வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, January 13, 2014

பெரியார் ரசிகன் - சில எதிர்வினைகள்

மூன்று மாதம் முன்பு டிஸ்கவரி புக் பேலஸில் ஒரு மாதப் பத்திரிக்கை விஷயமாகத் தான் அருள் செல்வன் என்பவரை சந்தித்தேன். ஒரு மணி நேரம் மேல் பேசினோம்.



நாங்கள் பேசிய பதினைந்தாவது நிமிடத்தில் இருந்து மாத பத்திரிக்கை பற்றி மறந்து திராவிடத்தைப் பற்றியும், அதன் வளர்ச்சி, இப்போதைய பார்வை போன்ற பொது விஷயங்களை விவாதிக்க தொடங்கினோம்.

இந்த இடத்தில் அருள் செல்வனின் பின்னனி சொல்லிவிடுகிறேன். அவரின் தாத்தா சிவாஜி நடித்த “பராசக்தி” பாடல் எழுதியவர். திராவிட பின்னனியில் இருந்து வந்தவர்.



பேசிக் கொண்டு இருக்கும் போது எனது “பெரியார் ரசிகன்” நாவலைப் பற்றி பேசினார். எனக்கு வியப்பாக இருந்தது. நாவல் வந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. அடுத்த அடுத்த நூல்கள் எழுதும் வேலையில் இருந்ததால் “பெரியார் ரசிகன்” நாவலுக்கான வெளியிட்டு விழாக் வைக்கவில்லை. முகப் புத்தகத்தில் ஒரு ஸ்டேடஸ் மட்டும் போட்டேன். கொஞ்ச நாட்களுக்கு பிரோபைல் போட்டோவாக அட்டைப்படத்தை வைத்திருந்தேன். அருள் செல்வன் முகப் புத்தகத்தில் இல்லை.

பேசும் போது, “ கடவுள் மறுப்பு கொள்கை ஏற்றுக் கொள்வது என்பது எளிதான விஷயமில்லை. பெற்றோர்கள், உறவினர்கள் எல்லோரையும் பகைத்துக் கொள்வதற்கு சமம். மனதில் மிக பெரிய போராட்டம் நடத்திய பிறகே கடவுள் மறுப்பை பேசுவதற்கு துணிச்சல் வரும். உங்கள் நாவலில் சரியாக கையாண்டு இருக்கிறீர்கள்” என்றார்.

”பெரியார் ரசிகன்” என்று தலைப்பு வைத்ததும் பெரியாரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு அல்லது குறிப்பு எழுதியிருப்பதாக பலர் நினைத்தார்கள். இது ”நாவல்” என்று சொல்லுவதற்காகவே வெளியிட்டு விழா வைக்க வேண்டும் என்று இருந்தேன். பல வேலைகளின் நடுவில் என்னால் அதைப் பற்றி சிந்திக்க முடியவில்லை. எந்த விளம்பரமும் இல்லாமல் ஒரு நாவலை வாசித்து கருத்து கூறுவது மிக பெரிய விஷயம்.

அதன் பிறகு மாத பத்திரிக்கை தொடங்கும் முயற்சி கைவிடப்பட்டது. அவரை தொடர்பு கொள்ளவில்லை. ஆனால், அவரின் விமர்சனம் எனக்கு முக்கியமாக இருந்தது.

அன்று அவரிடம் பேசும் போது அண்ணாவின் அரசியல் குருவான பி.பாலசுப்பிரமணியனை பற்றி எழுதிக் கொண்டு இருப்பதாகவும், விரைவில் விகடன் பிரசுர வெளியிடாக வரப் போகிறது என்று கூறினார்.


இந்த புத்தகக் கண்காட்சியில் விகடன் அரங்கில் அவர் எழுதிய “அண்ணாவின் அரசியல் குரு” புத்தகம் பார்த்தப் போது அவரின் விமர்சனமும் நினைவு வந்தது.

யுவகிருஷ்ணாவும் “பெரியார் ரசிகன்” நாவலை படித்து “முதல் நாவல் போல் இல்லை. விரைவில் உங்கள் நாவலைப் பற்றி விமர்சனம் எழுதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த வருடம் நான் எழுதிய ஐந்து புத்தகங்கள் வந்திருந்தாலும், படைப்பிலக்கியம் சார்ந்து வந்த ஒரே நூல் “பெரியார் ரசிகன்” என்பதால் எனக்கு இந்த நூல் மிகவும் முக்கியமானது.

சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம் : 

நிவேதிதா புத்தகப் பூங்கா - 671
டிஸ்கவரி புக் பேலஸ் - 307- 308, 353-354 

இணையத்தில் வாங்க... 

1 comment:

Philosophy Prabhakaran said...

'பெரியார் ரசிகன்' என்ற உங்கள் புத்தகம் நாவல் என்று எனக்கு இப்போது தான் தெரியும்... வாங்க முயல்கிறேன்...

LinkWithin

Related Posts with Thumbnails