வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, January 2, 2014

கர்ணனின் கவசம் - கே.என்.சிவராமன்

சுவாரஸ்யம் மட்டுமே குறிக்கோளாக மனதில் வைத்து எழுதப்பட்ட நாவல்.

மகாபாரத பாத்திரங்களோடு சரித்திர பாத்திரங்கள் சேர்ந்து இந்த நாவலில் வருகிறார்கள். இது உண்மையா ? பொய்யா ? என்ற கேள்வி கேட்டாமல் கடந்து விடுகிறோம்.

இது ஒரு Magical Fiction வகை நாவல் என்பதால் கிருஷ்ணரும் துணை பாத்திரமாக வருகிறார். பகுத்தறிவுக்கு விடைக் கொடுத்து விட்டு லாஜிக் பார்க்காமல் வாசிக்கவும்.

எல்லா பாத்திரங்களும் கர்ணனின் கவசத்தை நோக்கி தான் பயணிக்கிறது. இதில் யார் நல்லவர் கெட்டவர் என்பதை பிரிப்பது கடினமான விஷயம். எல்லா பாத்திரங்களுமே சமமாக கையாளப்படுவதால் இவர் தான் நாயகன், நாயகி என்று சொல்லிவிட முடியவில்லை. தாராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், அவர் தான் நாவலில் நாயகி என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யார் என்ன சொன்னாலும் கேட்கும் பாத்திரமாகவே வருகிறார்.

இந்த நாவலில் அநியாயத்திற்கு அதிக பாத்திரங்கள். கொஞ்சமாவது மகாபாரதம் தெரிந்தவர்களால் மட்டுமே பாத்திரங்களை புரிந்துக் கொள்ள முடியும்.

“போதிதர்மரோட ஒண்ணு விட்ட தம்பியோட பரம்பரைல வந்தவன் தான் வஜ்ஜிரபாகு. போதிதர்மரோட பங்காளிங்க என் மகன் கர்ணன் சேர்ந்து வித்தை கத்துக்கிட்டாங்க…” – இது போன்ற பக்கத்துக்கு ஒரு முறையாவது சரித்திரத்தையோ, மகாபாரதத்தையோ சொல்லுவது கொஞ்சம் அலுப்புட்டுகிறது.

பல பாத்திரங்கள் ”இங்கு தான் இருக்க வேண்டும்”, “இப்படி தான் நினைக்கிறேன்” என்ற அடிப்படையிலே அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறார்கள். அவர்களுக்கான புத்திசாலித் தனம் தெரியவில்லை. ஒரு இடத்தில் மட்டும் ஃபிபொனசி தியரி மூலம் தடையை கடப்பதை கதாபாத்திரங்கள் ஆதித்யா புத்திசாலி தனம் தெரிகிறது. மற்ற இடங்களில் எல்லாம் மந்திரம், தந்திரம் தான் காப்பாற்றுகிறது.

ஒரு முடிச்சு அவிழ்ந்தது என்று நினைக்கும் போது, ‘இல்லை’ அது ஒரு Backup என்று கூறி மீண்டும் அந்த முடிச்சு இருப்பதாக சொல்கிறார். சுவாரஸ்யத்திற்காக நாவலில் முடிச்சுகள் இருப்பது சிறப்பு தான். ஆனால், பக்கத்துக்கு பக்கம் ஏகப்பட்ட முடிச்சுகள். படித்து முடித்த பிறகு அத்தனை முடிச்சுகளும் அவிழ்ந்ததா என்று தெரியவில்லை.

இந்த நாவலை முடிக்கும் போது அவசர அவசரமாக முடித்திருக்கிறாரோ என்ற உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.

”இன்றைய தேவை தமிழில் ஒரு டேன் பிரவுன்” என்று ஜெயமோகன் கூறியது போல், கே.என்.சிவராமன் தமிழில் டேன் பிரவுனாக வளம் வருவார் என்பதற்கு இந்த நாவல் அச்சாராம். வாழ்த்துக்கள் சிவராமன் !!!

இணையத்தில் வாங்க....
http://www.wecanshopping.com/products/கர்ணனின்-கவசம்.html

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

படிக்க வேண்டும் ஆவலைத் தூண்டி விட்டது விமர்சனம்...! நன்றி...

LinkWithin

Related Posts with Thumbnails