வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, February 21, 2017

அருண் சிதம்பரமும் நானும் - 2

ஆரம்பத்தில், படம் எடுக்கப் போகிறேன் என்று அருண் சொல்லும் போது “இது உனக்கு தேவையா?” என்று அவனிடம் கூறியப் போது, அவன் “பிடிக்காத வேலையை இதுவரைக்கும் சரியா செஞ்சிருக்கிறேன். எனக்கு பிடிச்ச சினிமாவ சரியா பண்ணுவேன் நம்பிக்கை இருக்கு” என்றான். 

 

அந்த நம்பிக்கை “கனவு வாரியம்” ட்ரெய்லரைப் பார்க்கும் போது புரிந்தது. அவனுக்கு சரியான இடம் சினிமா தான். நாயகி, அவனை தவிர்த்து படத்தில் அனைவரும் பிரபல முகங்கள். ட்ரெய்லரில் வரும் இரண்டு மூன்று வசனம் மிகவும் கவர்ந்தது. நிச்சயம் ஒரு புது இயக்குனரின் படம் என்று சொன்னால் மட்டுமே தெரியும். 

படத்தை விரைவாக எடுத்து முடித்தாலும், ஒரு தயாரிப்பாளராக வெளியிடுவதில் மிகவும் சிரமப்பட்டான். கிட்டத்தட்ட ஒரு வருடம் மேல் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. 

இன்றைய தேதியில் படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. ஆனால், வெளியிடுவது எவ்வளவு பெரிய சிரமம் என்று அருணின் “கனவு வாரியம்” ஒரு உதாரணம். படம் எடுத்த நாட்களை விட அதை வெளியிட பல நாட்கள் உழைக்க வேண்டியதாக இருந்தது. 

அவனது உழைப்பை அங்கிகாரம் இந்தியாவில் கிடைக்கவில்லை. வெளிநாட்டில் தான் கிடைத்தது. உலக அங்கிகாரமான “ரெமி” விருது கிடைத்தது. தொடர்ந்து பல திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஒரு பெரிய வெளிநாட்டு நிறுவனம் படத்தை வாங்க முன் வந்தது. அந்த நிறுவனம் ஹாலிவுட் வார்னர் பிரதர்ஸ் !! 

பல ஆங்கிலப்படங்களை உலகம் முழுக்க வெளியிட்டவர்கள், முதல் முறையாக தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறார்கள். அதுவும் அருண் சிதம்பரம் இயக்கிய “கனவு வாரியம்” படத்தின் மூலம். 

அடுத்த வாரம் 24ஆம் தேதி படம் வெளியாகப் போகிறது. மிகுந்த ஆவலோடு இருக்கிறேன். 



இந்தப்படத்தில் பாடலாசிரியர் அருண் சிதம்பரம் தான் !! 

“இவன் கிறுக்கன் தான்” பாடல் எப்படி காட்சிப்படுத்தியிருப்பான் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. படப்பிடிப்பின் போதே இந்த பாடலை எனக்கு போட்டு காட்டினான். பாடலின் இசையை விட வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பாடல் கனவுக்கு பின்னால் ஓடுபவர்களின் தேசிய கீதமாக இருக்கும். நான் கல்லூரி நாட்களில் கேட்டு பழகிய உத்வேகமாக அருண் வரிகளை “கிறுக்கன்” பாடலில் கேட்டேன். 

”கல்லா மண்ணா” பாடல் கிராமப் பிள்ளைகளின் விளையாட்டை அழகாகச் சொல்கிறது. ’வெயிலோடு விளையாடி’ பாடலுக்கு பிறகு கிராமியப் பாலியத்தை அழகாகச் சொல்லும் பாடல்.

 “நீ பாதி”  என்ற காதல் பாடலும் இருக்கிறது. 

ஒரு பாடலாசிரியராக அருண் சிதம்பரம் வெற்றிப் பெற்றிருக்கிறான். 

அதேப் போல், ”கனவு வாரியம்” படம் கண்டிப்பாக வெற்றி பெறும். அதன் வெற்றி திரையுலகில் நுழையும் பல புதியவர்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. 

வாழ்த்துகள் !!

1 comment:

ஆரூர் பாஸ்கர் said...

இயக்குநருக்கு வாழ்த்துகள்.

LinkWithin

Related Posts with Thumbnails