வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, January 17, 2014

ராயல்டி பிரச்சனை !

ஒரு விஷயத்தை தெளிப்படுத்திவிடுகிறேன். ’தி இந்து’ வில் வந்திருப்பது மகா மொக்கையான கட்டுரை. பதிப்பாளர் - எழுத்தாளர் பிரிச்சனை இரண்டு பக்கம் சரியாக அலச வேண்டும். இந்து கட்டுரை 1% கூட செய்யவில்லை. அந்த கட்டுரையை தூக்கிப் போட்டுவிட்டு பிரச்சனைக்கு வருவோம்.

இன்றைய சூழ்நிலையில் புத்தகம் கொண்டு வருவது மிக பெரிய விஷயமில்லை. அதை சரியாக சந்தைப்படுத்தவும், வாசகர்களின் நம்பத்தன்மையை பெருவது தான் மிகப் பெரிய விஷயம். அதற்கு பதிப்பாளரின் உதவித் தேவை. நல்ல புத்தக கொண்டு வர பதிப்பாளருக்கு எழுத்தாளர் உதவி தேவை.

புத்தகங்களுக்கு ராயல்டி பிரச்சனை அனைத்து பதிப்பகம் - எழுத்தாளர் மத்தியில் நடந்துக் கொண்டு இருக்கும் விஷயம். இரண்டு பக்கமும் பரஸ்பர நம்பத் தன்மை வரும் வரையில் ஓயப்போவதில்லை.

எழுத்தாளர் தரப்பில் பலர் பேசிவிட்டார்கள். பதிப்பாளர் சரியான புத்தக விற்பனை எண்ணிக்கை கொடுப்பதில்லை, ராயல்டி கொடுப்பதில்லை, முதல் பதிப்பு என்று தொடர்ந்து இரண்டு, மூன்று வருடம் வெளியிட்டு வருகிறார்கள். ஒரு எழுத்தாளனாக எனக்கு இந்த பாதிப்பு இருக்கிறது.

என்னுடைய முதல் சிறுகதை தொகுப்பு ‘நடைபாதை’(2008) வனிதா பதிப்பகம் வெளியிட்டது. இன்று வரை ஒரு பைசா கூட ராயல்டி தரவில்லை. அந்த புத்தகத்திற்கு அரசு நூலக ஆணையில் 1000 பிரதிகள் சென்ற விபரம் எனக்கு தெரியும்.

 ராயல்டி பற்றி மறை முகமாக கேட்ட போது, பிரதிகள் இன்னும் விற்பனையாகவில்லை என்றனர்.

“எத்தனை பிரதிகள் விற்பனையாகவில்லை” என்று கேட்டேன்.

“400” என்றனர்.

“ நானே வாங்கிக் கொள்கிறேன். கழிவு விலையை போட்டுக் கொடுங்கள்” என்றேன்.

அத்தனை பிரதிகளை ரூ.7000 வாங்கினேன். நானே அதை விற்பனை செய்ததில் ரூ.8240 கிடைத்தது. கையில் நான்கு, ஐந்து பிரதிகள் மட்டுமே இருக்கிறது. முதலீட்டு போக ரூ.1240 என்னுடைய ராயல்டி என்று நான் நினைத்துக் கொண்டேன்.

வனிதா பதிப்பகம் மீது இன்று வரை எனக்கு எந்த வருத்தமோ, கோபமோ இல்லை. இப்போதும், மயிலைவேலன் அவர்களை பார்த்தால் நன்றாக பேசுவேன். அதன்பின், நான் எழுதிய புத்தகத்தை அவருக்கு கொடுக்கவில்லை. நானே புத்தகம் போட “நாகரத்னா பதிப்பகம்” தொடங்கினேன். அப்போது தான் பதிப்பாளர் கஷ்டம் எனக்கு புரிந்தது.

நான் பதிப்பாளராகி புத்தக சந்தையை தெரிந்துக் கொண்டேன். பபாஸி உறுப்பினர், நூலக ஆணை போன்ற சில விஷயங்கள் மட்டும் இன்று வரை எனக்கு பிடிப்படவில்லை. நேர்மையற்ற முறையில் என்னை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அதனால், நான் பதிப்பு தொழிலில் இருந்து இப்போது விலகியிருக்கிறேன்.

”பதிப்பாளர்கள் ராயல்டி வழங்கவில்லை” என்று கூறும் எழுத்தாளருகளுக்கு ஒரு விஷயம் சொல்லிக் கொள்கிறேன். உங்களின் புத்தகத்தை நீங்களே போட்டுப் பாருங்கள். அப்போது தெரியும் பதிப்பாளர் தரப்பில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள்.

புத்தகத்தோடு எழுத்தாளரின் பெயரையும் சேர்த்து தான் பதிப்பகம் பிரமோட் செய்கிறார்கள். எழுத்தாளனை பிராண்டாக மாற்றும் பதிப்பகத்திற்கு எழுத்தாளன் எதுவும் தருவதில்லை.

"சாரு ’ராஸலீலா’ நன்றாக விற்பனையானது எனக்கு ராயல்டி தரவில்லை” என்கிறார். அவரின் மற்ற புத்தகங்கள் விற்பனையாகாமல் நஷ்டத்தை யார் ஏற்றுக் கொள்வார். உயிர்மை “சாரு” வை பிராண்டாக மாற்றியதை கிழக்கு பயன்படுத்தியது. இது உதாரணம் மட்டுமே. உடனே, நான் Manushya Puthiran க்கு வக்காளத்து வாங்குகிறேன் என்று திசைத்திருப்ப வேண்டாம்.

புரியும் படி சொல்வதென்றால் பதிப்பாளர் X என்பவர் எழுத்தாளர் Y என்பவரின் இரண்டு புத்தகம் போட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புத்தகம் லாபம், இன்னொரு புத்தகம் நஷ்டம். பதிப்பாளர் எழுத்தாளருக்கு ராயல்டி வழங்கலாமா என்பதை நீங்கள் தான் நேர்மையாக சொல்லுங்கள்.

என்னளவில் எனக்கு வழங்கப்படும் 7.5% - 10% ராயல்டி சரிதான். ஒரு வேளை நாளை பதிப்பாளரோடு பிரச்சனையென்றால் என் புத்தகங்களை வாங்கிக் கொண்டு, களத்தில் இறங்கி விற்பனை செய்ய எனக்கு தெரியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. புத்தகம் விற்பனை செய்வதில் “எழுத்தாளன்” என்ற ஈகோ எனக்கு என்றும் இருந்ததில்லை.

மற்ற எழுத்தாளர்களையும் இதையே செய்யுங்கள் என்று நான் சொல்லவில்லை. நீங்கள் உங்கள் பிரச்சனை பேசும் முன்பு எதிர் தரப்பில் இருக்கும் பிரச்சனையைப் புரிந்துக் கொள்ளுங்கள் என்று தான் கேட்கிறேன்.

ஒரு பதிப்பகம் நடத்த அலுவலகம், அச்சு செலவு, வேலை ஆட்களுக்கு சம்பளம், புத்தகங்கள் எடுத்து வரும் வண்டி செலவு, புத்தகக் கண்காட்சிக்கு ஆகும் செலவு, வெளியூரில் புத்தகக் கண்காட்சி என்றால் தங்கும் அறை, சாப்பாட்டு செலவு என்று பதிப்பகங்கத்திற்கு ஏகப்பட்ட செலவுகள் இருக்கிறது. இத்தனை செலவுகளும் புத்தக விற்பனையில் வருவதை ஈடுக்கட்ட வேண்டும்.

அதற்காக பதிப்பகங்கள் எல்லாம் உத்தமப் புத்திரர்கள் என்று சொல்லவில்லை. இன்று, புத்தகத்துறை வளராமல் இருப்பதற்கு முன்னனி பதிப்பகங்கள் என்று மார்தட்டிக் கொள்பவர்கள் தான் காரணம். வாசகர்களுக்கு தேவையான நூல்களை போடுவதில்லை, தவறான நூல்களை லஞ்சம் கொடுத்து நூலகத்திற்கு அனுப்புவது, வாசகர்களின் கருத்துக்கு மதிப்பு, புது வாசகர்களை உருவாக்காமல் இருப்பது போன்ற விஷயங்களில் தொலைநோக்கு பார்வையில்லாமல் செயல்படுகிறார்கள்.

நாளை, புத்தகத்துறை அழிந்தால் பதிப்பாளர்கள் தான் காரணமாக இருக்க முடியும். வாசகர்கள் அல்ல.

இதை இன்னும் முழுமையாக நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால், பத்து வருடம் முன் தொடங்கிய பதிப்பகத்தில் இருந்து பேசக் கூடாது. நூறு வருடம், பவள விழா கொண்டாடிய பதிப்பகத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

ஏன்னென்றால் இந்த பிரச்சனைக்கு ஆணிவேர் அங்கு இருந்து தான் தொடங்குகிறது.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு பாடம்... நன்றி..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எழுத்தாளர் என்ற கோணத்தில் மட்டுமல்லாது, பதிப்பாளரின் கஷ்டங்களையும் நஷ்டங்களையும் உழைப்பையும் இங்கு சொல்லி நடுநிலையோடு கருத்தைப் பதிவு செய்துள்ளீர்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails