆட்டிசம்' பற்றி ‘Nervous Child’ என்ற பெயரில் வெளியிட்டார். முதலில் பெற்றோரின் அரவணைப்பு இல்லாத குழந்தைகள் இதில் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், அதே காலக்கட்டத்தில் ஹான்ஸ் ஆஸ்பெர்ஜர் என்பவர் வளர்ந்த குழந்தைகளிடமும் இதே குறைபாடு இருப்பதை கண்டறிந்தார். ( பின்னாளில், பேசக்கூடிய ஆனால் மற்றவர்களோடு பழகுவதில் சிரமம் உடைய குறைபாடுக்கு இவர் பெயரே ( Asperger ) வைத்தனர்).

எதார்த்தத்தில் இருந்து விலகி இருக்கும் குழந்தை எப்படி 'ஆட்டிசம்' என்கின்றோமோ, அதேப் போல் அதற்கான மருத்துவ சிகிச்சையும் வித்தியாசமானது. மருந்து, மாத்திரை, அருவை சிகிச்சை என்று எதானாலும் சரி செய்ய முடியாது. காரணம், 'ஆட்டிசம்' போலவே அதற்கான சிகிச்சையும் முறைகளையும் இதுவென்று சரியாக வரையற்றுக்க படவில்லை. ஒரு குழந்தைக்கு பயனளிக்கும் சிகிச்சை மற்றொரு குழந்தைக்கு பயன் தரும் என்பதில்லை. இதற்கான சிகிச்சை தேர்வை மருத்துவர்களை விட பெற்றோரிடமே அதிகமாக இருக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கான தேவை, ஆசை, வெறுப்பு, சந்தோஷம் எல்லாவற்றையும் புரிந்துக் கொண்டு அதையே தங்கள் குழந்தைக்கு தர வேண்டும். இயல்பான குழந்தைகளை விட ‘ஆட்டிசம்’ குறைபாடு உள்ள குழந்தை மீது பெற்றோர்கள் அதிக அக்கரை செலுத்த வேண்டும்.

முன்பெல்லாம் எதோ ஒரு குழந்தைக்கு தான் குறைபாடு இருக்கிறது என்று இருந்ததை உடைத்து 88 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சமிபத்திய புள்ளி விபரம் சொல்கிறது.

மற்ற குழந்தைகளிடம் ஒதுங்கி இருப்பது, கண்களைப் பார்த்துப் பேசுவதை தவிர்ப்பது, அச்சம், ஆபத்து உணராதது, வித்தியாசமான முறையை திரும்ப திரும்ப செய்வது, அதீதமான பதட்டம், தேவைகளை கையைப் பிடித்து சொல்லுவது, வலியை உணராது இருப்பது என்று ஆட்டிச குறைபாடு குழந்தைகள் நடவடிக்கையில் நாம் தெரிந்துக் கொள்ளலாம்.

நடத்தைக்கான பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சி, கல்விக்கான பயிற்சி, பேச்சுக்கான பயிற்சி என்று அடிப்படை சிகிச்சைகள் ஆட்டிச குழந்தைகளுக்கு இருந்தாலும், பெற்றோர்களின் பங்களிப்பே ஆட்டிசத்தில் இருந்து ஒரு குழந்தையை மீட்டெடுக்க முடியும். பத்திய உணவு பழக்கங்களை சரியாக கொடுக்க வேண்டும். பதட்டம் அடையும் போது கவனத்தை திசை திருப்ப வேண்டும். சரி, தவறு என்று உணர்த்த வேண்டும். தங்கள் செயல்களை அவர்களாகவே செய்து கொள்ள பக்குவப்படுத்த வேண்டும்.

மற்ற குழந்தைகள் போல் வேகமாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வதைப் போல் ஆட்டிச குழந்தைகள் கற்று கொள்வதில் சிரமம் இருக்கும். ஆனால், கற்றுக் கொள்ள முடியும் என்பதை முதலில் பெற்றோர்கள் நம்ப வேண்டும். 

ஒருவரை நிராகரிப்பதம் மூலம் நாம் எதையும் சாதித்து விட முடியாது எங்கிற போது ஆட்டிச குழந்தைகளை ஒதுக்கி என்ன சாதிக்க போகிறோம். அவர்களுக்கு தேவை நாம் அவர்களை புரிந்துக் கொள்வதும், அவர்களுக்கு தகுந்தாற்போல் நாம் செயல்படுவதும் தான்.

ஆட்டிச குறைபாடுள்ளவர்களும் மற்றவர்களைப் போல் இயல்பாக வாழ முடியும் என்பதை ஆட்டிச குழந்தையின் பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

**
ஆட்டிசம் சில புரிதல்கள் 
யெஸ்.பாலபாரதி 
ரூ.50. பக்கங்கள் : 80
பாரதி புத்தகாலயம்

 இணையத்தில் வாங்க….

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails