வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, April 5, 2016

ஜெய்பீம் காம்ரேட் - ஆவணப்படம்

ஆனந்த் பட்வர்தனின் மிக முக்கியமான ஆவணப்படம். 15 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு, தொகுக்கப்பட ஆவணப்படம் என்று சொல்லலாம். 

ஜூலை 11, 1997 

ராமாபாய் நகரில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தற்காக தலித் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தை தடுக்க வந்த காவல்துறையினர் சரமாரியாக தூப்பாக்கி சூடு நடத்தியது. அதில் பத்து பேர் இறந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்தனர். 

காவல்துறை தரப்பில் காவலர்களின் டான்க்கர் லாரியை தாக்க வந்ததால் தற்காப்புக்காக தூப்பாக்கி சூடு நடத்தியதாக கூறினர். ஆனால், இறந்தவர்களின் ஒருவர் சடலம் கூட டான்க்கர் லாரி அருகில் இல்லை. அதற்கு சாட்சியாக பெட்ரோல் பங்க்கில் இருப்பவரின் வீடியோ கவரேஜ் காட்டப்படுகிறது.

தூப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிக்கு இடமாற்றம் மட்டுமே தண்டனையாக கொடுக்கப்பட்டது. சிவ சேனா போன்ற இந்து கட்சிகள் தங்களின் ஆதிக்கத்தனமான பேச்சை வெளிப்படுத்தும் காட்சிகளை இடம்பெறுகிறது.



அடுத்து, இரண்டாம் பாகத்தில் கைர்லன்ஜி கிராமத்தில் தலித் குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை ’குன்பி’ என்ற ஆதிக்க சமூகத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்களின் சடலமும் நிர்வாணமாய் கிடக்கிறது. ஆனால், அவர்கள் கற்பழிக்கப்படவில்லை என்று காவல் அதிகாரிகள் சொல்கின்றனர். அதற்கான பிரேதப் பரிசோதனையும் காவலர்கள் நடத்தவில்லை. 

அடுத்து, அம்பேத்கர் எழுச்சி பாடல்கள் பாடும் ’கபீர் கலா மன்ச்’ பற்றியது. அந்த குழுவினருக்கும் நக்ஸல்பாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தேடுதல் நடத்தப்படுகிறது. தங்களை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்பதை காவல்துறையினர் குறியாக இருக்கிறது என்று ’கபீர் கலா மன்ச்’ கூறுகிறார்கள்.

எல்லாவற்றிருக்கும் உச்சக்கட்டமாக, எந்த ராமப்பாய் நகரில் தூப்பாக்கிச் சூடு நடந்ததோ, அதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு ஆதரவாக இருந்த பா.ஜ.கவினரோடு தங்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பாதிக்கப்பட்டவர்களின் தலைவரும் பிரச்சாரம் செய்கிறார். 

இந்திய அரசியல் சட்டப்படி தலித் மக்களை ’இந்துக்கள்’ என்று சொல்கிறது. இந்துத்துவத்தினர் எல்லோரையும் இணைப்பது தான் தங்கள் லட்சியம் என்று சொல்கிறார்கள். 

 ஆனால், அவர்களே தலித் மக்களுக்கு எதிராக தொடரும் வன்முறைக்கு காரணமாக இருக்கிறார்கள் என்பதை இந்த ஆவணப்படம் காட்டுகிறது.

1 comment:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

ஜெய்பீம் ஆவணப்படம் கிடைக்கக்கூடிய விவரம் அல்லது யூட்யூப் இணைப்பும் தந்திருந்தால் பயனுடையதாக இருந்திருக்கும். இயலுமெனில் தாருங்கள். நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails