வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, February 5, 2010

பாஸ்டர்ட்

'Bastard...'

எந்த வார்த்தையாலும் நான் கோபப்பட மாட்டேன். ஆனால், இந்த ஒரு வார்த்தையில் நான் மட்டுமல்ல ! சராசரி அமைதியான மனிதனை கூட கோபப்பட வைத்துவிடும். இதை என்னிடம் நேரில் யாரவது சொல்லியிருந்தால் அவன் வாய்யை உடைத்திருப்பேன். 'பரதேஸி மகன்'. நான் பார்கிங் செய்த காரில் இந்த வார்த்தையை கிறுக்கி விட்டு சென்று விட்டான்.

புது வண்டி. பார்த்து பார்த்து வாங்கிய மெடலிக் கலர். இப்போது இந்த "தேவ..." வார்த்தை கிறுக்கியதால், குடும்பத்தோடு எடுத்து செல்ல மனம் வரவில்லை. பார்ப்பவர்கள் எல்லாம் கேலியாக கேட்பது ஒரு மாதிரியாக இருந்தது.புது காரை சர்வீஸ் சென்டரில் விட்டேன். கலர் மிகவும் விலையுயர்ந்தது. 20,000 ரூபாய் வரை செல்வாகும் என்று மெக்கானிக் கூறினான்.

என் மாத சம்பளமே அவ்வளவு. எதோ கஷ்டப்பட்டு லோனில் காரை வாங்கினேன். வண்டியை எடுக்கவும் முடியாமல், சரி செய்யவும் முடியாத இக்கட்டான நிலைமை.
இன்ஷூரன்ஸ் க்ளைம் செய்ய முடியுமா என்றேன். உங்கள் இன்ஷூரன்ஸ் கம்பேனியிடம் பேச வேண்டும் என்று சர்விஸ் சென்டரில் கூறினர்.

போன் போட்டு பேசினேன். 'சரவணன்' என்பவன் போன் எடுத்தான். என் வண்டியில் கிறுக்கிய விபரத்தை கூறினேன்.

"பரவாயில்ல சார் ! நீங்க போலீஸ் கம்லேன்ட் கொடுத்துட்டு, அந்த காபி என் கையில கொடுங்க. உங்களுக்கு இன்ஷூரன்ஸ் க்ளைம நா பாத்துக்கிறேன்" என்றான்.

"அப்பாடா... இன்ஷூரன்ஸ் எடுத்தது நல்லதா போச்சு..." என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

என் நண்பன் சேகரை அழைத்துக் கொண்டு அவன் வண்டியில் போலீஸ் நிலையத்திற்கு சென்றேன்.

" கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு. வந்திடுறேன் " நண்பனிடம் சொல்லி உள்ளே சென்றேன்.

வெளியே நிற்கும் போலீஸ்க்காரர் என்னை குற்றவாளியை பார்ப்பது போல் பார்த்தார். நான் பார்த்தும் பார்க்காதது போல் உள்ளே நுழைந்தேன். அங்கு நாற்பது வயது மதிக்க தக்க ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் தான் 'ரைட்டர்' என்று பார்த்தது புரிந்துக் கொண்டேன்.

" சார் ! என் பெயரு சேகர். இந்த ஏரியா தான். நேத்து என் காருல யாரோ கெட்ட வார்த்தையில கிறுக்கி இருக்காங்க..." என்ற கூறினேன்.

திருப்பி போட்ட சட்டி போல் தோப்பையுடன், காதை குடைந்துக் கொண்டு இருந்தார்.

"கெட்ட வார்த்தனானா ?? " அலட்சியமாக கேட்டார்.

அந்த வார்த்தையை சொன்னேன்.

"தேவுடியா எழுதிருக்கான் சொல்லு..." என்று அதே அலட்சிய தோரதனையில் சொன்னார்.
நான் எதுவும் பேசவில்லை. நமக்கு வேலை நடக்க வேண்டும். அதுவரை பேசாமல் இருப்பது நல்லது. போலீஸ் ஸ்டேஷனில் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுவது என்னை மாதிரி சராசரி மனிதனுக்கு நன்மை.

சற்று நேரம் அந்த போலீஸ்க்காரர் யோசித்தார். அப்போது கையில் செல்போனுடன், வாயில் பீடா போட்டுக் கொண்டு பைஜமா, ஜிப்பா போட்டு ஒருவன் சிரித்துக் கோண்டே அமர்ந்தான்.
அதுவரை விரைப்பாக இருந்த ரைட்டர் முகத்தில் புன்னகை தாணவமாடியது.

"வாய்யா... மாரி...! எப்படி இருக்கு தொழிலு..?" என்று அவனை பற்றி விசாரித்தார். இவர்களுக்கு நான் இருப்பது இடஞலாக கூட தெரியவில்லை.

"எதோ போகுது ! ஒரு பார்ட்டி வைடிங்... இந்தா இந்த மாசம் மாமூல்..." என்று கையில் இருந்து 500 ரூயாய் கட்டு டெபிள் மீது வைத்தான்.

" இருப்பா ! ஒரு காபி குடிச்சிட்டு போ.."
" இல்லைய்யா ! அவசரமா போனும். பார்ட்டி போய்டா கஷ்டம். இன்னைக்கு மாமூல தரலன்னா. குட்டிய அள்ளிட்டு போய்டுவ. அதுக்கு தான் வந்தேன்" என்று சொல்லி, போலீஸ்காரர்.... இல்லை போலீஸ்காரனின் பதிலுக்கு காதிருக்காமல் சென்றான்.

வந்தவன் சென்ற பிறகு அந்த டைட்டர் என்னை பார்த்து, " போய்.. அங்க நில்லு. அப்பறம் குப்பிடுறேன் " என்றான்.

பொறுமையாக இருந்தேன்.இங்கு குற்றவாளி விருந்தினர் போல் நடத்தும் போது போலீஸ் மீது எனக்கு இருந்த அபிப்பிராயம் கொஞ்சம் குறைந்தது. அரை மணி நேரமாகியும் எதுவும் நடப்பதாக தெரியவில்லை.

மீண்டும் டைட்டரிடம் சேன்றேன்.

"சார்...!"

" என்னையா..!" சலிப்புடன் கேட்டான்.

" என் வண்டிய யாரோ கிரிக்கிட்டான் சொன்னே ! அந்த விஷயம்ம்ம்ம்ம்ம்"

" அதுக்கு நா வந்து வண்டிய தொடைக்கனுமா..."

" இல்ல சார் ! நீங்க கம்லேன்ட் ஃபைல் பண்ண. அந்த காபி வச்சு இன்ஷூரன்ஸ் க்ளைம் பண்ணுவேன்"

" நாள் முழுக்க ஓட்டுற ஆட்டோக்கார கூட 100 டூபா செல்வு பண்ணி ரிப்பேர் பண்ணுறா. உன்ன மாதிரி ஆளுங்க தான் இன்ஷூரன்ஸ் அது இதுனு எங்க கிட்ட வந்து நீக்குது.."

என் பொறுமை இழந்தேன்.

" ஹலோ ! என்ன செலவு பண்ண முடியல்லனு தான் உங்கள் கிட்ட வந்தேன். அத விட்டு தேவையில்லா பேசாதீங்க..."

" என்னையா திமிரா ! போலீஸ் ஷ்டேஷன்ல குரல ரொம்ப உசத்தி பேசுற..."

" பிண்ண இர்ரெஸ்பான்சிபிலா பதில் சொன்னா "

" கொடுக்க முடியாது உன்னால பண்ண முடிஞ்சத பண்ணு...."

" எங்கையா இன்ஸ்பெக்டர். நா அவர் கிட்ட பேசிக்கிறேன்..."

" உனக்காக அவரு வர மாட்டாரு... போ...."

எனக்கு கோபம் தலைக்கேறியது. டெபிள் மீது இருக்கும் பேப்பர் வைட்டை பார்த்தேன். அவன் மடையை கவனித்தேன். ஒரே அடி.... அவ்வளவு தான்.

இப்படி நினைத்து முடிப்பதற்குள் ஒரு கான்ஸ்டெபிள் வந்து என்னை வெளியே இழுத்து சென்றான்.

" சார் ! விடுங்க... அவன் கிடக்குறான். இன்ஷூரன்ஸ் தானே நா வாங்கி தரேன்."
அரை நாள் முழுக்க இங்கு தேவுடு காத்ததற்கு இப்பது தான் நல்ல எனக்கு சாதகமான வார்த்தை காதில் விழுந்தது.

" ஃபார்மாலட்டிஸ் எல்லாம் பண்ணுவீங்களே....!" என்று சொல்லி தலையை சொறிந்தான்.என்னிடம் எதிர்பார்ப்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது. இவனுக்கு லஞ்சம் கொடுப்பதை விட என் அவன் கையில் இருந்த தூப்பாக்கி முனையில் இருக்கும் கத்தியை முறைத்தேன். என் உடம்பு சுடெரியது போல் இருந்தது. கத்தி எடுத்து ஒரே சதக்............!

நினைப்பதற்குள் என் நண்பன் என்னை வந்து என்னை இழுத்து சென்றான். வண்டியை என் சொந்த பணத்தில் சரி செய்து விடுவேன். இருந்தாலும், என் கோபத்தை எப்படியாவது காட்டியாக வேண்டும்.

நடக்கும் போதும் ஒரு கல் என் காலை தடுத்தது. பக்கத்தில் போலீஸ் ஹூன்டாய் கார் இருந்தது. இந்த முறை யோசிக்கவே இல்லை. அதே கெட்ட வார்த்தையை வண்டியில் எழுதிவிட்ட பிறகு தான் என் கோபம் கொஞ்சம் தனிந்தது.

'பாஸ்டர்ட்'

5 comments:

Cable சங்கர் said...

:)

செந்தில் நாதன் Senthil Nathan said...

:) அருமை

ஒரு எடத்துல கூட தொய்வு இல்லை...ரெம்ப நேர்த்தியாக சீராக கதை செல்கிறது...

//வண்டியை என் சொந்த பணத்தில் செலவு செய்து விடுவேன்//

சரி செய்து விடுவேன்?

Sharah said...

Lovely Presentation

Ashok D said...

:)

மதுரை சரவணன் said...

nalla kathai . police station pona anupavam kathaiyaaka pesutho. veru veruppaaka pokirathu.

LinkWithin

Related Posts with Thumbnails