வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, April 29, 2013

RAW (5) : சொந்த விமானத்தையே எரித்த இந்தியா !

கங்காவை கடத்த வேண்டும் என்பது தான் குரேஷி, அஷ்ரபின் திட்டமாக இருந்தது. இரண்டு பேர் ஒரு பெண்ணை கடத்தப் போவது ரா அத்தியாயத்தில் பெரிய விஷயமாக இருக்காது. ஆனால், கங்கா என்பது பெண் அல்ல. விமானம்.

ஒரு நாட்டில் பெண்கள் கடத்துப்படுவதும், பாலியல் தொல்லையில் அவதைப்படுவதும் அன்றாடம் நடக்கும் சம்பவமாக இருக்கிறது. எத்தனையோ ‘கங்கா’ க்கள் ஏதாவது ஒரு பகுதியில் கடத்தப்படுகிறார்கள். ஆனால், விமானக் கடத்தல் என்பது அப்படி இல்லை. ஒரு நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விஷயம். எங்காவது விமானம் கடத்தப்பட்டால், அந்த நாடு உலக ஊடகங்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். அதில் பயணம் செய்த வெளிநாட்டு பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் தர வேண்டியது இருக்கும். கடத்தப்பட்ட விமானம் மீட்கும் வரை, அந்த நாட்டின் மானம் செய்திதாளில் பறந்துக் கொண்டு இருக்கும்.

30 ஜனவரி, 1970ல் குரேஷியும், அஷ்ரபும் ‘கங்கா’ என்கிற இந்திய போக்கர் 27 விமானத்தை எந்த பிசுரு இல்லாமல் கடத்தினர். கடத்தப்பட்ட விமானம் பாகிஸ்தானில் இருக்கும் லாகூரில் தரையிறக்கினர். இந்தியா பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐக்கு விமானக்கடத்த சதி திட்டத்தில் பங்கு இருப்பதாக கூறியது. ஆனால், பாகிஸ்தான் இதை செய்தவர்கள் JKLFயை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதியது. கடத்தியவர்கள் தங்கள் நிபந்தனைகள் எதுவும் சொல்லவில்லை. இரண்டு நாள் பரப்பரப்பாக இருந்த விமான கடத்தல், பயணிகள் ஒன்றன் பின் ஒன்றாக பிப்ரவரி 1ல் விடுவிக்கப்பட்டனர். கடப்பட்ட விமானமும் கொளுத்தப்பட்டு தீக்கு இறையானது.




இந்திய விமானம் கடத்தப்பட்டு எரிக்கப்பட்டுயிருக்கிறது. இந்திய எப்படி பதில் அடிக் கொடுக்க போகிறது யோசித்து மண்டை உடைத்துக் கொண்டு இருக்க, பிரதமர் இந்திரா காந்தி இந்திய எல்லை மேல் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதித்தார். மீறி பறந்தால் சுட்டு விழ்த்தப்படும் என்று எச்சரித்தார்.

மீண்டும் ஒரு யுத்தம் வரும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு…. ‘இவ்வளவு தானா உங்க டக்கு’ என்று சொல்லும் அளவிற்கு இந்திரா காந்தியின் அறிவிப்பு இருந்தது. கிழக்கு பாகிஸ்தானில் பிரச்சனை நடக்கும் சமயத்தில் இந்திரா காந்தி இந்த அறிவிப்பு எரிச்சலை வரவழைத்தது.

பாகிஸ்தான் இந்தியாவின் ரா இக்கடத்தல் நாடகத்தை நடத்தியதாக கூற, இந்தியா இதை மறுத்தது.காரணம், கடத்திய இரண்டு பேரை கைது செய்து பாகிஸ்தான் விசாரித்ததில், இரண்டு பேரும் கஷ்மீர் போராளிகள் அல்ல ‘ரா ‘ உளவாளிகள் என்று தெரிவந்தது. குரேஷி இந்திய காவல்துறையில் பயணியாற்றியவர். இந்திரா காந்தி லேசுப்பட்ட அம்மையார் அல்ல என்பது ஐ.எஸ்.ஐக்கு புரிந்தது.

கிழக்கு பாகிஸ்தானுடன் பிரச்சனை தலைக்கு மேல் இருக்கும் சமயத்தில் ராவின் இந்த சதி திட்டம் மேலும் அவர்களுக்கு பிரச்சனைக்குள்ளாகியது. அதாவது, மேற்கு பாகிஸ்தான் தனது இராணுவத்தை கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்புவதாக இருந்தால் ஆப்கான், சீனா என்று சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும்.

இந்தியா கிழக்கு பாகிஸ்தான் பகுதி உதவுவதற்காக ஏன் தங்களது விமானத்தை கடத்தி அவர்களே எரிக்க வேண்டும் கேள்வி எழுந்தது. இந்தியாவுக்கு பிரச்சனை தருபவர்கள் யாராக இருந்தாலும் ஐ.எஸ்.ஐ எப்படி வழி காட்டி உதவுமோ, பாகிஸ்தானுக்கு பிரச்சனை தருபவர்கள் யாராக இருந்தாலும் ரா உதவும். அந்த வகையில் இந்தியா வங்க மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தானுக்கு உதவ தீர்மானித்திருந்தது.

அது மட்டுமில்லாமல், கங்கா விமானத்தின் சேவையை இந்தியா நிறுத்தி பல வருடங்கள் ஆனது. யாரும் பயன்படுத்தாமல் இருந்த விமானத்தை, கடத்தப்பட்ட சிறிது நாட்கள் முன்பு தான், மீண்டும் கங்கா விமான சேவையைப் பயன்படுத்தப் போவதாக அறிவித்தார்கள்.

கிழக்கு பாகிஸ்தானுடன் மேற்கு பாகிஸ்தானுக்கு இருக்கும் பிரச்சனையின் வரலாற்று பின்னனியை கொஞ்சம் பார்த்தால், ராவின் திட்டம் எந்த அளவுக்கு துள்ளியமானது என்பது புரியும். இந்திரா காந்தி அரசியல் தொலை நோக்கு பார்வை பாராட்டாமல் இருக்க முடியாது.

வெள்ளையன் இந்தியாவை விட்டு சென்ற பொது இந்தியா – பாகிஸ்தான் என்று இரண்டு நாட்டை உருவாக்கினான். ஆனால், இந்தியாவில் இருந்த ஒற்றுமை பாகிஸ்தானில் இல்லை. கிழக்கு பாகிஸ்தானில் பெங்கால மொழியும், மேற்கு பாகிஸ்தானில் உருது மொழியும் பேசுபவர்கள். மதத்தால் முஸ்லிம்களாக இருந்தாலும், மொழியால் வேறுப்பட்டு இருந்தது அவர்களின் பிரிவுக்கு ஒரு காரணமாக இருந்தது.

1948ல் மார்ச் மாதம், டாக்கா உள்ள கர்ஸான் மன்றத்தில் பட்டமளிப்பு விழாவில் பேசுவதற்காக, பாகிஸ்தானை நிறுவிய ஜின்னா அவர்கள் பேசும் போது, “ பாகிஸ்தான் தேசிய மொழி உருது மட்டும் தான்” என்றார். அப்போது, “இல்லை… இல்லை” என்று எதிர்க்குரல் மக்கள் எழும்பினர். அன்றைய தேதியில் பாகிஸ்தானில் உருது பேசுபவர்களை விட வங்காள மொழி பேசுபவர்கள் தான் அதிகம்.

1949ல் மௌலான பஷானி, கிழக்கு பாகிஸ்தானில் “அவாமி முஸ்லிம் லீக்” என்ற கட்சியை தொடங்கி, ‘வங்காளி மொழி முன்நிறுத்தி’ ஷேக் முஜிபுர் ரஹ்மான் என்பவர் முதல் முதலாக கூட்டம் நடத்தினார்.

அரசியல் ரீதியாக மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தானைக் காட்டிலும் பலன்களை அனுபவித்து வந்தது. மதத்தை காட்டிலும் கிழக்கு - மேற்கு பாகிஸ்தானில் உருது - வங்களாம் மொழி அவர்கள் பிரிவினைக்கு காரணமாக இருந்தது.

1971ம் ஆண்டு மார்ச் மாதத்தில், கிழக்கு பாகிஸ்தான் படையினரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டாக்காவில் விமானம் மூலம் படைகள் இறங்கத் தொடங்கின. முதல் குண்டு வெடித்தது.

கிழக்கு பாகிஸ்தான் படையில் பலர் கைது செய்யப்பட்டார்கள். மேற்கு பாகிஸ்தான் இராணுவம் தீவிரமான அடக்குமுறையில் இறங்கியது.

“முக்தி ஃபௌஜ்” என்ற பெயரில் 10,000 வங்க வீரர்கள் தாய் நாட்டைக் காக்கும் பணியில் இறங்கினார்கள். அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை ரா மேற்க்கொண்டது. ஆயுதங்களும் வழங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிவாரப்பணிகளும் செய்தது.

முக்தி ஃபௌஜ் பாகிஸ்தானுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுப்படும் போது, மேற்கு பாகிஸ்தானில் இருந்த உதவி கிடைக்காமல் இருக்கவும், அப்படி கிடைக்க இருந்தாலும் காலதாமதமாக இருக்கவும் தான் இந்திய உளவுத்துறை ‘கங்கா’ விமான கடத்தல் திட்டத்தை போட்டது என்று கூறப்படுகிறது.

இந்தியாவை எதிர்க்காமல் கிழக்கு பாகிஸ்தானை கட்டுப்படுத்த முடியாது என்று பாகிஸ்தான் முடிவு செய்தது. விளைவு…. டிசம்பர் 3 அன்று, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போரை அறிவித்தது, இந்திய எல்லைக்குள் விமான தாக்குதலை நிகழ்த்தியது. இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த யுத்தத்தின் முடிவில் பாகிஸ்தான் தோல்வியுற்று, “பங்களாதேஷ்” என்ற தேசம் உருவானது நம் பள்ளிப்பாடங்களில் படித்தக் கதை.

பங்களாதேஷ் என்ற தேசம் உருவாகாமல் இருந்திருந்தால், இந்தியா மேற்கு – கிழக்கு பாகிஸ்தான் என்று இரண்டு பக்கம் எதிரிகளை சமாளிக்க வேண்டிய இருந்திருக்கும். இப்போது, வட கிழக்கு இந்திய பகுதியில் பாகிஸ்தான் உடுருவல் பிரச்சனை இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் கிழக்கு பாகிஸ்தானுக்கு உதவியது தான் காரணம். ( இன்று, அந்த பகுதியில் வேறு பிரச்சனைகள் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.)

‘பங்களாதேஷ்’ என்ற தேசம் உருவாக இந்தியா உதவி செய்தது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்தியாவுக்கு ‘உதவியாக ராவின் செயல்பாடு மிகவும் முக்கியமானது என்பது யாராலும் மறுக்க முடியாது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails